வள்ளுவர் குறளும், வாரியார் வாக்கும்!

எனது இளமைக்காலங்களில் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவுகளை விரும்பிக் கேட்பதுண்டு. அவரது அழகியப் பேச்சும் பேச்சின் செறிவும் எனக்குப் பிடிக்கும். அப்படியான என் மனம் கவர்ந்த வாரியார் வாக்கும் வள்ளுவர் குறளும் என்னை வியப்பிலாழ்த்தி நூலைப் படிக்க வைத்தது. நூலின் தலைப்பிற்கேற்ப பொருத்தமான விளக்கங்களை சுவைபட விவரித்து வியக்கத்தக்க அளவுக்கு மிக சிறப்பாக வாரியாரின் சொற்பொழிவு நீதிகதைகளை பொருத்தமாக இணைத்துக் குறளுக்கு மிகப்பொருத்தமான விளக்கத்தையும் சுவைபட மிக சுருக்கமாக Read more

பெய்யென பெய்யும் மழை

அரை நூற்றாண்டுக்கும் முன்பேத் தமிழிலக்கிய அரங்குகளுக்கு அறிமுகமாகி மரபுக்கவிதை, இலக்கியச் சொற்பொழிகள், பட்டிமண்டபங்கள், வழக்காடு மன்றங்கள், சொற்பொழிவுகள், கட்டுரைகள், திறனாய்வு உதவி, எனப் பலதுறைகளில் தன் சுவடுகளை அழுத்தமாய்ப் பதித்துத் தொடருந் தமிழறிஞர் தங்க அன்புவல்லி அம்மாவுக்கு வணக்கம் சொல்லி மகிழ்ந்து வாழ்த்த வேண்டித் தொடங்குகிறேன். எதையும் தொடங்கச் சிறந்த இடம் முதன்முதல் தொடங்கிய இடம்தான் என்பர். (Let us begin at the very beginning; a very Read more

மன்றல் வாழ்த்து மடல்

திருமணச்செல்வங்கள் நம்பி : ஏ.டி.வரதராசன்  நங்கை : கலைச்செல்வி திருமண நன்னாள் : 09.04.2020 மங்கல மென்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறென்ற – தொன்மைத் திருக்குறள் போல் செவ்வியராய் வாழ்க திருப்பூட்டு இந்நாள் சிறந்து! தோழர் வரதராசன் தோழி கலைச்செல்வியுடன் வாழ்வாங்கு வாழ்கவென நெஞ்சுவந்து வாழ்த்துறைத்தோம்.. வாழையடி வாழையென வாழியவே பல்லாண்டு சூழும் நலங்களெல்லாம் துய்த்து பெறற்கரிய பேறெல்லாம் பெற்று வாழ்க திறல்சேர் மகப்பெறுக செவ்வை – அறங்காத்து Read more

துளிப்பா

சொல்லித்தந்தப் பாடம் பதியவில்லை மனதில் ஆசிரியை முகம் ! எங்கள் வீட்டு தோட்டத்தில் மலராத மொட்டு முதிர்கன்னி. வீட்டுவாசல் வந்து முழம்போட்டுத் தருகிறாள் பூக்காரி குறைந்த கூலி அவன் நிறைவடைகிறான் முதலாளி. சிக்கிக்கொண்டேன் அவளிடம் கசக்கிப் பிழிகிறாள் மனைவி வாசமில்லாமல் நிற்கிறாள் மனைவி கையில் காசில்லை வாங்கிதர மல்லிகைப்பூ. அழகிய காகிதப்பூ எப்போதும் மணம் வீசும் பூசிய வாசனைத் திரவியம் அழைக்காமல் வந்ததால் சன்னல் கதவைச் சாத்துகிறேன் மழை மலரென்று Read more

சிற்றிதழ்கள் உலகம் சரிந்தது!

அஞ்சலி வரம்போடு தம்வாழ்வை     வகுத்தளித்து வாழ்ந்துவந்த பெரம்பலூரில் பிறந்திட்ட     பெருவைரம் இராமதாசு, உரமாக இருந்துவந்து     உயர்வான சிற்றிதழைத் தரமான எழுத்துகளால்     தவழவிட்டு மகிழ்ந்துவந்தார். பெற்றெடுத்த பிள்ளையினும்     பிரியமுடன் வளர்த்துவந்த சிற்றிதழைத் தம்பொறுப்பில்     சிரமங்கள் பலவிடையே, முற்றும்நம் தமிழ்வளர     முனைப்பாக பாடுபட்டு உற்றதுணை யாயிருந்து     உயிரையும் உவந்தளித்தார். துபாயிலவர் Read more

பெண்ணியம் போற்று

படைத்தான் உன்னை கடவுள் கிரங்க வைத்தாய் என்னை! உன்னை உரசிக்கொண்டு வந்திருக்க வேண்டும் மென்மையானது காற்று ஜன்னல் ஓரத்தில். ஆழம்தான் உன்னின் தெரியவில்லை! இன்னும் … அளந்துக் கொண்டிருக்கிறேன்! என்னன்பு என்றும் பெண்ணியம் போற்றும்! போற்ற பெண்னியம் என்னின்பம் தழைக்கும்!

தாயன்பு!

வேதனை வலிகளுடன் போறாடி எனை ஈன்றெடுத்தாய்! பாலோடு தேன்கலந்தே திகட்டாமல் ஊட்டுவித்தாய்! தேரோடும் வீதியிலே சலிக்காமல் நடக்க வத்தாய்! பாரெல்லாம் போற்றிடவே பண்பாளனாய் நீ வளர்த்தாய்! சீரோடும் சிறப்போடும் செந்தமிழை பயிற்றுவித்தாய்! தாயன்பை மறப்பேனோ சொல்லிடுவாய் தாயே நீ!

‘ஜன்னல் ஓரத்து நிலா’வைச் சந்தித்தோம்!

மலேசியாவில் ஆரம்ப காலங்களில் பல சிரமங்களை அனுபவித்துள்ளேன். இப்பொழுது ஒரு நல்ல கம்பெனியொன்றில் பணி புரிகிறேன். அப்பணியை மகிழ்வாய் செய்கிறேன். எனது தொழில், எனது தமிழிலக்கியப் பணிக்கு எந்த வகையிலும் இடையூறாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மெல்லிசைத் தூறல்கள் (பாடல்கள்) பற்றிய கண்ணோட்டம்

கவிதை ஓர் அரிய கலை. நுண்ணிய கலை. கவிதையை யாத்த கவிஞனின் உணர்ச்சியை அதைப் படிப்போரிடமும் உண்டாக்கவல்ல அற்புதக் கலை. கவிதையென்பது அது கூறும் பொருளில் மட்டுமல்ல, கூறும் முறையிலும் இருக்கிறது. கவிதையை எழுதுபவர் தான் பெற்ற உணர்ச்சிகளைத் தன் கவிதைகளைப் படிப்போரும் பெற வேண்டும் என்று எண்ணிச் சில உத்தியைக் கையாண்டு கவிதைப் படைப்பர். அந்த யுக்தி முறைகளால் கவிஞரின் உணர்ச்சியை அதில் பதிய வைக்கப்படுகிறது. கற்பனை, சொற்களின் Read more

கானகம் தந்த கவி நிலவு பன்முகக் கவிஞர் சக்தி ஜோதி

இயற்கையையும் அதனோடு இணைந்து வாழ்க்கையையும் விட்டு நாம் விலகிச் செல்வதும், இன்றைக்குப் பல்வேறு வகைகளில் சிக்கல் மிகுந்ததாய் அமைந்துவிட்டதுமான நமது வாழ்க்கைமுறையும் என்னைச் சலனப்படுத்திக் கொண்டிருக்கின்றது. சமூகத்தின் அனைத்து வகையான சிக்கல்களுக்கும் அன்பு ஒன்றே நிரந்தரத் தீர்வு எனவும் நான் நம்புகிறேன்.

காமம் இன்றிக் காதல் எவ்வாறு இல்லையோ அவ்வாறு குடும்பம், உறவுகள் இன்றிச் சமூகம் இல்லை. இந்த வரம்பிற்குள் இருந்து தான் வெள்ளிவீதியாரும், ஆண்டாலும் பாடினார்கள். அவர்களைப் பின்பற்றிச் செல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.