ஆனந்தத் தாண்டவம் ஆடி
அந்தரத்தில் அபிநயம் காட்டி
அண்டத்தில் மின்னும் சிற்றொளியாய்
ஆர்பரித்து திரிந்தன பல காற்றாடிகள்

விசும்பை உரசிய அகங்காரத்தில்
விண்ணை நோக்கிப் பறக்கத் துடிக்கும்
ஒரு சிற்றிளம் காற்றாடி முயற்சி கண்டு
வெந்தணல் கூட்டும் ஏளனம் பேசி
சிற்றிளம் மதலையின் மனதை உடைத்தன…..

எண்ணங்கள் உயர்வாய் இருப்பினும்
திண்ணம் தளர்ந்ததால் சாய்ந்து
வண்மை இழந்த வாலிபமாய்
மண்ணைக் கவ்வியது சிறு காற்றாடி…..

வெற்றி பெற்ற வேந்தனாய்
மிடுக்காய் பறக்கும் காற்றாடிகள் கண்டு
வெட்கி வேதனையில் கசிந்தது……

கலங்கி அழுவதால் பயனில்லை
காத்திருந்தால் காலம் கை கூடுவதில்லை
முயலாமையை முடிந்து வைத்தால்
இயலாமை நமக்கு இயல்பாய்  போய்விடும்……

காற்றின் சீற்றத்தால் தடுமாற்றம்
கட்டிய நூலிழையால் சிறு நடுக்கம்…….

உள்ளத்தில் உரத்தை ஏற்றியது
உறுதி கொண்டு விண்ணை நோக்கியது
உற்சாகக் குருதி உடலை கிளர்ந்தது
நம்பிக்கை ஒளி கொந்துதலால்
தும்பிக்கை பலம் உந்துதலால்
எம்பி எம்பி உயர எழுந்தது
எதிர்படு இடர்களை கடந்தது
எதிர்நோக்கு உச்சியை எய்தது

எள்ளி நகையாடிய ஏமாப்புகள்
தள்ளி நகர்ந்து தலை கவிழ்ந்தன……

ஆகாசம் அண்டிய சிற்றிளமோ
சாகசக் களிப்பில் துள்ளியது
அருகில் பறந்த நேசங்களுடன்
அளவளாவி மகிழ்வைப் பகிர்ந்தது……

இலக்கு அங்கு முடியவில்லை
இதயத்தில் துடிதுடிப்பு அடங்கவில்லை
அனிச்சை அதற்கு அனுகூலமானது
அடைவு இல்லா அண்டசராசரம்
அடுத்த அதன் அடுகளமானது……

இகழ்ச்சி வாழ்வில் துச்சமே
வீழ்ச்சி துவண்டால் நிச்சயமே
எழுச்சி நெஞ்சில் பரிச்சயமானால்
புகழ்ச்சி ஆரம் என்றும் உன்வசமே!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...