பண்பின் சிறப்பைப் பேசிடுவார்
பக்கத்தில் பரத்தையர் துணை கொண்டு…

அன்பால் உலகை ஆள்வேன் என்பார்
ஆயுதத் துணையுடன் உலா வந்து…

நற்றமிழே என் உயிர் என்பார்
நாவில் தமிழ் உயிர் ஊசலாட…

பெற்ற சுதந்திரம் பேண் என்பார்
மற்றவர் உரிமையை களவாடி…

ஒற்றுமையே உயர் வழி என்பார்
பற்றுக் கொண்டு மத பேதம் பேசி…

கற்றது வழி என் நடை என்பார்
கயமையே தன் வாழ்வில் மூலதனமாய்…

பற்றற்ற ஞானி யான் என்பார்
பட்டுக் கம்பளத்தில் நடந்து கொண்டே…

உற்ற குணம் ஒன்றிருக்க
மற்றவர் பார்வைக்கு பவித்திரமாய்
வெற்று வார்த்தைகள் பேசும் இவர்கள்
ஏற்றம் கொண்டுத் திரிந்தாலும்
துரு நாற்றம் வீசும் கழி பிணங்கள்…!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.