I மின்னிதழ் I நேர்காணல் I  அங்கயற்கண்ணி செல்வகுமார்

  • உங்களைப்பற்றிய அறிமுகம் தாருங்கள்.

 நான் அங்கயற்கண்ணி செல்வகுமார். ஈழம் எனது தாயகம். புலம்பெயர்ந்து  கணவர் இரு குழந்தைகளுடன் சுவிற்சர்லாந்தில் வாழுகிறேன். அத்தோடு தாய்மொழிக் கல்வியைக் கற்க முடியாத தமிழ்க் குழந்தைகளுக்காக அன்னைத் தமிழ் அறிவாலயம் தமிழ்ப் பாடசாலையை உருவாக்கி தாய் மொழிக் கல்வியைப் புகட்டி மகிழ்வுடன்  இருக்கிறேன்.

  • புலம்பெயர் தேசத்தில் உங்கள் தமிழ்த் தொண்டு எத்தகைய வரவேற்பைப் பெற்றுள்ளது?

தமிழ் அறிவு இல்லாத ஒரு சமுதாயம் உருவாகக் கூடாது என்ற நல்ல எண்ணம் என்றும் என் போன்றவர்களால் புலம்பெயர்ந்தவர்களின் குழந்தைகள் தமிழைக் கற்க முடிகிறது என்று  பாராட்டி வாழ்த்தினார்கள்.

செப்டெம்பர் 2023 / 104 பக்கங்கள் கொண்ட இதழை பதிவிறக்கம் (download) செய்ய மேற்காணும் இதழ் அட்டைப்படத்தில் டச் அல்லது கிளிக் செய்யவும்.
யாழிசை இலக்கிய சந்திப்பில் உடுவையூர் கலாவுடன் அங்கையடர்கண்ணி
  • உங்களால் நடாத்தப்படும் அன்னை அறிவாலயத்தில் தாங்கள் ஆற்றும் பணிகள் எவை?

மாணவர்களுக்குத் தேவையான வளர் தமிழ் நூல்களை தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையிடம் இருந்து பெற்று மாணவர்களுக்கு கையளிப்பது, பரீட்சைத் தாள்களை தயார் செய்வது,பாடசாலை நிறைவு பெற்றதும் சுத்தம் செய்வது, மாணவர்களுக்கு கற்பிப்பது மற்றும் பல ஆக்கத் திறன் செய்யற்பாடுகளை சொல்லிக்கொடுப்பது போன்ற பணிகளைச் செய்கிறேன்.

  • இப்பாடசாலையில் எத்தனை பேர் படிக்கிறார்கள்?

25 மாணவக் குழந்தைகள் எனது பாடசாலையில் தமிழ் கற்கிறார்கள்.

  • நீங்கள் ஆற்றும் தமிழ்ப் பணிக்கு குடும்பத்தில் ஆதரவு உண்டா?

எனது தமிழ்ப்பணிக்கு முழுமையான  ஆதரவு குடும்பத்தில் கிடைக்கிறது.

  • இப்பணியில் நீங்கள் எதிர்நோக்கும் சாதக பாதகங்கள் என்று எவற்றைக் குறிப்பிடுவீர்கள்?

இப்பணியை சேவையாகச் செய்கிறேன், அதாவது கல்வியை வியாபார எண்ணத்தோடு எவரும் பார்க்காமல் தமிழ் மொழிக் கல்வியை அடுத்த சந்ததிக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

தமிழ்மொழி கற்க முடியாமல் இருந்த மாணவர்களுக்காக உருவாக்கப் பட்ட பாடசாலை

  • பொதுவாக புலம்பெயர் தேசத்தில் தமிழ்மொழியின் நிலை பற்றி அனுபவங்கள் ஊடாக பகிருங்கள்.

புலம் பெயர் தேசங்களில் தமிழின் நிலையானது சுமாராக இருந்த போதும், என்போன்ற பணியாளர்களால் இங்கு பிறந்த எம்மவரின் குழந்தைகள் தமிழைப் பக்குவமாகாக கற்கும் நிலை உருவாகிறது. இவர்களைக் கற்பிக்க வேண்டும் என்கிற உத்வேகம் பெற்றோரிலும் அதிகமாகக் காணமுடிகிறது. தமிழுக்காக யாவரும் தினசரி ஒன்றிணைய முடிகிறது. இது தமிழ் தந்த வரமே.

மகளின் இசைஇறுவெட்டு நிகழ்வில்
கற்ற பாடசாலையில் (தாயகம் )
  • இணையத்தில் முகநூல் குழுமங்களில் நடுவராகப் பணியாற்றும் நீங்கள், நடுவர் பணியின் போது நெருக்கடிகளைச் சந்தித்ததுண்டா?

நடுவர் பணியில் நெருக்கடிகள் ஏற்படுவதுண்டு. சில புரிதலின்மை, பேச்சு வழக்கு, எழுத்துவழக்கு இவற்றாலும், தப்பான புரிதலோடு பழக்கப்பட்டவர்களாலும் நெருக்கடிகள் உண்டு.

  • முகநூல் குழுமங்கள் ஊடாகத் தமிழ்மொழி மெருகேறுகிறதா?

ஆம். முகநூல் குழுமங்களலும் தமிழ் மெருகேறுகிறது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். காரணம், அதிகம் படைப்புகள் நாளுக்கு நாள் படைக்கப்படுகின்றன. அத்தோடு, விருது என்ற பெயரில் நம் முன்னோரின் இயற்கையின் பெயர்கள் உச்சரிக்கப்படுகிறது. இதுவும் மெருகேறல் என்றே நான் கொள்கிறேன்.

கவியரங்கில் கவிதை படிக்கும் தருணம்
  • புலம் பெயர் தேசத்திலும் முகநூலிலும் தங்கள் தமிழ்ப் பணி மன நிறைவைத் தருகிறதா?

தமிழை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் இப்பணியானது நிறைவு தரும். அந்த வகையில் புலம்பெயர் தேசத்திலும் முகநூல் குழுமங்களிலும் எனது விருப்புடனான தமிழ்ப்பணி பூரண நிறைவைத் தருகிறது.

  • மேலும் உங்கள் பணியை விரிவு படுத்த விரும்புகிறீர்களா? எவ்வாறு?

அன்னைத்தமிழ் அறிவாலயம் தமிழ்ப் பாடசாலை மூலம் தமிழ்மொழியைப் புகட்டி வளர்ந்து வரும் எமது குழந்தைகளுக்கு தாய்மொழியாம் செம்மொழியின் சிறப்பை அவர்களும் உணர்ந்து கொள்ளும் அளவுக்கு எடுத்துச் செல்வேன்.

  • தாயகத்திலும் புலம் பெயர் தேசத்திலும் தமிழின் நிலை பற்றிக் கூறுங்கள்.

இரு இடங்களிலும் மொழியின் சிறப்பையும், பெருமையையும் தமிழ் ஆர்வலர்கள் முன் வந்து தமிழ்க் கல்வியறிவு இல்லாத இடங்களுக்குச் சென்று தமிழை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

  • கவியரங்கம் பட்டிமன்றம் பற்றிய உங்கள் அனுபவங்களைச்சொல்லுங்கள்

கவியரங்கம் பட்டிமன்றம் என நிறையப்  பங்கு பற்றியுள்ளேன், தலைமைத்துவத்திலும் பங்கு கொண்டேன் சிறப்பான அனுபவம்

பட்டிமன்றம் என்று சொல்லும் போது ஒன்றாக கவியுலகில் பயணிக்கும் கவித் தோழமைகளுடன் அவர்களின் பேச்சை எதிர்த்து வெட்டிப்பேசும் போது மனதிற்கு தர்ம சங்கடமாகவும் இருக்கும்.

  • தமிழ்நெஞ்சம் இதழ் பற்றி சொல்லுங்கள்.

ஐரோப்பாவில் தமிழ்வளர்க்கும் நற்றமிழ் இதழ். அதன் ஆசிரியருக்கும், அவருடன் இணைந்து செயற்படும் யாவருக்கும் வாழ்த்துகள்.என்னை நேர்காணல் செய்த தங்களுக்கும் நன்றி… வணக்கம்.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மின்னிதழ்

சாதிக்கப் பிறந்தவர் – லிடியன் நாதஸ்வரம்

I மின்னிதழ் I நேர்காணல் I  இசை இளவரசர், லிடியன் நாதஸ்வரம்

பதிமூன்று வயதில்,  உலக அளவில் நடத்தப்பட்ட  பியானோ இசைப்போட்டியில் கலந்து கொண்டு,  முதலாவதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாகத் தட்டிச் சென்று,

 » Read more about: சாதிக்கப் பிறந்தவர் – லிடியன் நாதஸ்வரம்  »

அறிமுகம்

உயர்நீதி மன்றத்தில் ஓர் தமிழ்ப்பற்றாளர்

கவியரங்கமானாலும் பட்டிமன்றமானாலும் தன்னம்பிக்கைப் பேச்சரங்கமானாலும் தனித்த ஒரு முத்திரை பதிப்பவர். சுருக்கெழுத்து தட்டச்சராகப் பணியாற்றிய பணியாளர் இன்று உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளின் நேர்முகஉதவியாளர் என்ற நிலைக்கு உயர்ந்தவர். நீதிமன்றப் பணிகள் மட்டுமின்றி தமிழ்ப்பணிகளையும் தளர்வின்றி ஆற்றி வருபவர். கதை கவிதை கட்டுரை என அனைத்துத் துறைகளிலும் பயணித்துவருபவர். கவிதைநூல்களைப் படைத்து ஒரு சிறந்த படைப்பாளியாகவும் திகழக்கூடியவர். உளவியல் நூலக அறிவியல் வணிக மேலாண்மை சட்டம் கலை என பல்வேறு பிரிவுகளில் முதுகலைப்பட்டங்கள் பெற்று பட்டங்கள் ஆளவும் சட்டங்கள் செய்யவும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்ற பாரதியின் கூற்றுக்குச் சான்றாக நடந்து வரும் பெண்மணியார். ஆம் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் நீதிபதிகளின் நேர்முக உதவியாளராகப் பணியாற்றிவரும் கவிஞர் இராஜ பிரபா அவர்களைத்தான் நேர்காணல் செய்ய மதுரை வந்துள்ளோம். இதோ நேர்காணல்.

நேர்காணல்

பெண்ணே நீ வேலியற்ற பெருவெளி

பெண்ணே நீ வேலியற்ற பெருவெளி உன் முன்னே ஊழி என்பது சிறுதுளி நர்மதா. சென்னை போரூரில் உள்ள சன் பீம்ஸ் பள்ளியின் தாளாளர். 'நல்ல பெண்மணி' என்ற பத்திரிகையை 15 ஆண்டுகள் ஆசிரியராக இருந்து நடத்தியவர். உடுமலை தனது தாய்வீடு. திருப்பூர் எனது புகுந்தவீடு எனும் இவர், நாற்பது ஆண்டுகளாக சென்னையில் வசித்து வருகிறார். இதுவரை எனது 10 கவிதை நூல்கள் வெளிவந்துள்ளன. நமது பெண் அமைப்பு தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகின்றன. சென்னைப் பெண்களால் 3/3/ 2019..ல் நமது பெண் அமைப்பு தொடங்கப்பட்டது... இப்போது மிக வெற்றிகரமாக பல நூறு பெண்களுடன் இயங்கி வருகிறது. அதன் நிறுவனரும் இவரேயாவார். இனி நேர்காணலுக்குள் நுழைவோம். நேர்கண்டவர் பெண்ணியம் செல்வக்குமாரி