திருமணச்செல்வங்கள்

நம்பி : ஏ.டி.வரதராசன் 
நங்கை : கலைச்செல்வி

திருமண நன்னாள் : 09.04.2020

மங்கல மென்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறென்ற – தொன்மைத்
திருக்குறள் போல் செவ்வியராய் வாழ்க
திருப்பூட்டு இந்நாள் சிறந்து!

தோழர் வரதராசன் தோழி கலைச்செல்வியுடன்
வாழ்வாங்கு வாழ்கவென நெஞ்சுவந்து வாழ்த்துறைத்தோம்..
வாழையடி வாழையென வாழியவே பல்லாண்டு
சூழும் நலங்களெல்லாம் துய்த்து

பெறற்கரிய பேறெல்லாம் பெற்று வாழ்க
திறல்சேர் மகப்பெறுக செவ்வை – அறங்காத்து
நீடு புகழோடு நீவிர் நனி வாழியவே
கூடுக இன்பம் குவித்து

தமிழ்நெஞ்சம் அமின்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

மரபுக் கவிதை

அண்ணா

வினைச்சொல்லாய் வேதியத்தின் இருள கற்றி
விடியல்தர வந்துதித்த கதிர வன்நீ!
முனைச்சொல்லாய்க் கூர்படைத்த கூர்ப டைத்துக்
குத்தீட்டிச் சொல்வடித்த உலைக்க ளம்நீ!
பிணைச்சொல்லாய்ப் பிரிந்துபட்ட தமிழி னத்தைப்
பேரினமாய்த் திரளவைத்த பெருந்தி றம்நீ!

 » Read more about: அண்ணா  »

மரபுக் கவிதை

அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற அரசியல் சகாப்தமாக வாழ்ந்து சாதித்து மறைந்த ஒரு மாபெரும் மேதை பேரறிஞர் அண்ணா அவர்கள் என்றால் அது கிஞ்சித்தும் மிகையாகாது. ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து கல்வியாலும் உழைப்பாலும் உயர்ந்து தன் நாவன்மையால் தமிழகமக்களைக் கட்டிப்போட்டு,

 » Read more about: அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)  »