ஏற்றிடுவோம் தீபத்தை நன்னாளில்
      எத்திக்கும் பரவிடுமே மகிழ்ச்சிவெள்ளம்
போற்றிடுவோம் பண்டிகையை அந்நாளில்
      பொங்கிடுமே புதுவாழ்வு மக்களிடம்
மாற்றங்கள் வந்திடுமா நாள்தோறும்
      மண்ணுலகி லின்பமுமே தாங்கிடுமா
சீற்றங்கள் வேண்டாமே எந்நாளும்
      சிறப்புடைய தீபவொளி ஒளிர்விடட்டும் .

கொடுக்கின்ற மனிதரெல்லாம் இன்றுமாறிக்
      கொடைகுணத்தை இழந்துவிட்டார் இவ்வுலகில்
அடுக்கடுக்காய் மக்களினம் பெருகிப்போய்
      அன்புடைய நெஞ்சமுமே மறந்துவிட
நடுத்தெருவில் நிற்கின்ற வறியோர்கள்
      நாயைப்போல் உணவின்றி அலைகின்றார்
எடுக்கின்ற உறுதிமொழி அனைவர்க்கும்
      ஏற்புடைய மொழியாகச் செய்தல்வேண்டும் .

கொண்டாட்டம் வீதியிலே செல்வர்க்கு
      கொடுப்பினையும் இனியில்லை வறியார்க்கு
திண்டாட்டம் இந்நாளில் தேவைதானா?
      திக்கெட்டும் தீப்பொறிகள் வெடிகளாலே
பண்டங்கள் சுவைத்திடுமே பலருக்கும்
      பழையசோறு போதவில்லை ஏழ்மைக்கு
கண்களிலே நீர்பெருக எழுதுகின்றேன்
      காசினியில் இந்நிலைமை மாறிடுமா ?

தித்திக்கும் தீபவொளி யாவர்க்கும்
      திகழட்டும் மக்களுக்குள் ஒற்றுமையே
எத்திக்கும் சமுதாயம் வாழவேண்டின்
      எண்டிசையும் சமத்துவத்தை பரப்பிடுவோம்
மத்தாப்புக் குச்சிகளும் சொல்லுமொழி
      மங்காத வாழ்வுநெறி வேண்டுமென்றே
புத்தாடை அணிந்திடுவோம் நாமெல்லாம்
      புத்துலகைச் சமைத்திடவே புறப்படுவோம்.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

மரபுக் கவிதை

அண்ணா

வினைச்சொல்லாய் வேதியத்தின் இருள கற்றி
விடியல்தர வந்துதித்த கதிர வன்நீ!
முனைச்சொல்லாய்க் கூர்படைத்த கூர்ப டைத்துக்
குத்தீட்டிச் சொல்வடித்த உலைக்க ளம்நீ!
பிணைச்சொல்லாய்ப் பிரிந்துபட்ட தமிழி னத்தைப்
பேரினமாய்த் திரளவைத்த பெருந்தி றம்நீ!

 » Read more about: அண்ணா  »

மரபுக் கவிதை

அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற அரசியல் சகாப்தமாக வாழ்ந்து சாதித்து மறைந்த ஒரு மாபெரும் மேதை பேரறிஞர் அண்ணா அவர்கள் என்றால் அது கிஞ்சித்தும் மிகையாகாது. ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து கல்வியாலும் உழைப்பாலும் உயர்ந்து தன் நாவன்மையால் தமிழகமக்களைக் கட்டிப்போட்டு,

 » Read more about: அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)  »