உலாவரும் நிலா

உலாவரும் நிலவொன்றை — உன்னதமாய்த் தாய்காட்டி நிலாச்சோறு ஊட்டுகின்ற — நிம்மதிதான் வேண்டுமென்று பலாசுவையாய் அமுதூட்டப் — பக்குவமாய் வாய்த்திறக்க நிலாமகளை நினைந்துகொண்டு — நீண்டுவிடும் என்கைகளே !! அன்னைதந்த சோற்றினையும் — அகமகிழ்ந்து உண்ணுகின்றேன் முன்பின்னே அறிந்ததில்லை — முகமலர்ந்து நிற்கின்றேன் அன்புடைய கைகளினால் — அமுதத்தைத் தந்துநின்றாள் என்னுடனே அவளிருந்து — எனக்களித்தாள் பாசத்தை . வண்ணமகள் அன்னையிங்கே — வாடிடலும் கூடாதென்றே திண்ணமுடன் நிலாச்சோறு — Read more

பாடலாசிரியர் நா. முத்துக்குமாருக்கு அஞ்சலி

கவியுலகின் நன்முத்து கண்மூடிக் கொண்டது , பொன்னுலகு தேடியே புறப்பட்டு விட்டது . திரையில் ஜொலித்த தீந்தமிழ் வைரம் , திசைமாறிப் போனதால் திக்கெட்டும் துயரம் . மரணம் இவரை மார்பில் சுமந்து திறமை முழுவதையும் தின்றுத் தீர்த்தது . காலன் இவரின் கணக்கை முடித்தான் , காலனின் கணக்கை யார்தான் முடிப்பது ? எரிகின்ற விளக்கு எப்படித்தான் அணைந்தது ? ஒளியினை இழந்து உயர்வானில் இணைந்ததே ! ஆனந்த Read more

நா.முத்துக்குமார் பாடலாசிரியருக்கு கவிதாஞ்சலி

பாட்டொன்று எழுதுவதற்கு அமர்ந்து விட்டால் பசிதூக்கம் அத்தனையும் மறந்தே போய் மெட்டினையே நினைவினிலே அசை போட்டு மெல்லிசையை அதனிலே கரைவ தற்கே இட்டமுடன் பாட்டெழுதி தந்து விட்டு இமைமூடாமல் இருந்தது எத்தனை நாளோ ? பூட்டிவைத்த இதயங்கள் கொண்ட பேரும் பொன்னான உன்பாட்டில் கரைந்த னரே ! வெள்ளித் திரையதற்கு பாடல் போதுமென வான்திரைக்கு வந்த்துவோ ஆசை கொஞ்சம் அள்ளித்தான் அணைத்த்துவே அன்பு கவியை அரும்பாடல் தனைசெய்து தேசத்தின் விருதினை Read more

உன்னதமாம் சுதந்திரத்தை உயிராகக் காப்போம்!

காந்தியெனும் உத்தமரால் சுதந்திரத்தைக் கண்டோம்! ….. காவிவண்ணத் தியாகத்தை அவருருவில் கண்டோம்! சாந்தியெனும் சத்தியத்தின் சீலராகக் கண்டோம்! ….. சரித்திரத்தில் வெள்ளைவண்ணத் தவஒளியைக் கண்டோம்! காந்தியத்தின் மகிமையெல்லாம் கற்பதிலே கண்டோம்! ….. கருத்தானப் பசுமைவண்ணம் அவர்செயலில் கண்டோம்! ஏந்தியுரைச் செய்திடுவோம் ஏற்றத்தைக் காண்போம்! ….. இயக்கமான சக்கரத்தை இதயத்தில் வைப்போம்! வெள்ளையனே வெளியேறு விளங்கிடவே சொன்னோம்! ….. வென்றதனால் அந்நியனை விலகிடவே செய்தோம்! நல்லமனம் சுதந்திரத்தை நயப்புறவே பெற்றோம் ….. Read more

நட்பு

அன்புகொண்ட நண்பரோடு பழகுகின்ற போதினில் என்புஞ்சதையும் உள்ளதுபோல் இருவர்நட்பும் அமையுமே. எந்தநாளில் எந்தநேரம் என்னதீமை நேரினும் அந்தநாளில் அந்தநேரம் அதனைப்போக்க நண்பனே மின்னல்போல வந்துமுன்னே இன்பஞ்சேரச் செய்வனே. துன்பங்கூட நண்பனாலே இன்பமாக மாறுமே. வாழுகின்ற போதிலன்பு நண்பரொன்றி இருக்கையில் சூழுகின்ற இன்பதுன்பில் வானும்மீனும் தோற்குமே. இன்பமொன்றே வேண்டுமென்று எண்ணுவீரேல் யாவரும் இன்றுதொட்டு நண்பரையே தேர்ந்தெடுத்து வாழ்கவே . நல்லநண்ப ராகஎன்றும் வாழுகின்ற நண்பரே வெல்லமாக உள்ளநட்பு விளங்குமென்றும் நன்றுதான்.

​உச்சிக் குளிருதடா!

கட்டி அணைக்கையிலே உச்சிக் குளிருதடா! விட்டு விலகையிலே நெஞ்சம் கணக்குதடா! உந்தன் ஸ்பரிசமது உயிரைப் பிழியுதடா! எந்தன் மனசினிலே இன்பம் வழியுதடா ! உச்சி முகர்ந்தாலே உள்ளம் சிலிர்க்குதடா! எச்சில் அமுதமாக என்றும் இனிக்குதடா! மீசைக் குத்தினாலும்மி ருதுவாய் இருக்குதடா! ஆசை நிரம்பிடவே அன்புப் பெருகுதடா! அள்ளி அணைக்கையிலே அச்சம் தடுக்குதடா! சொல்லும் வார்த்தையிலே சொர்க்கம் தெரியுதடா! முத்தம் பதிக்கையிலே மேகம் கருக்குதடா! சத்தம் இன்றிமழை சாட்சியாய் இறங்குதடா! உன்னை Read more

கன்னியே

சிலைபோல் மேனி சிரித்தால் பூ நீ சிந்தனை வளைக்குதடி – கடல் அலைபோல் உந்தன் நினைவே எந்தன் அடிமனம் துளைக்குதடி கண்ணே உன்னைக் காணக் காணக் கனவுகள் வளருதடி – என் திண்மை மனமும் சேயிழை உன்னால் தேய்ந்தே தளருதடி கனியே உந்தன் மதிமுகம் கண்டால் காலம் மறக்குமடி – எந்தக் கனிந்த நல்ல துறவியின் மனமும் துறவைத் துறக்குமடி கறுப்பே களையாம் யாரோ சொன்ன கருத்தும் உண்மையடி – Read more

அப்துல் கலாம்

(முதலாமாண்டு நினைவஞ்சலி :27/07/2015) விஞ்ஞானம் வென்றீரே; மனங்கள் யாவும் … விதைத்தவித்து விளைந்துநிற்க கண்டீ ரில்லை அஞ்சாமை அகற்றினீரே; அறிவுக் கண்ணை … அகத்தினிலே சுடர்விடவேச் செய்த நீவிர் நெஞ்சமெலாம் நிறைந்தமகான் கலாமென் போமே … நேர்படவே வாழ்த்துகாட்டி நெறிகள் சொல்லி மிஞ்சிநிற்கும் மனிதகுல மாண்பு நீரே … மின்னிமறைந் திடவல்ல வாழ்வும் என்றோய். விஞ்ஞான சிறப்பெல்லாம் உன்னைப் பாட … வீணாகா இளைஞர்கள் மனத்தில் நின்றாய் மஞ்சத்தின் பிடிமறந்து Read more

அம்மனைத் தேடும் அழகுரதம்

வெள்ளிக்குடம் சுமந்துவரும் தங்கரதமே – உந்தன் வேண்டுதலும் நிறைவேறும் பொன்னுரங்கமே ! பால்குடத்தை எடுத்துவரும் தேனருவியே – உந்தன் பாவங்கள் போக்கிவிடும் தேவியருளே ! அலங்கார நடைபோடும் தேவதையே – உந்தன் அருகினிலே வந்தமரும் சேவடியே ! பலங்காலப் பக்தியிலே அடியவளே – உந்தன் பக்தியினை மெச்சாவிடில் கொடியவளே ! பூமிக்கும் வலிக்காமல் நடப்பவளே – உந்தன் பூவிரல்கள் மலராக்கிக் கடப்பவளே ! சாமிக்கும் உனைக்காண அருள்வருமே – உந்தன் Read more

தன்னலமிலா மனமுடையோர் …

எண்சீர் விருத்தம் (மரபுப் பா) ————————————- விளம் – விளம் – மா – தேமா விளம் – விளம் – மா – தேமா துன்பமோ பிறர்க்கிலா தாகு மாயின் …… துயரமோ வெனக்கிலை யென்று நெஞ்சம் இன்பமே கொள்ளுமோர் மாந்தர் தம்மின் …… இதயத் துள்ளொளி பெருகித் தானும் தன்னல மிலாதநல் குணத்தா லிங்கே …… தாரணி யிதுவுமு யருமா மன்றோ இன்னுயிர் நீத்திடற் பின்னும் நாமம் Read more