உழவுத் தோழன்… (மண்புழுக்கள்)

மண்மகள் மடியில் உழன்றாடி மழைமேகத் துளியில் உடல்நீராடி மக்கியத் தழைகளில் விருந்தோம்பி மண்ணைப் பொன்னாக்கும் அபரஞ்சி வளை உருளையாய் நீள்கொண்டு தசை நார்களால் இடம் பெயரும் இனம் நிலைக்க கிளைடெல்லம் இடை துண்டாயின் மீள்கொள்ளும் ஏர்முனை துணையாய் முன் உழுது வேர்முனை சுவாசம் சீராக்கி போரடிக்கும் களத்தை மிருதாக்கி நீரோட்டம் பயத்திடும் மண்ணுயிரி மரித்த மண்ணை உயிர்த்திடும் சஞ்சீவி களிமண் குழைவை முறித்திடும் காஞ்சுகி வேர்காய்ப்பை தணிக்கும் பஞ்சக்கிருதி கார்பொழிவில் Read more

எனக்குப் பிடித்த தனிமையுடன்….

வெகுநேரம் மௌனத்துடன் பேசிக் கொண்டே இருக்கின்றேன் எனக்குள்ளே தொலைந்து தொலைந்து என்னையே நான் தேடுகிறேன் எனக்குள்ளே வினாக்கள் தொடுத்து இதமான விடையை எழுதுகிறேன் மனக் கணக்கு போட்டு போட்டு சாதக விடியலைக் காண்கின்றேன் கண்களுக்குள்ளே கனவுகள் பதித்து கவிதைகள் நூறு படைக்கின்றேன் கதைகளுக்குள்ளே ஆழ்ந்து மூழ்கி கதாப்பாத்திரங்களுடன் உறவாடுகின்றேன் கடந்துபோன ஞாபகங்களை இதய ஏட்டில் புரட்டுகிறேன் காயப்பட்ட நிகழ்வுகளுக்கு மறதியை மருந்தாய் பூசுகிறேன் மாய உலகில் சஞ்சரித்து மறுமையைக் காணத் Read more

சாதிக்கு சிதை மூட்டிய செங்கமலம்!

வேப்பமர தண் நிழலில் உதிர்ந்த மலர் வெளிர் கம்பளம் விரிக்க வான் சொரியும் பன்னீர் துளியால் தேன் சுரந்து வண்டுகள் கிறங்க மார் முலைக்குள் முகம் புதைத்த மதலையின் மணி பால் பற்கள் தூர் பதிந்த வெண் முத்தாய் வேர் பிடித்து உயிர் துளிர்க்கும் ஏர் உழவன் சால் இறைக்க விழித்த பயிர் நீர் குடிக்க போர்களத்துச் சிப்பாய் போல் மார்விறைத்து தோள் உயர்த்தும் அங்கே……. சேற்றிடை அலர்ந்த செங்கமலம் Read more

தென்றல்விடு தூது!

தென்றல் அவள் மேலாடை தென்றல் அது தாலாட்ட மேலெழுந்த அவள் நூலாடை முக்காடாய் அவன் முகம் வருட வசியம் செய்யும் அவள் வாசம் சுவாசமாய் அவன் நாசிபுக முழுதாய் அவளை முழுங்கிவிட அனுபவக் காற்றை தூதுவிட்டான் எடுத்திடவோ கொடுத்திடவோ காதல் மட்டுமே அவன் கையிருப்பாய் மறுத்திடவோ ஏற்றிடவோ நாணம் மட்டுமே அவள் தவிப்பாய் மண்ணில் திரியும் நிலவுமகள் கண்ணுக்குள் அவனைக் குவிக்க இடை புகுந்த துணைக் காற்று எட்டப்பனாய் காட்டிக் Read more

அகழ்வாராய்ச்சி!

வாழ்க்கைச் சக்கரம் பலகாதம் சுழன்று காதோரம் நரைத்தட்டி காய்ப்புகளேறி வடுவாய்… உள்ளிருந்து உறுத்தும் புண்களை ஆற்றிட நெஞ்சகக்கூட்டின் புதையுண்ட இளமை சுவடுகளை நினைவேடுகளாய் புரட்டி அகழ்வாராய்ந்தான் ஓரமாய் நனைந்துக் கிடந்தன இதய அஞ்சல்கள்…. மௌன சாம்ராஜ்யத்தில் மண்டியிட்டுக் கிடந்த சலனமற்ற நிறைதெப்ப மனதில் சட்டென வீழ்ந்த கூழாங்கல் நினைவுகள் நெற்றிப் பொட்டில் துடிப்பாய் தெறிக்க ததும்பும் தடாக இருவிழிகள் கசிந்து கன்னங்கள் தடையின்றி வடிகாலாயின தூரெடுக்கப்பட்ட ஆழ்மன கிணற்றில் வேரொடு Read more

தற்காப்புக் கலையே பிரணவமாகும்..!

நசையெலாம் நனவாய் நிகழ்த்திட —– அசைமலர் அடர் நந்தவனத்தே பூசை கொள் தலைவன் வருகைக்காய் —– ஆசையால் அலர்விழி காத்திருந்தாள் கண்ணனவன் கழற் கூடிடுவான் —– முன்னமவன் செப்பிய வாக்கால் கன்னம் வைக்கும் கைச்சிறையில் —– கன்னிமயில் யான் மெய்துறப்பேன் எண்ணியே விண்ணகத் தாரகை —– எண்திசை நோக்கி நின்றாள் மண்ணொளி கதிரோன் மறைய —– மாலைமகள் மகிழிருள் சூழ்ந்தாள் கண்ணிமை உலர்ந்து சோர —– காலத்தோடு கரைந்து கதழ்ந்தாள் Read more

காற்றாடியின் இலட்சியப் பயணம் …

உள்ளத்தில் உரத்தை ஏற்றியது
உறுதி கொண்டு விண்ணை நோக்கியது
உற்சாகக் குருதி உடலை கிளர்ந்தது
நம்பிக்கை ஒளி கொந்துதலால்
தும்பிக்கை பலம் உந்துதலால்
எம்பி எம்பி உயர எழுந்தது
எதிர்படு இடர்களை கடந்தது
எதிர்நோக்கு உச்சியை எய்தது

பொங்கலோ பொங்கல் ..!

ஏர் தந்த சீதனத்தை
பார் கண்ட எளியவர்க்கு
கார் கொண்ட உள்ளத்தால்
சீர் கொண்டு பகிர்ந்தளித்து

பொங்கிடும் அவர் புன்னகையில்
புதுப் பொங்கல் சமைத்திடுவோம் !!!