நிரந்தரமில்லை என்று தெரிந்திருந்தும்
அதனையே நினைத்துக்கொண்டு
நெருங்கிச் செல்கின்றோம்…

ஒரு கால கட்டத்தில்
அது நம்மை விட்டுச்செல்லும்போது
கண்ணீர் சொட்டுகின்றோம்….

நம்பிக்கை என்ற சொல்லோடு கூட
சம்பந்தம் இல்லாதவர்கள் மீது
நம்பிக்கை வைக்கின்றோம்…

பின்பு துரோகி என்று
பட்டமும் சூட்டுகிறோம்….

எவரைப் பற்றி நாம்
அதிகம் சிந்திக்கின்றோமோ…
அவரால்தான் நம்
பாதி வாழ்க்கை பாழடைகிறது…

இந்த உண்மையை அறிந்திருந்தும்
நாம் அதை ஏற்பதே இல்லை..

வார்த்தையில் அழகாய்த் தெரிந்தவர் எல்லாம்
வாழ்க்கையில் அழகாய்த் தெரிவதில்லை…
ஆனாலும் அவரோடுதான் வாழ நினைக்கிறோம்…

இப்படி எத்தனை காலம்தான்
ஏமாறப் போகின்றோமோ…

சிந்தனை செய்யும் சக்தி இருந்தும்
அதைச் செலவழிப்பதில் கஞ்சத்தனம்..
கொஞ்சம் அதிகம்தான்…

காதலுக்குச் சொந்தமான தனிமை…
குழந்தைகளுக்குச் சொந்தமான குறும்பு…
ஏழைகளுக்குச் சொந்தமான பசி..
மனிதருக்கு மட்டுமே
சொந்தமான மனமாற்றம்…

இந்த மனம் என்ற ஒன்று
மாறாமல் இருந்திருந்தால் மனித இனம்
எப்போதோ மாண்டு போயிருக்கும்…

என்ன செய்வது இப்போதெல்லாம்
ஒரு மனிதரோடு பழகிப்பார்த்தாலே
ஆயிரம் மிருகங்களோடு பழகிய
அனுபவம் வருகிறது.

– ஷேக் நிஸ்றா


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.