மண்மகள் மடியில் உழன்றாடி
மழைமேகத் துளியில் உடல்நீராடி
மக்கியத் தழைகளில் விருந்தோம்பி
மண்ணைப் பொன்னாக்கும் அபரஞ்சி

வளை உருளையாய் நீள்கொண்டு
தசை நார்களால் இடம் பெயரும்
இனம் நிலைக்க கிளைடெல்லம்
இடை துண்டாயின் மீள்கொள்ளும்

ஏர்முனை துணையாய் முன் உழுது
வேர்முனை சுவாசம் சீராக்கி
போரடிக்கும் களத்தை மிருதாக்கி
நீரோட்டம் பயத்திடும் மண்ணுயிரி

மரித்த மண்ணை உயிர்த்திடும் சஞ்சீவி
களிமண் குழைவை முறித்திடும் காஞ்சுகி
வேர்காய்ப்பை தணிக்கும் பஞ்சக்கிருதி
கார்பொழிவில் மண்ணரிப்பை தடுக்கும் பஞ்சமி

ஆண்பெண் அற்ற அர்த்தநாரீ
அகிலம் காக்கும் சுவீகாரி
அரை இருபக்கச் சமச்சீர் உடலி
அயனவன் படைப்பில் கொடையாளி

உழவனின் உண்மை உதவிக்கரம்
உக்கிரமாய் உயர்த்தும் மண்ணின் தரம்
உகமகள் ஊழியனாய் உச்சவரம்
உச்சிட்ட உண்டையாய் மண்புழுஉரம்

பாரதத்தின் மண்புழுக்கள் பலநூறு ரகம்
அறுவகையே பயன்தரும் மண்புழுஉரம்
முறையாய் காப்பின் மண்வளம் பெருகும்
மூன்று போகமும் மகசூல் அரும்பும்

வளைதசைப் புழுக்களைப் பெருக்கிடுவோம்
மண்புழுஉரங்கள் உற்பத்தி செய்திடுவோம்
பொன்பொருள் சந்ததிகளுக்கு சேர்ப்பதைவிட
மண்வளம் குன்றாது வளம் காத்திடுவோம்!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

மரபுக் கவிதை

அண்ணா

வினைச்சொல்லாய் வேதியத்தின் இருள கற்றி
விடியல்தர வந்துதித்த கதிர வன்நீ!
முனைச்சொல்லாய்க் கூர்படைத்த கூர்ப டைத்துக்
குத்தீட்டிச் சொல்வடித்த உலைக்க ளம்நீ!
பிணைச்சொல்லாய்ப் பிரிந்துபட்ட தமிழி னத்தைப்
பேரினமாய்த் திரளவைத்த பெருந்தி றம்நீ!

 » Read more about: அண்ணா  »