கவிதை
தம்பி… அறிமுகம்
நான்.
பேச்சில் தமிழே உயர்வாக பிறந்தேன் தஞ்சை மாவட்டம். மூச்சில் முழக்கம் தமிழாக. முயன்றேன் கற்க இலக்கணமே. வீச்சில் தமிழே உரையாக வீறு கொள்வேன் கவியரங்கம். தீச்சொல் தவிர்த்துத் திறமுடனே தேன்த மிழையே பரப்பிடுவேன். கற்றேன் தமிழை இனிதாக கனியின் சுவையை உணர்ந்தேனே. நற்ற வைச்சொல் வேன்நன்றாய் நம்த மிழின்வு யர்வினையே. பற்றெ னப்பற் றினேன்தமிழை. பாக்கள் வடித்தே மகிழ்ந்தேனே. உற்ற உறவாய் தமிழர்கள் உயர்வும் பெறவே உதவிடுவேன். கவியாய் மலர்ந்த சிந்தனைகள் கற்றால் வாழ்வில் உயர்ந்திடவே. கவிவி தைகவி தைநூலே. கற்றோர் வாழ்த்த மகிழ்ந்தேனே. செவியில் தமிழால் இன்புறவே சேவை என்றும் தமிழுக்கே. புவியில் இவனும் தமிழுக்காய் புரிந்தான் தொண்டு வாழ்த்திடவே. கவிஞர் கோவிந்தராசன் பாலு தொடரும் (மேலும்…)நேர்காணல்
மதுரையில் மீண்டும் ஒரு காளமேகப் புலவர்
நேர்காணல்
காளமேகப்புலவர் தமிழ்ப்புலவர்கள் வரிசையில் நீங்கா இடம் பெற்ற கவிஞர். நினைத்த மாத்திரத்தில் கவிதைகளை யாப்பதில் வல்லவர். அதுவும் கவிஞர்களுக்குச் சிரமம் எனக் கருதப்படும் வெண்பாவில் சரளமாகப் பாக்கள் வடிப்பவர்.
» Read more about: மதுரையில் மீண்டும் ஒரு காளமேகப் புலவர் »புதுக் கவிதை
காதல் சங்கீதமே
உச்சந்தலை வருடி உரசும் காற்றில்
அருகினில் வந்து உரையாடி உறவாகி
வெட்கம் பூசி முகமது சிவக்க
வில்லாய் வலைக் கரம் வளைத்து,
பிறைநுதல் தொட்டு திலகம் தீட்டி
விரல் தீண்ட விரதமும் தீரும்!
நூல்கள் அறிமுகம்
வள்ளுவர் குறளும், வாரியார் வாக்கும்!
எனது இளமைக்காலங்களில் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவுகளை விரும்பிக் கேட்பதுண்டு. அவரது அழகியப் பேச்சும் பேச்சின் செறிவும் எனக்குப் பிடிக்கும். அப்படியான என் மனம் கவர்ந்த வாரியார் வாக்கும் வள்ளுவர் குறளும் என்னை வியப்பிலாழ்த்தி நூலைப் படிக்க வைத்தது.
» Read more about: வள்ளுவர் குறளும், வாரியார் வாக்கும்! »அறிமுகம்
கவிஞரேறு வாணிதாசன்
வாணிதாசன் பிரபல தமிழ்க் கவிஞர். தலைசிறந்த தமிழ்க் கவிஞர்களில் ஒருவரும் பாவேந்தர் பாரதிதாசனின் மாணவருமான வாணிதாசன் நினைவு தினமாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7 ல் கொண்டாடப்பட்டு வருகிறது.
புதுவை மாநிலத்தின் வில்வ நல்லூர் என அழைக்கப்பட்ட இன்றைய வில்லியனூரில் 22.
» Read more about: கவிஞரேறு வாணிதாசன் »மின்னிதழ்
ஈழத்து நவீன கவிதை வளர்ச்சியில்…
1.0 ஈழத்து நவீன கவிதை வளர்ச்சியில் அறுபதுகளளவில் முற்போக்குக் கவிதைச் செல்நெறி முகிழ்க்க ஆரம்பித்தது, எழுபதுகளிலும் தொடர்ந்தது. இந்த எழுபது காலகட்டத்தில் இடதுசாரிச் சிந்தனையால் ஆகர்ஷிக்கப்பட்டு இத்தகைய கவிதை எழுதியோருள் ஒரு சாரார் குறிப்பாக முஸ்லிம் கவிஞர்கள் இஸ்லாமிய மதப்பற்றுடையவர்களாகவும் விளங்கினர்.
» Read more about: ஈழத்து நவீன கவிதை வளர்ச்சியில்… »மின்னிதழ்
தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 08 – 2020
எண்ணமும் – வண்ணமும்
ஓவியர் அருண்குமார் நேர்காணல்
ஓவியர் அருண்குமார் தமிழ்நாடு, வேலூர் மாவட்டத்தில் வசித்து வருகிறார். அவரது முழுநேர எண்ணமும் உழைப்பும் ஓவியம் வரைவது மட்டும்தான்.
» Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 08 – 2020 »நூல்கள் அறிமுகம்
பேரறிஞர் அண்ணாவின் நமது நாடு
நாம் வாழுகின்ற நமது தமிழ்நாட்டிற்கு சட்டப்படியாக தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய பெருமைக்குரியவர். நாடாளுமன்ற உறுப்பினராக, சட்டமன்ற உறுப்பினராக, தமிழ்நாடு முதலமைச்சராக பதவி வகித்தவர். தந்தைப் பெரியாரின் பெருந்தொண்டராக இருந்து பின்பு “ஒன்றே குலம் ஒருவனே தேவன்”
» Read more about: பேரறிஞர் அண்ணாவின் நமது நாடு »ஹைக்கூ
மலர்வனம் 8
ஹைக்கூ
ஷர்ஜிலா ஃபர்வின்-
மழைத்துளிகளை
சுமந்து கொண்டிருக்கும்
கார்காலச் சிலந்தி வலை. -
இலையுதிர்காலக் கிளை
தண்டுகளெல்லாம் மின்னுகிறது
வைகறைப் பனி. -
வானத்தில் நாற்று நட
கால்களைப் கவ்விப் பிடிக்கும்
சேற்று வயல்.