மேதினம்!
உழைப்பால் பூத்த
மலர்வனம்!

வியர்வை முத்து!
வென்ற
புகழ்ச்சொத்து!

பாடுபடும் பாட்டாளி
பட்ட தொல்லை – நீக்கிப்
பழுத்த கொல்லை!

இரும்புருக்கு ஆலை
முதலாளியின்
இதயத்தை உருக்கிய நாள்!

செங்கொடி!
சூட்டிய திருநாள்! – இன்பம்
மீட்டிய பெருநாள்!

தொழிலாளர்
போராட்டம்! – பெற்ற
தேரோட்டம்!

உப்பு,
சருக்கரையாய்
இனித்த சுவைநாள்!

துயர்விளைத்த
தொழிலகம்!
எழிலகம் ஆனனாள்!

வாடிய நெசவாளர்
வலியே நீங்க
வழியே வகுத்தநாள்!

ஆளுவார்க்கம்
புரிந்த கொடுமை – ஒழிந்து
பொலிந்த பொதுமை!

உழைப்பாளர்
உலகின் முதுகெலும்பு!
உணர்த்திய நன்னாள்!

உரிமைக்குரல்
முழங்கிய தோழர் – பெருமை
வழங்கிய வன்னாள்!

சுற்றிய மாடெனத் – துயர்
முற்றிய மாந்தர் – நலம்
பற்றிய புகழ்நாள்!

வெந்து நொந்த
வேதனை நீங்கி – நலச்
சாதனை தந்தநாள்!

கடும்பணியாளர்
வேலி உடைந்தநாள் – நற்
கூலி அடைந்தநாள்!

அடிமையென வேலை
ஆற்றும் மக்கள் – வென்று
போற்றும் புவிநாள்!

அன்பே தெய்வம்!
உழைப்பே தெய்வம்!
உணர்வாய் மனமே!

உண்மை வாழி!
உயர்ந்தோர் வாழி!
உழைப்போர் வாழி!

பாட்டரசர் கி. பாரதிதாசன்

Categories: கவிதை

1 Comment

Your code of destiny · ஏப்ரல் 16, 2025 at 17 h 04 min

I’m extremely inspired together with your writing skills as well as with the format for your blog. Is that this a paid subject or did you modify it your self? Anyway keep up the nice high quality writing, it’s uncommon to see a nice weblog like this one these days!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.