மண்ணும் மொழியினம் மாற்றான் கையில்
இன்னும் என்னடா இமைக்குள் உறக்கம்?

எழுந்து வாடா எரிதழல் போல
பழுதை எல்லாம் பட்டென எரித்திடு!

ஆண்ட இனமே அடிமை வாழ்வா?
மாண்டது போதும் மற்போர் செய்திடு!

அடிமை வாழ்வை அடித்து விரட்டு
விடிவு பிறந்திட விழியைத் திறந்திடு

மான மறவா! மண்ணை மீட்டிடு
வானம் கூட வந்து வாழ்த்திடும்

தமிழ்நிலம் எங்கும் தர்ப்பை புல்லே
அமிழ்த தமிழை அயலான் அழித்தான்

உன்மொழி பேசிட உனக்குரிமை இல்லை
நன்மொழி மறந்து நஞ்சாய் பேசினை

உலகில் உன்போல் உள்ளவர் இல்லை
நிலத்தை இழந்து நடுத்தெரு வந்தாய்

ஆதி குடிநீ ஆண்ட மறவா!
ஏதி்லி போல எங்கும் திரி்கிறாய்

வேண்டாம் இழிவு விலங்கை உடைத்திடு
பூண்டோம் போர்க்களம் புலியென புறப்படு

பகைகள் எல்லாம் பரிதிமுன் காரிருள்
தொகையாய் சேர்த்திடு தொல்லைகள் விலகும்

அரிமா தமிழா! அடங்கல் முறையா?
நரிமா ஆள நடுங்கிக் கிடப்பதா?

கரிமா எனவே காட்டு உன்திறன்
பரிமா போல பாய்ந்து குதித்திடு

உன்மொழி தமிழ்மொழி உன் இனம் தமிழினம்
உன்நிலம் தமிழ்நிலம் உணர்ந்திடு நன்றே

மொழியினம் நாட்டை மீட்க
விழித்தெழு இன்றே வீறுடன் மறவா!

 


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

மரபுக் கவிதை

அண்ணா

வினைச்சொல்லாய் வேதியத்தின் இருள கற்றி
விடியல்தர வந்துதித்த கதிர வன்நீ!
முனைச்சொல்லாய்க் கூர்படைத்த கூர்ப டைத்துக்
குத்தீட்டிச் சொல்வடித்த உலைக்க ளம்நீ!
பிணைச்சொல்லாய்ப் பிரிந்துபட்ட தமிழி னத்தைப்
பேரினமாய்த் திரளவைத்த பெருந்தி றம்நீ!

 » Read more about: அண்ணா  »

மரபுக் கவிதை

அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற அரசியல் சகாப்தமாக வாழ்ந்து சாதித்து மறைந்த ஒரு மாபெரும் மேதை பேரறிஞர் அண்ணா அவர்கள் என்றால் அது கிஞ்சித்தும் மிகையாகாது. ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து கல்வியாலும் உழைப்பாலும் உயர்ந்து தன் நாவன்மையால் தமிழகமக்களைக் கட்டிப்போட்டு,

 » Read more about: அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)  »