கவிதை

உரிமைத் திருநாள்!

மேதினம்!
உழைப்பால் பூத்த
மலர்வனம்!

வியர்வை முத்து!
வென்ற
புகழ்ச்சொத்து!

பாடுபடும் பாட்டாளி
பட்ட தொல்லை – நீக்கிப்
பழுத்த கொல்லை!

 » Read more about: உரிமைத் திருநாள்!  »

இலக்கணம்-இலக்கியம்

தமிழமின் வாழ்க தழைத்து!

விசித்திர அகவல்

ஒரு குறள் வெண்பாவிலுள்ள ஒவ்வோர் எழுத்தையும் ஒவ்வோரடியின் ஈற்றில் அமையுமாறு பாடுவது விசித்திர அகவல் ஆகும்.

குறள் வெண்பா

குமுத மலராகக் கோலவிதழ் பின்னும்
தமிழமின் வாழ்க தழைத்து!

 » Read more about: தமிழமின் வாழ்க தழைத்து!  »

மரபுக் கவிதை

பாடிப் பறந்த குயில்!

பாவேந்தர் 125ஆம் ஆண்டு விழாப் பாட்டரங்கம்

தமிழ் வணக்கம்!

தென்னாட்டு மலையேறித் தெம்மாங்கு கவிபாடித்
தேனாற்றில் நீராடும் தமிழே!
என்பாட்டுச் சிறந்தோங்க என்நாவில் நீ..யாடி
இழைத்தூட்டுத் தித்திக்கும் அமுதே!

 » Read more about: பாடிப் பறந்த குயில்!  »

கவிதை

கம்பன் புகழ்

1.
கவியால் கோட்டையைக் கட்டிய கம்பனின்
கால்களைத் தொட்டுத் தொழுகின்றேன்!
புவியும் செழித்திடப் பூந்தமிழ்த் தோப்பைத்
புலமை தழைக்க உழுகின்றேன்!
  
2.
விருத்தக் கவிகள் விருந்தென இன்பம்
விளைத்திடும் என்றே..நான் உண்டேனே!

 » Read more about: கம்பன் புகழ்  »

கவிதை

குகன் படகு பேசுகிறது!

தமிழ் வணக்கம்

கற்கண்டு சொல்லேந்திக் கார்வண்ணன் வில்லேந்திக்
கமழ்கின்ற தமிழே..நீ வாராய்!
காலத்தை வெல்கின்ற கோலத்தை என்பாட்டில்
கணக்கின்றி எந்நாளும் தாராய்!
சொற்கொண்டு வையத்தை நற்றூய்மை நான்செய்யச்
சுடர்கின்ற தமிழே..நீ வாராய்!

 » Read more about: குகன் படகு பேசுகிறது!  »

கவிதை

தமிழ்நெஞ்சம் அமின் வாழ்க!

கன்னல் கவியழகில் காதல் பெருக்கெடுத்து மின்னும் தமிழ்நெஞ்சம் இன்னமினார்! - மன்னுபுகழ் பின்னும் நிலையுறுக! பேறுகள் பெற்றோங்கி இன்னும் கலையுறுக ஈங்கு! அன்பின் பெருக்கால் அனைவரையும் ஆட்கொள்ளும் இன்பத் தமிழ்நெஞ்சம் எம்அமினார்! - நன்வாழ்கை அன்னை மொழியேந்தும்! முன்னை நெறியேந்தும்! பொன்னை அகமேந்தும் பூத்து!

கவிதை

முனைவர் தமிழண்ணல் கையறுநிலை

வல்லதமிழ் ஓங்க வரலாற்றை நன்காய்ந்து நல்லபுகழ் நுால்களை நல்கியவர்! - வெல்லுதமிழ் அண்ணல் மறைந்திட்டார்! ஐயகோ! அன்பருளக் கண்ணீர்க் கடலெனக் காண்! ஓங்கும் தமிழணிக்கே ஒப்பில் தலைமையினைத் தாங்கும் மறவர் தமிழண்ணல்! - ஈங்கெழா நீடுதுயில் கொண்டதுமேன்? ஐயோ!தன் நெஞ்சுடைந்து பாடுகுயில் தேடும் பறந்து!

கவிதை

மைக்காரி

கண்டும் காணாக் கண்மணியே - போகும் கார ணமென்ன பொன்மணியே ! வண்டு விழியே மோகினியே - நீ வாராய் அருகே மாங்கனியே ! மலரும் வண்டும் பேசுதடி - என் மனதில் காதல் வீசுதடி !

கவிதை

விதி

சொத்து! சொத்து!! என்றே நாட்டை முற்றும் சுரண்டி மூட்டை கட்டிச் சுற்றும் மனிதா! சுழலும் விதியால் அற்றுப் போகும் அமைத்த வாழ்வே! கண்ணில் பட்ட காட்சிகள் தம்மை எண்ணிப் பார்த்தே எழுதினேன் கவியே!

கவிதை

விதி

துன்பம் உற்றோர் துவண்டு உரைப்பர்
நன்றே விதியால் நலிந்தோம் என்றே!
இன்பம் உற்றோர் ஏனோ விதியை
எண்ணிப் பார்த்தே ஏத்துதல் இல்லை!
மதியைக் கொண்டு வறுமை போக்கி
சதியை வெல்லல் விதியின் செயலே!

 » Read more about: விதி  »