நூல் முகப்புபடத்தில் க்ளிக் செய்தால் தமிழ்நெஞ்சம் மே – 2020 இதழ் தரவிறக்கமாகும்.

பாழ் நோயாம் கொரோனா

( அறுசீர் விருத்தம் )
( காய் காய் மா – காய் காய் மா )

கட்டுக்குள் அடங்காமல் தானே
     காசினியில் பரவிடுது நோயே
மட்டுக்குள் வைத்திடவே முயலும்
     மருத்துவர்கள் படும்பாடு பாரீர்
விட்டிந்த நோயகன்று செல்ல
     வீட்டுக்குள் இருந்தாலே போதும்
பட்டென்று பாரிலது போகும்
     பரவசமும் கண்டிடலாம் பாரில்

பார்முழுதும் பரவுகின்ற கொரோனா
     பாடாகப் படுத்துகின்ற நோயாம்
ஊர்முழுதும் அடங்கிடவே நாளும்
     உயிரடக்கும் கொரோனாவும் மாளும்
பேர்விளங்கி நம்மினமும் புவியில்
     பெட்புடனே வாழ்ந்திடலாம் பாரீர்
ஊர்மக்கள் தாமின்றே யடங்கி
     உள்ளிருக்க நோயகன்று போகும்

பேர்பெற்ற நாட்டினரும் தானே
     பெருநோயால் வாடுகின்றார் தானே
யார்கொண்டு வந்தாரிந்த நோயே
     யாமின்று வாடுகின்றோம் வீணே
ஊர்கூடா தில்லிருந்து பாரும்
     உலகிலிந்த நோயகன்று போகும்
பார்தனிலே பரவசமும் கூட
     பாழ்நோயும் பாரகன்று போகும்  

கவிஞர் – வயலூரான்

பெய்யென பெய்யும் மழை

13 Comments

கவிஞர் தியாரூ · ஏப்ரல் 30, 2020 at 4 h 15 min

தமிழ்நெஞ்சம் பத்திரிகை ஆற்றி வருகின்ற அளப்பரிய தமிழ்த்தொண்டிற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். அதனைத் தொடர்ந்து பெற விரும்புகிறேன்.

கவிஞர் தியாரூ · ஏப்ரல் 30, 2020 at 4 h 17 min

தமிழ்நெஞ்சம் மே 2020 இதழைக் காண விழைகிறேன்.

நிறைமதி நீலமேகம், பெண்ணாடம் · ஏப்ரல் 30, 2020 at 6 h 46 min

அருமை, இனிய நல்வாழ்த்துகள்… சிறப்பு.

தமிழ் தம்பி · ஏப்ரல் 30, 2020 at 8 h 01 min

பல்சுவை நிறைந்த அழகிய சிறந்த இலக்கிய தொகுப்பு

ஒரத்தநாடு நெப்போலியன் · ஏப்ரல் 30, 2020 at 11 h 23 min

மதிப்பிற்குரிய அன்புவல்லி அம்மா அவர்களின் பேட்டியைப் படிக்கும்போது…
எரிமலையை… குப்பைகள் கொண்டு அணைத்திட முடியாது என்பதை உணர்த்துகிறது.

ஏடி வரதராசன் · மே 1, 2020 at 18 h 27 min

புதுக்கவிதைத் தீட்டிப் புனலோட்டம் ஓடும்
மதுக்கவிதை நெஞ்சம் மயக்க – விதுக்கவிதை
என்றறிந்தேன் பின்னே எனக்குள் இருக்கின்ற
அன்றும் குளிர்வ(து) அறிந்து.

தென்றல் கவி யின் உனக்காக எழுதிவிடுவேன்
சொற்கள் தொடுத்த விதம் அழகு
வாழ்த்துக்கள்!

வெற்றிப்பேரொளி · மே 1, 2020 at 19 h 48 min

தமிழ்நாட்டில் உள்ள தமிழ் மற்றும் கவி ஆளுமைகளை எல்லாம் இங்கே தமிழ்நாட்டில் உள்ள தமிழ் இதழ்கள் எவையும் கண்டுகொள்வதே இல்லை!

ஆனால் பிரான்சின் தமிழ்நெஞ்சம் இதழ் அவர்களின் சீர்மையை சிறப்பை செம்மாந்தப் புலமைமையை மெச்சிப் புகழ்க் குன்றின் உச்சியில் ஏற்றிக் கொண்டாடடுகிறது!

இதழாசிரியர் தமிழ்நெஞ்சம்அமின் அவர்களுக்குத் தமிழ்கூறும் நல்லுலகம் சார்பில் நன்றி வாழ்த்து பாராட்டு!

தமிழ் மூதாட்டி தங்க. அன்புவல்லி அம்மைக்கு என் செந்தமிழ் வணக்கம்!

அரசி மன்னை ஜீவிதா · மே 1, 2020 at 19 h 51 min

உண்மை உண்மை மிகவும் உண்மை அண்ணா தங்கள் அனைவரையும் எங்களுக்கு தெளிவுபடக் கூறுவது .. தமிழ்நெஞ்சம் அமின் அண்ணா அவர்களின் தமிழ்நெஞ்சம் இதழே… மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும்.

Bharathi · மே 2, 2020 at 18 h 03 min

she deserves it and i really proud of my mom… I thanked to god for giving me such a wonderful person as a mother.

மாதவன் · மே 2, 2020 at 18 h 13 min

எங்கள் தாயாரின் கவிதைகளை புத்தகத்தில் வெளியிட்டதற்காக எங்களின் குடும்பம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் இப்படிக்கு இளம்பாரதி மகேஸ்வரி இளவேனில் மாதவன்

பாரதி பத்மாவதி · மே 11, 2020 at 6 h 26 min

“தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்வோம்” எனும் பாரதியின் வரிகளை மெய்ப்பிக்கும் தமிழ்நெஞ்சம் இணைய இதழுக்கு இதயமார்ந்த வாழ்த்துக்கள்.
பாரதி பத்மாவதி

தங்கை பாலா ஆசினி · மே 28, 2020 at 6 h 00 min

சிறப்பான பணி. செழுமையோடு வளர வாழ்த்துக்கள்.

விஜயலட்சுமி · ஜூலை 15, 2020 at 9 h 05 min

அழகிய இதழ்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நேர்காணல்

சோழவந்தான் கவிச்சிங்கம்…

மதுரை என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது தமிழ். தமிழின்றி மதுரையில்லை; மதுரையின்றித் தமிழின் வரலாற்றை எழுதிவிட முடியாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்கம் வைத்து நம்மொழியை வளர்த்தவர்கள் மதுரை மக்கள். இன்றும் பல்வேறு பெயர்களில் சங்கம் வைத்து , அறக்கட்டளை வைத்து, மன்றங்கள் வைத்து, புலனக்குழு முகநூல்குழுக்கள் வைத்து மொழியை வளர்த்துவரும் மதுரையில் அதன்பெயரிலேயே தமிழ்மதுரை அறக்கட்டளை எனும் பெயரில் ஒரு அறக்கட்டளை வைத்து , மொழிவளர்க்கும் சான்றோர்களுக்குப் விருது வழங்கி , பள்ளி கல்லூரிகளுக்குச் சென்று தமிழ்ப்பற்றை அதிகப்படுத்தும் பணிகளச் செய்துவரும் ஒருவரே இம்மாதச் சிறப்பு விருந்தினர் ஆவார். ஆம் சித்தார்த் பாண்டியன் எனும் புனைப்பெயருடன் வலம்வரும் தூயதமிழ்ப் பற்றாளர் தமிழ்மதுரை அறக்கட்டளை நிறுவுநர் சோழவந்தான் கவிச்சிங்கம் தங்கபாண்டியன் அவர்களுடன் தமிழ்ச்செம்மல் இராம வேல்முருகன் செய்த நேர்காணல் இதோ..

நேர்காணல்

கலாபூஷணம் புசல்லாவை இஸ்மாலிஹா ராஜா

I மின்னிதழ் I நேர்காணல் I கலாபூஷணம் புசல்லாவை இஸ்மாலிஹா ராஜா

‘’மலையகத்தில் கற்றவர்கள் அதிகமாக காணப்படுவது பெருமைக்குரிய விடயமாகும்’’

மலையகக் கவிஞர், எழுத்தாளர்,

 » Read more about: கலாபூஷணம் புசல்லாவை இஸ்மாலிஹா ராஜா  »

நேர்காணல்

கிழக்கில் உதித்த தாரகை, இலக்கிய வானிலும் சாதனை

I மின்னிதழ் I நேர்காணல் I  மருத்துவர் ஜலீலா முஸம்மில்

தொழில்ரீதியாக மருத்துவராக சேவை செய்யும் டொக்டர் ஜலீலா முஸம்மில், பன்முகத் திறமைகளோடு இலக்கிய  வானிலும் ஆளுமை செய்கிறவர். சுறுசுறுப்பில் தேனீயாக இயங்கி திக்குகள் எட்டிலும் துலங்குகிறவர்.

 » Read more about: கிழக்கில் உதித்த தாரகை, இலக்கிய வானிலும் சாதனை  »