தொழில்நுட்பக் கல்லூரியில் ஒரு தமிழ்த்தென்றல்

தமிழில் இளங்கலையோ முதுகலையோ பட்டம் பெறாதவர்களே பெரும்பாலும் கவியுலகில் கோலோச்சுபவர்களாக இருக்கிறார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியே! அத்தகைய ஒருவரைத்தான் இந்த மாத இதழில் நேர்காணல் செய்யவிருக்கிறோம். ஆம் இவர் நிறைய பட்டங்களைப் பெற்றிருந்தாலும் தமிழில் பட்டம் பெற்றவர் இல்லை. பணிபுரியும் துறை கல்வித்துறையாக இருப்பினும் அங்கும் தமிழ் கற்பிக்கப்படுவதில்லை. இவர் ஆசிரியருக்கான பட்டமும் பயிற்சியும் பெற்றிருந்தாலும் ஆசிரியராகப் பணியாற்ற வில்லை. ஆனால் தமிழ்க் கவிதைகளை யாப்பதில் முன்னணிக் கவிஞர்களில் ஒருவராகத் திகழ்கிறார். ஆயிரம் விருத்தங்களை மிகக்குறுகிய காலத்தில் எழுதி நிறைவு செய்து பிரான்சு நாட்டில் இயங்கிவரும் கம்பன் கழகம் தொல்காப்பியர் இலக்கண மையம் மற்றும் பாவலர் பயிலரங்கம் வழங்கிய பாவலர் மற்றும் பாவலர் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார். ஆம் பாவலர் திரு. இராம வேல்முருகன் அவர்களைத்தான் சந்திக்கின்றோம்.

தம்பி… 7

தொடர் எண் 7. தலைப்பு : இன்சொல். ஊக்கமுடன் வாழ்ந்திடவே உற்றோரும் வாழ்த்திடவே நீக்கமற எந்நாளும் இன்சொற்கள் பேசிடுவாய் தாக்கிடுவார் வன்சொற்கள் தாங்கிக்கொள் நற்பண்பால் வாக்கினிலே மாறாமல் வாழ்ந்திடத்தான் கற்பாயே. கற்பாயே நல்நூல்கள் காப்பாயே பண்பாட்டைப் பற்றிடுவாய் சான்றோர்சொல் பாசத்தில் நல்லுறவாய். வற்றாத கல்வியினை வாழ்நாளில் பெற்றால்தான் சொற்சுவையில் வல்லோனாய் சொல்லாட்சிச் செய்திடலாம். செய்யென்றால் நற்செயல்கள் செய்கின்ற நல்தம்பி Read more

தம்பி… 6

தொடர் எண் 6. தலைப்பு : வீரம் வாழ்த்திடவே சாதனைகள் வாழ்நாளில் சாதிப்பாய் ஏழ்மையினை வெற்றிகொள் ஏறுபோல்நீ வீரம்கொள் ஆழ்கடலில் விட்டாலும் அஞ்சாமல் வந்துவிடு வீழ்த்துகின்ற எண்ணத்தை வீறுகொண்டு மாற்றிவிடு. மாற்றிக்கொள் காலத்தின் மாற்றங்கள் நோக்கிடுவாய் ஏற்றுக்கொள் வீரத்தை ஏணியாக்கி வாழ்க்கையினில் வேற்றுமைகள் நீக்கிடவும் வெற்றிகளைப் பற்றிடவும் போற்றிடவும் உற்றாரும் பொங்கிநீயும் நிற்பாயே. நிற்பாயே குன்றாக நேர்மையாக வாழ்ந்திடவே வெற்பாக Read more

தம்பி… 5

தொடர் எண் 5. தலைப்பு : நட்பு. கொள்வாயே நண்பர்கள் குன்றாத பண்புடனே உள்ளங்கள் ஒன்றாக ஊர்போற்றும் நட்பினையே பள்ளங்கள் மேட்டினிலும் பற்றுடனே எந்நாளும் தள்ளாத மூப்பினிலும் தாங்குகின்ற ஊன்றுகோலாய். ஊன்றுகோலாய் வாழ்க்கையினில் ஒன்றுபட்டு நிற்பீரே சான்றோராய் நின்றொளிர்க சாதனைகள் செய்திடவே தோன்றுகின்ற துன்பங்கள் தோல்விகளைத் தந்திடினும் தேன்போன்றத் தன்மையுடன் தென்றலாக மென்மைபெற்றே. மென்மையுடன் பேசிட்டால் மேன்மைகளும் Read more

தம்பி… 4

தொடர் எண் 4. தலைப்பு : ஏமாறாதே. மாறாத எண்ணத்தில் மாற்றங்கள் வந்தாலும் கூறாதே பொய்களையும் கொள்வாயே வாய்மையினை ஆறாதே சுட்டவடு ஆற்றுவாய் நற்பணிகள் மீறாதே மூத்தோர்சொல் மேன்மையுற ஏற்பாயே. ஏற்பாயே நற்பணிகள் எல்லோரும் ஏற்றமுற ஆற்றுவாயே இன்முகமாய் அல்லல்கள் நீங்கிடவே ஊற்றாக செல்வங்கள் ஊருணியாய் மக்களுக்கு சீற்றமுடன் வாழாமல் சிந்தனைகள் கூடிடுமே. கூடிவாழ நற்பயன்கள் கோடியுண்டு மாற்றமில்லை நாடிவரும் Read more

அனுபவம்

வார்த்தையில் அழகாய்த் தெரிந்தவர் எல்லாம்
வாழ்க்கையில் அழகாய்த் தெரிவதில்லை…
ஆனாலும் அவரோடுதான் வாழ நினைக்கிறோம்…

இப்படி எத்தனை காலம்தான்
ஏமாறப் போகின்றோமோ…

சிந்தனை செய்யும் சக்தி இருந்தும்
அதைச் செலவழிப்பதில் கஞ்சத்தனம்..
கொஞ்சம் அதிகம்தான்…

கம்பன் விழா

ஆண்டுதோறும் பிரான்சு கம்பன் கழகம், கம்பன் விழாவைச் சிறப்பாக வெளிநாடுகளிலிருந்தெல்லாம் சிறப்பான வர்களை அழைத்துச் சிறப்புச் செய்து விழாக்கொண்டாடுவது வழக்கம். இவ் வாண்டு கொரோனாக் காலத்தில் விழாக் கொண்டாட முடியுமா என்ற ஐயப்பாடுடன் அதிகமானவர்களை அழைக்காமல் குறைந்த எண்ணிக்கையாளருடனே விழாச் சிறப்பாகத் திட்டமிடப்பட்டுச் செயற்படுத்தப்பட்டது. கம்பன் கழகத்துக்காக உழைத்த நல்லிதயம் பாவலர்ஆதிலட்சுமிவேணுகோபல் அவர்கள் மறைவை நினைவு Read more

தம்பி… 3

தொடர் எண் 3 தலைப்பு : தம்பி நலமா ? உன்திறனே உன்வாழ்வை உன்னதமாய் சீர்படுத்தும் என்றேதான் நெஞ்சினிலே இன்றேதான் கொள்வாயே நன்றேதான் நம்மனத்தில் நல்லெண்ணம் வேண்டுமப்பா ஒன்றேதான் ஊராக ஓங்கட்டும் நம்வாழ்வே. வாழ்வினிலே ஏற்றமுற வாழ்ந்திடுவாய் அன்பாக ஏழ்மையிலே வாடினாலும் ஏற்றமுற நம்பிக்கை ஆழ்மனத்தில் கொள்வாயே அன்பொன்றே தீர்வாகும் தாழ்மையுடன் சான்றோரின் தக்கவழி ஏற்பாயே. ஏற்பாயே Read more

தம்பி… 2

குன்றாக நின்றிடவே கோலேச்சி வாழ்வாயே
நின்றாடும் சொக்கனவன் நின்வேண்டல் கேட்டருள்வான்
சென்றிடுவாய் திக்கெட்டும் சேர்த்திடுவாய் ஞானத்தை
பொன்பொருளும் சேர்ப்பாயே பூக்கட்டும் உன்திறனே.

தம்பி… 1

திரும்பித்தான் பார்த்திடுவாய் தீர்வுகளைக் கண்டிடுவாய்
இரும்பாக நெஞ்சத்தில் ஏற்றித்தான் வைத்திடுவாய்
கரும்பாகப் பேசிடுவாய் காந்தமாக ஈர்த்திடுவாய்
துரும்பாக எண்ணாமல் தூணாகத் தாங்குவாயே.