மண்ணும் மொழியினம் மாற்றான் கையில்

மண்ணும் மொழியினம் மாற்றான் கையில் இன்னும் என்னடா இமைக்குள் உறக்கம்? எழுந்து வாடா எரிதழல் போல பழுதை எல்லாம் பட்டென எரித்திடு! ஆண்ட இனமே அடிமை வாழ்வா? மாண்டது போதும் மற்போர் செய்திடு! அடிமை வாழ்வை அடித்து விரட்டு விடிவு பிறந்திட விழியைத் திறந்திடு மான மறவா! மண்ணை மீட்டிடு வானம் கூட வந்து வாழ்த்திடும் தமிழ்நிலம் எங்கும் தர்ப்பை புல்லே அமிழ்த தமிழை அயலான் அழித்தான் உன்மொழி பேசிட Read more

இயற்கை அழகு!

முத்துக்களைக் கோர்த்துவந்து முறுவலிக்கும் பற்களென்றாய், கெழுத்திமீனை எடுத்துவந்து கண்களெனக் காட்டுகின்றாய். முந்திரிப்பழம் கொண்டுவந்து மூக்கென்றே வாசிக்கிறாய், கோவைப்பழம் எடுத்துவந்து கூறுகிறாய் இதழென்று. கருமுகிலைத் தாங்கிவந்து கருங்கூந்தல் தானென்றாய், சங்கினையே தருவித்துச் சங்கீதக் கழுத்தென்றாய். செரியினையே பதித்துவிட்டு செந்தூரக் கன்னமென்றாய், மல்கோவா மறுதலிக்க மாம்பழமே முகமென்றாய். மட்டைப்பந்து மைதானம் மங்கையுந்தன் நெற்றியென்றாய், மன்மதனின் வில்லாக மணக்குமிந்த இமையுமென்றாய்.

உழவுத் தோழன்… (மண்புழுக்கள்)

மண்மகள் மடியில் உழன்றாடி மழைமேகத் துளியில் உடல்நீராடி மக்கியத் தழைகளில் விருந்தோம்பி மண்ணைப் பொன்னாக்கும் அபரஞ்சி வளை உருளையாய் நீள்கொண்டு தசை நார்களால் இடம் பெயரும் இனம் நிலைக்க கிளைடெல்லம் இடை துண்டாயின் மீள்கொள்ளும் ஏர்முனை துணையாய் முன் உழுது வேர்முனை சுவாசம் சீராக்கி போரடிக்கும் களத்தை மிருதாக்கி நீரோட்டம் பயத்திடும் மண்ணுயிரி மரித்த மண்ணை உயிர்த்திடும் சஞ்சீவி களிமண் குழைவை முறித்திடும் காஞ்சுகி வேர்காய்ப்பை தணிக்கும் பஞ்சக்கிருதி கார்பொழிவில் Read more

தமிழாய் வாழ்ந்த தண்டமிழ் பாரதி

ஆங்கிலேயன் ஆட்சிசெய்த அடிமை மண்ணில்       அருங்கவிஞர் பாரதிதான் வாழ்ந்தி டாமல் பாங்கான புதுச்சேரி மண்ணில் வாழ்ந்து       பாரதத்து விடுதலையின் உணர்வை ஏற்றும் தீங்கனலில் கவிதைகளை இயற்றி வந்த       திரைமறைவு செய்தியினை அறிந்த வ.ரா ஓங்குபுகழ் பாரதியைக் காண்ப தற்கே       ஓரிரவு அவரிருந்த வீடு சென்றார்! மூடியுள்ள கதவுதனைத் தட்டும் போது     Read more

தை மகளே பொங்கி வா

மார்கழிப் பனிப்பொழிவு மெல்லக் குறைந்திட ஊர்முழுதும் செங்கரும்புகள் காட்சியளிக்க வார்த்தெடுத்த புதுப்பானைகள் பொலிவாக சேர்குழலியாய் தைமகள் தரணி வருகிறாளே… மழைமகள் குறைவாக அருளிய மழையிலும் பிழையில்லா விளைச்சல் நெல் வீடு வரவே உழைத்த உழைப்பின் பயன் உழவருக்கென்றாக பிழைக்கும் பிழைப்புக்கு நன்றி சொல்லிடவே… ஊர்கூடிப் பொங்கல் வீடுதோறும் வைத்திட தேர் ஓடும் வீதியெல்லாம் மாக்கோலம் மிளிர நார் இன்றிப் பூக்களின் அலங்காரம் மனம்மயக்க வேர் ஓடும் தமிழர் திருநாள் பொங்க Read more

பொங்கல் வாழ்த்து

தழைக்கவே வந்தாள் தரணியில் தைப்பெண் தமிழும் செழிக்கத் தலைமகள் வந்தாள்! எங்கும் பொதுமை ஏற்கும் வண்ணம் தங்க ஒளியை தந்த கதிரோன்! பொங்கும் மகிழ்வு புதுப்புதுப் பானையில் பொங்கலோ பொங்கல் பூமிப் பந்தில்! வந்தது பொங்கல் வளமே ஓங்க! வந்தது கரும்பு வளர்ந்தது வாழை! பழையன கழிவன புதியன பொலிந்தன! மழையெனச் செந்நெல் மண்மேல் குவிந்தன! போகியும் போனது! பொங்கின மனங்கள்! ஏகிய செயல்கள் ஏற்றம் கண்டன! மஞ்சள் செழித்தது! Read more

கண்மணியே நீவாழி!

மணமுடித்த மங்கையே நீவாழி! மங்கலம்நிறை தங்கையே நீவாழி! கனவுயாவும் நிறைவேறி நீமகிழ காட்சிதரும் கண்மணியே நீவாழி! புகுந்தவீடு புகழ்பெற்றல் போலுனது பிறந்தவீடு மனமகிழவும் செய்திடணும், கண்ணிறைந்த கணவனவன் செயல்களிலே கட்டாயம் உன்விருப்பம் கலந்திடணும். மாமனாரும் மாமியாரும் போற்றுகின்ற மருமகளாய் எந்நாளும் திகழ்ந்திடணும், குடும்பத்தின் பொன்விளக்காய் நீயிருந்து கோவிலாக வீட்டைநீ மாற்றிடணும். நாத்தனாரின் உறவுகளை வெறுத்திடாமல் நீஅவர்க்கு உதவியாக இருந்திடணும், பெற்றவர்கள் உனதன்பில் மனமகிழ்ந்து பேரின்பம் கண்டவரும் உணர்ந்திடணும். புன்முறுவல் பூக்கின்ற Read more

எழுகின்ற விடியல்

எழுகின்ற விடியலிலே இனிமை வேண்டும்       ஏரியிலே தூயதண்ணீர் ஓட வேண்டும் உழுகின்ற நிலத்தினையும் காக்க வேண்டும்       உணவினிலே விடங்கலக்கா தர்மம் வேண்டும் இழுக்கல்ல போராட்டம் தெளிதல் வேண்டும்       இகல்வெல்ல ஒன்றிணைந்தே முயல வேண்டும் விழுகின்ற தலைமுறையும் வாழ வேண்டும்       விடியலிலே புதுதேசம் மலர வேண்டும் சொந்தத்தில் அறிவுடைமை வளர வேண்டும்     Read more

சொர்க்கத்தைக் காட்டும்

பொன்னந்தி மாலையிலே       பொங்கிவரும் பாட்டு! – உன் புன்னகையில் தான்மயங்கிப்       பூத்ததுள்ளம் கேட்டு! தென்றலுடன் ஆடிடுதே       தென்னையிளங் கீற்று – பேசும் செவ்வலகு கிள்ளையொன்று       சித்திரம்போல் வீற்று!! செம்மஞ்சள் சூரியனும்       செல்லும் விடைபெற்று! – அந்த செம்மாந்தப் பேரொளியோ       செம்பவளத் தட்டு! நம்மிதயம் சேர்ந்திணையும் Read more

வாழ்வின் சிறப்பு!

உயர்வா யுலகில் பிறந்தாலும்       உயிரை மாய்த்தே வாழ்கின்றோம் மயக்கும் வாழ்வை மனதார       மடியில் கிடத்தி மகிழ்கின்றோம் துயரே துயரே துயரென்று       துடித்தே வாழ்ந்து மடிகின்றோம் வியப்பாய் வாழத் துடித்தாலும்       விரிசல் கொண்டே வாழுகிறோம்! தயங்கித் தயங்கி வாழ்வோரும்       தமக்குள் புழுங்கிக் கிடக்கின்றார் பயக்கும் நன்மை புரிபவரோ     Read more