உழைக்கும் கைகள்
—— உண்மையின் வேர்கள் – இவை
தழைத்தல் இல்லா
—— சருகு இலைகள்.

உலகை உயர்த்த
—— உதித்த மலர்கள் – இவை
உலகோர் உண்ண
—— உதிர்ந்த கனிகள்.

இருளை ஒளியால்
—— நிறைத்த திரிகள் – இவை
திருட்டு உலகில்
—— திணறும் ரணங்கள்.

வியர்வைத் துளியில்
—— விளைந்த விதைகள்ள – பிறர்
துயரம் போக்க
—— தோன்றிய மரங்கள்.

ஓய்தல் இல்லா
—— உயிரின் வலிகள் – என்றும்
சாய்தல் இல்லா
—— சரித்திர மலைகள்.

உழைப்பவன் என்றும்
—— கூரைக் குடிசையில் -அவன்
உழைப்பை உறிஞ்சும்
—— உத்தமர் கோடியில்

உழைப்பைப் போற்றும்
—— உன்னத மனங்கள் – அவை
பிழைகள்  இல்லா
—— பிஞ்சுக் கரங்கள்.

அந்தி  வானைப்
—— பிளக்கும் உளிகள் – வரும்
ஆண்டு முழுவதும்
—— அவனுக்கான நாட்கள்..

Categories: கவிதை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.