- சொல்லித்தந்தப் பாடம்
பதியவில்லை மனதில்
ஆசிரியை முகம் ! - எங்கள் வீட்டு தோட்டத்தில்
மலராத மொட்டு
முதிர்கன்னி. - வீட்டுவாசல் வந்து
முழம்போட்டுத் தருகிறாள்
பூக்காரி - குறைந்த கூலி
அவன் நிறைவடைகிறான்
முதலாளி. - சிக்கிக்கொண்டேன் அவளிடம்
கசக்கிப் பிழிகிறாள்
மனைவி - வாசமில்லாமல் நிற்கிறாள் மனைவி
கையில் காசில்லை வாங்கிதர
மல்லிகைப்பூ. - அழகிய காகிதப்பூ
எப்போதும் மணம் வீசும்
பூசிய வாசனைத் திரவியம் - அழைக்காமல் வந்ததால்
சன்னல் கதவைச் சாத்துகிறேன்
மழை - மலரென்று கண்டுக்கொண்டான்
பார்வையற்றவன்
நாசிவழி ! - ரோசா வாடுகிறது
பார்வையின் சுட்டெரிப்பால்
சூரியன். - பிறர்க்கு உதவி செய்து
காலமெல்லாம் அகம் மகிழும்
தமிழ்நெஞ்சம் - கதவைத் திறந்ததும்
முதல் தரிசனம்
ஆதவன் வருகை - வானம் பார்த்த பூமி
கிடைத்த வெடிப்புகளில் குடியேறும்
வயல் எலிகள் - போட்டியில் தோற்றேன்
இருப்பினும் பரிசு கிடைத்தது
அம்மாவின் முத்தம் - அழகிய உலகம்
எட்டிப் பார்க்க முடிகிறது
கையில் திறன்பேசி - எனது மூச்சு
விற்பனையாகிறது வீதியில்
பலூன் விற்பனை - காற்றில் நறுமணம்
கொண்டு வந்தவள்
அவள். - வண்ணமுகப்புடன் அழகியநூல்
படிக்க ஒன்றுமில்லை
படபுத்தகம் ! - சிந்திய ரத்தமும் வியர்வையும்
கட்டுக்கட்டாய் கிடக்கிறது
முதலாளி வீட்டில். - ஜாதிமல்லியை சூடிக்கொண்ட
மனைவியுடன் கோபப்படுகிறான்
பகுத்தறிவாளன்.
மின்னிதழ்
ஹைக்கூ திண்ணை 13
ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...
1 Comment
Magizh · மே 26, 2022 at 5 h 04 min
நனி சிறந்த துளிப்பாக்கள்…
Comments are closed.