உரிமைத் திருநாள்!

மேதினம்! உழைப்பால் பூத்த மலர்வனம்! வியர்வை முத்து! வென்ற புகழ்ச்சொத்து! பாடுபடும் பாட்டாளி பட்ட தொல்லை – நீக்கிப் பழுத்த கொல்லை! இரும்புருக்கு ஆலை முதலாளியின் இதயத்தை உருக்கிய நாள்! செங்கொடி! சூட்டிய திருநாள்! – இன்பம் மீட்டிய பெருநாள்! தொழிலாளர் போராட்டம்! – பெற்ற தேரோட்டம்! உப்பு, சருக்கரையாய் இனித்த சுவைநாள்! துயர்விளைத்த தொழிலகம்! எழிலகம் ஆனனாள்! வாடிய நெசவாளர் வலியே நீங்க வழியே வகுத்தநாள்! ஆளுவார்க்கம் புரிந்த Read more

தமிழமின் வாழ்க தழைத்து!

விசித்திர அகவல் ஒரு குறள் வெண்பாவிலுள்ள ஒவ்வோர் எழுத்தையும் ஒவ்வோரடியின் ஈற்றில் அமையுமாறு பாடுவது விசித்திர அகவல் ஆகும். குறள் வெண்பா குமுத மலராகக் கோலவிதழ் பின்னும் தமிழமின் வாழ்க தழைத்து! அன்னைத் தமிழின் அமுதைப் பருகு மன்பன்! ஆற்றல் அரிமா! கி.மு முன்னே மொழியைத் முனைந்து காத்த தன்னே ரில்லாத் தமிழன் நாம மோதும் மறவன்! முத்தமிழ் வல்ல தாதும் மணக்கும் தகையன்! தீரா ஆசை கவிமேல்! ஆக்கம் Read more

பாடிப் பறந்த குயில்!

பாவேந்தர் 125ஆம் ஆண்டு விழாப் பாட்டரங்கம் தமிழ் வணக்கம்! தென்னாட்டு மலையேறித் தெம்மாங்கு கவிபாடித் தேனாற்றில் நீராடும் தமிழே! என்பாட்டுச் சிறந்தோங்க என்நாவில் நீ..யாடி இழைத்தூட்டுத் தித்திக்கும் அமுதே! கண்காட்டு! கை..காட்டு! கம்பன்தன் சீரூட்டு! கவியென்றன் நெஞ்சத்தின் உயிரே! பண்பூட்டு! பணிவூட்டு! விண்மூட்டுப் புகழ்சூட்டு! பணிகின்றேன் எனையீன்ற தாயே! திருமால் வணக்கம்! ஆழ்வாரின் திருக்கண்ணா! அழகான என்மன்னா! அடி..போற்றித் தொழுகின்றேன் வாராய்! வீழ்வாரின் விதிமாற்றித் தாழ்வாரின் துயரோட்டி வெல்கின்ற அருட்பார்வை Read more

கம்பன் புகழ்

1. கவியால் கோட்டையைக் கட்டிய கம்பனின் கால்களைத் தொட்டுத் தொழுகின்றேன்! புவியும் செழித்திடப் பூந்தமிழ்த் தோப்பைத் புலமை தழைக்க உழுகின்றேன்!    2. விருத்தக் கவிகள் விருந்தென இன்பம் விளைத்திடும் என்றே..நான் உண்டேனே! பொருத்த முடனே கருத்தைப் புனையும் புதுமைத் திறனை..நான் கொண்டேனே!    3. வில்லொளிர் வீரனும் சொல்லொளிர் சீதையும் வெண்மிதிலை வீதியில் நோக்கினேரே! நல்லொளி பாக்கள் நவின்றிடும் என்னுள் நடையொளி காட்டியே தாக்கினரே!    4. என்றும் Read more

குகன் படகு பேசுகிறது!

தமிழ் வணக்கம் கற்கண்டு சொல்லேந்திக் கார்வண்ணன் வில்லேந்திக் கமழ்கின்ற தமிழே..நீ வாராய்! காலத்தை வெல்கின்ற கோலத்தை என்பாட்டில் கணக்கின்றி எந்நாளும் தாராய்! சொற்கொண்டு வையத்தை நற்றூய்மை நான்செய்யச் சுடர்கின்ற தமிழே..நீ வாராய்! சொக்கட்டான் கோடாக இக்கட்டே இல்லாமல் தொடர்கின்ற சீர்வேண்டும் நேராய்! பொற்புண்டு! புகழுண்டு! கற்புண்டு! கனிவுண்டு! பொலிகின்ற தமிழே..நீ வாராய்! பொன்னான என்னாவைத் தண்ணீரின் படகாக்கிக் கண்ணான கவிவேண்டும் சீராய்! வற்புண்டு! வடிவண்டு! வெற்புண்டு! வியப்புண்டு! மணக்கின்ற தமிழே..நீ Read more

தமிழ்நெஞ்சம் அமின் வாழ்க!

கன்னல் கவியழகில் காதல் பெருக்கெடுத்து
மின்னும் தமிழ்நெஞ்சம் இன்னமினார்! – மன்னுபுகழ்
பின்னும் நிலையுறுக! பேறுகள் பெற்றோங்கி
இன்னும் கலையுறுக ஈங்கு!

அன்பின் பெருக்கால் அனைவரையும் ஆட்கொள்ளும்
இன்பத் தமிழ்நெஞ்சம் எம்அமினார்! – நன்வாழ்கை
அன்னை மொழியேந்தும்! முன்னை நெறியேந்தும்!
பொன்னை அகமேந்தும் பூத்து!

முனைவர் தமிழண்ணல் கையறுநிலை

வல்லதமிழ் ஓங்க வரலாற்றை நன்காய்ந்து
நல்லபுகழ் நுால்களை நல்கியவர்! – வெல்லுதமிழ்
அண்ணல் மறைந்திட்டார்! ஐயகோ! அன்பருளக்
கண்ணீர்க் கடலெனக் காண்!

ஓங்கும் தமிழணிக்கே ஒப்பில் தலைமையினைத்
தாங்கும் மறவர் தமிழண்ணல்! – ஈங்கெழா
நீடுதுயில் கொண்டதுமேன்? ஐயோ!தன் நெஞ்சுடைந்து
பாடுகுயில் தேடும் பறந்து!

மைக்காரி

கண்டும் காணாக் கண்மணியே – போகும்
கார ணமென்ன பொன்மணியே !
வண்டு விழியே மோகினியே – நீ
வாராய் அருகே மாங்கனியே !

மலரும் வண்டும் பேசுதடி – என்
மனதில் காதல் வீசுதடி !

விதி

சொத்து! சொத்து!! என்றே நாட்டை
முற்றும் சுரண்டி மூட்டை கட்டிச்
சுற்றும் மனிதா! சுழலும் விதியால்
அற்றுப் போகும் அமைத்த வாழ்வே!
கண்ணில் பட்ட காட்சிகள் தம்மை
எண்ணிப் பார்த்தே எழுதினேன் கவியே!

விதி

துன்பம் உற்றோர் துவண்டு உரைப்பர் நன்றே விதியால் நலிந்தோம் என்றே! இன்பம் உற்றோர் ஏனோ விதியை எண்ணிப் பார்த்தே ஏத்துதல் இல்லை! மதியைக் கொண்டு வறுமை போக்கி சதியை வெல்லல் விதியின் செயலே! முன்னைப் பிறப்பில் முடித்த வினைகள் மண்ணில் ஆன்மா மீண்டும் மலர்ந்தால் ஓடி வந்து ஒட்டிக் கொள்ளும்! பாடி இனிமைப் படைக்கும் ஐயா நல்லார் புரிந்த நன்னெறி வினைகள்! பொல்லார் புரிந்த புன்மைச் செயலால் வாடிக் கிடப்பர் Read more