வேரில் பழுத்த பலா!!!

வேர்தனிலே பழுத்திடுமா வேகமாகச் சுவைதருமா? பார்மீதில் தந்திடுமே பலாச்சுளையும் பக்குவத்தால் கார்கால கன்னிபோல  கனத்திருந்தால் பழமாகி சீர்போன்றே அழகான சிலையாகி நின்றிடுமே!!! மலர்களெல்லாம் மலர்ந்திடுமே மணந்தருமே நாள்தோறும். பலநாளின் பலந்தரவே பசுமையாக மலர்ந்திடுமே. அலர்ந்திடுமே அந்திவேளை அழகான அல்லிமலர் உலர்ந்தமனம் உவகைகொள்ளும் உள்ளமெங்கும் இன்பவெள்ளம். மணக்கின்ற மலர்களுக்கும் மறுவாழ்வு தந்திடுவோம் வனப்புடனே காத்திடுவோம் வரம்வேண்டி நின்றிடுவோம் கனப்போழுதும் மறவாது களிப்புடனே போற்றிடுவோம். மனம்முழுதும் ரசித்திடுவோம்  மலரட்டும் மொட்டுகளும். மண்ணுலகில் பிறக்கின்ற Read more

கஜா புயல் கோரத்தாண்டவம் — ஆழ்மனத்தின் மொழி !!

புயலாலே உருக்குலைந்து புலரவில்லை எம்வாழ்வு . மயங்கியுமே வீழ்ந்தோமே மறுவாழ்வும் இல்லையினி . பயம்கொண்ட நெஞ்சத்தைப் பாதுகாப்போர் யாருண்டு  பயன்பட்ட நிலமெல்லாம் பாழ்பட்ட சோகமிங்கே !! ஆசையாக வளர்த்தோமே அழகழகாய்த் தென்னையினைப் பாசமாக வைத்திட்டப் பனைமரங்கள் காணலையே ! காசைநம்பி வாழ்வெல்லாம் கஜாவினால் போனதைய்யா ! தேசுடைய மாமரமும் தெருவினிலே கிடக்குதைய்யா !! உயிருள்ள மரமெல்லாம் உணர்வற்று சாய்ந்ததுவே ! உயிரற்ற மின்கம்பம் உறவற்று வீழ்ந்ததுவே ! பயிரெல்லாம் அழுகிப்போய் Read more

தீபாவளி -அன்றும் இன்றும்

ஏற்றிடுவோம் தீபத்தை நன்னாளில்       எத்திக்கும் பரவிடுமே மகிழ்ச்சிவெள்ளம் போற்றிடுவோம் பண்டிகையை அந்நாளில்       பொங்கிடுமே புதுவாழ்வு மக்களிடம் மாற்றங்கள் வந்திடுமா நாள்தோறும்       மண்ணுலகி லின்பமுமே தாங்கிடுமா சீற்றங்கள் வேண்டாமே எந்நாளும்       சிறப்புடைய தீபவொளி ஒளிர்விடட்டும் . கொடுக்கின்ற மனிதரெல்லாம் இன்றுமாறிக்       கொடைகுணத்தை இழந்துவிட்டார் இவ்வுலகில் அடுக்கடுக்காய் மக்களினம் பெருகிப்போய்   Read more

உலாவரும் நிலா

உலாவரும் நிலவொன்றை — உன்னதமாய்த் தாய்காட்டி நிலாச்சோறு ஊட்டுகின்ற — நிம்மதிதான் வேண்டுமென்று பலாசுவையாய் அமுதூட்டப் — பக்குவமாய் வாய்த்திறக்க நிலாமகளை நினைந்துகொண்டு — நீண்டுவிடும் என்கைகளே !! அன்னைதந்த சோற்றினையும் — அகமகிழ்ந்து உண்ணுகின்றேன் முன்பின்னே அறிந்ததில்லை — முகமலர்ந்து நிற்கின்றேன் அன்புடைய கைகளினால் — அமுதத்தைத் தந்துநின்றாள் என்னுடனே அவளிருந்து — எனக்களித்தாள் பாசத்தை . வண்ணமகள் அன்னையிங்கே — வாடிடலும் கூடாதென்றே திண்ணமுடன் நிலாச்சோறு — Read more