குடும்பத்தின் குலமகளே
கதம்பத்தின் திருமகளே
பெண்ணியத்தின் நிறமகளே
கண்ணியத்தின் நிறைமகளே
தாய்மையின் கருமகளே
வாய்மையின் உருமகளே
பெண்மையின் பெருமகளே
தண்மையின் உறைமகளே
குழந்தையின் கருமகளே
சலங்கையின் ஒலிமகளே
கணவனின் மெய்மகளே
கருத்தினில் மறைமகளே
விழிகளின் கயல்மகளே
விருந்துகளின் சுவைமகளே
விம்பத்தின் நிலமகளே
விருட்சத்தில் நிழல்மகளே
உலகத்தின் மென்மலரே
உயிர்களின் மூச்சிவளே
வாழ்க வாழ்க மகளீரே
வாழ்த்துகின்றேன் மனங்குளிர…

1 Comment

பழனியாண்டி கனகராஜா · மார்ச் 8, 2020 at 15 h 58 min

உங்களின் அடிமனதின் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

புதுக் கவிதை

காதல் கவித்துளிகள்

 

காதல் கவித்துளிகள்

பிப்ரவரி 2022 இதழுடன் இணைப்பு

காதல்

காதல் என்று சொல்லும் போதே மனத்துள் ஒரு உற்சாகம் பிறக்கும். ஒரு உத்வேகத்தைத் தரும் மந்திரச்சொல் காதல்.

 » Read more about: காதல் கவித்துளிகள்  »

புதுக் கவிதை

யாருக்காக…

போலியான மனிதர்களோடு வாழ்ந்து பழக்கப்பட்டதனால் உண்மையானவர்கள் யாரென்று கூட உன்னால் இனங்காண முடியாமலே போய் விடுகிறது நீ யாருக்காக புன்னகைத்துக் கொண்டிருந்தாயோ அவர்கள் யாருக்காகவோ வாழப் போய் விட்டார்கள்