திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 100

பாடல் – 100 பத்திமை சான்ற படையும் பலர்தொகினும் எத்துணையும் அஞ்சா எயிலரணும் – வைத்தமைந்த எண்ணின் உலவா விழுநிதியும் இம்மூன்றும் மண்ணாளும் வேந்தர்க் குறுப்பு. (இ-ள்.) பத்திமை சான்ற – (தம்மேல்) அன்பு நிறைந்த, படையும் – சேனையும்; பலர் தொகினும் – பகைவர் பலர்கூடி எதிர்ப்பினும், எத்துணையும் – எவ்வளவும், அஞ்சா – பயப்பட வேண்டாத, எயில் அரணும் – மதிலரணும்; வைத்து – வைக்கப்பட்டு, அமைந்து Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 99

பாடல் – 99 கற்றாரைக் கைவிட்டு வாழ்தலும் காமுற்ற பெட்டாங்கு செய்தொழுகும் பேதையும் – முட்டின்றி அல்லவை செய்யும் அலவலையும் இம்மூவர் நல்லுலகம் சேரா தவர். (இ-ள்.) கற்றாரை – கற்றறிவுடையாரை, கைவிட்டு – முற்றும் விட்டு நீக்கி, வாழ்தலும் – வாழ்பவனும்; காமுற்ற – தான் விரும்பியவற்றை, பெட்டாங்கு – விரும்பினாற்போல, செய்து ஒழுகும் – செய்து நடக்கும், பேதையும் – அறிவில்லாதவனும்; முட்டு இன்றி – தடையில்லாமல், Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 98

பாடல் – 98 செந்தீ முதல்வர் அறம்நினைந்து வாழ்தலும் வெஞ்சின வேந்தன் முறைநெறியில் சேர்தலும் பெண்பால் கொழுநன் வழிச்செலவும் இம்மூன்றும் திங்கள்மும் மாரிக்கு வித்து. (இ-ள்.) செந்தீ – வேள்விச் செந்தீயை, முதல்வர் – வளர்கின்ற அந்தணர்கள், அறம் – தமக்குரிய அறத்தை, நினைந்து வாழ்தலும் – மறவாது வாழ்தலும்; வெம் சின வேந்தன் – கொடுமையாகிய கோபத்தைக் காட்டுகின்ற அரசன், முறை நெறியில் – முறையாக ஆளும் வழியில்; Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 97

பாடல் – 97 ஐங்குரவ ராணை மறுத்தலும் ஆர்வுற்ற எஞ்சாத நட்பினுள் பொய்வழக்கும் – நெஞ்சமர்ந்த கற்புடை யாளைத் துறத்தலும் இம்மூன்றும் நற்புடையி லாளர் தொழில். (இ-ள்.) ஐங்குரவர் – ஐந்து பெரியோர்களுடைய, ஆணை – கட்டளையை, மறுத்தலும் – மறுத்து நடத்தலும்; ஆர்வு உற்ற – விரும்பிய, எஞ்சாத – குறையாமல் வளர்கின்ற; நட்பினுள் – நட்புச் செய்வாரிடத்து, பொய் வழக்கும் – பொய் பேசுதலும்; நெஞ்சு அமர்ந்த Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 96

பாடல் – 96 கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி கொண்டன செய்வகை செய்வான் தவசி கொடிதொரீஇ நல்லவை செய்வான் அரசன் இவர்மூவர் பெய்யெனப் பெய்யும் மழை. (இ-ள்.) கொண்டான் – கொண்ட கணவனுடைய, குறிப்பு அறிவாள் – குறிப்பறிந்து நடக்கின்றவள், பெண்டாட்டி – மனைவியாவாள் : கொண்டன – தான் மேற்கொண்ட விரதங்களை, செய்வகை – செய்யும் முறைப்படி, செய்பவன் – செய்பவன், தவசி – தவசியாவன்; கொடிது – தீங்கினை, Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 95

பாடல் – 95 அறிவழுங்கத் தின்னும் பசிநோயும் மாந்தர் செறிவழுங்கத் தோன்றும் விழைவும் – செறுநரின் வெவ்வுரை நோனு வெகுள்வும் இவைமூன்றும் நல்வினை நீக்கும் படை. (இ-ள்.) அறிவு அழுங்க – நல்லறிவு கெடும்படி, தின்னும் – வருத்துகின்ற, பசிநோயும் – பசியாகிய நோயும், மாந்தர் – நல்லோர், செறிவு அழுங்க – நெருங்குதல் கெடும்படி, தோன்றும் விழைவும் – உண்டாகும் விருப்பமும்; செறுநரின் – பகைவரிடத்துண்டாகும், வெவ்வுரை – Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 94

பாடல் – 94 நண்பில்லார் மாட்டு நசைக்கிழமை செய்வானும் பெண்பாலைக் காப்பிகழும் பேதையும் – பண்பில் இழுக்கான சொல்லாடு வானுமிம் மூவர் ஒழுக்கம் கடைப்பிடியா தார். (இ-ள்.) நண்பு – நட்புக்குணம், இல்லார்மாட்டு – இல்லாதவரிடத்தும், நசைக்கிழமை – அன்புரிமையை, செய்வானும் – செய்கின்றவனும்; பெண்பாலை – மனைவியை, காப்பு – காப்பதை, இகழும் – இகழுகின்ற, பேதையும் – அறிவில்லாதவனும்; பண்பு இல் – குணமில்லாத இழுக்கு ஆன Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 93

பாடல் – 93 இருளாய்க் கழியும் உலகமும் யாதும் தெரியா துரைக்கும் வெகுள்வும் – பொருளல்ல காதல் படுக்கும் விழைவும் இவைமூன்றும் பேதைமை வாழும் உயிர்க்கு. (இ-ள்.) இருளாய் – (அறிவில்லாதவர்க்கிடமாய் அதனால்) இருட்டாய், கழியும் – நாள்கழிக்கின்ற, உலகமும் – இடமும், யாதும், (நன்மை தீமைகளில்) ஒன்றும், தெரியாது – தெரியாமல், உரைக்கும் – சொல்கின்ற, வெகுள்வும் – கோபமும்; பொருள் அல்ல – நற் பொருள் அல்லாதவற்றில், Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 92

பாடல் – 92 விழுத்திணைத் தோன்றா தவனும் எழுத்தினை யொன்றும் உணராத ஏழையும் – என்றும் இறந்துரை காமுறு வானுமிம் மூவர் பிறந்தும் பிறவா தவர். (இ-ள்.) விழுத்திணை – (அற ஒழுக்கங்களைப் பெறுதற்குரிய) சிறந்த குலத்தில், தோன்றாதவனும் – பிறவாதவனும்; எழுத்தினை – இலக்கண நூலை, ஒன்றும் உணராத – எவ்வளவு சிறிதும் அறிந்து கொள்ளாத, ஏழையும் – பேதையும்; என்றும் – எப்பொழுதும்; இறந்து – முறைதப்பி, Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 91

பாடல் – 91 பெறுதிக்கண் பொச்சாந் துரைத்தல் உயிரை இறுதிக்கண் யாமிழந்தோம் என்றல் – மறுவந்து தன்னுடம்பு கன்றுங்கால் நாணுதல் இம்மூன்றும் மன்னா உடம்பின் குறி. (இ-ள்.) உயிரை – (தாய் தந்தைமுதலிய) உயிர்களை, பெறுதிக்கண் – பெற்றவிடத்து, பொச்சாந்து – (பெற்றோர் தமக்குச் செய்த உதவியையும், தாம் அவர்க்குச் செய்ய வேண்டிய உதவியையும்) மறந்து, உரைத்தல் – இகழ்ந்து சொல்லுதலும்; இறுதிக்கண் – அவர் தம் காலமுடிவில், நாம் Read more