உலாவரும் நிலவொன்றை
உன்னதமாய்த் தாய்காட்டி
நிலாச்சோறு ஊட்டுகின்ற
நிம்மதிதான் வேண்டுமென்று
பலாசுவையாய் அமுதூட்டப்
பக்குவமாய் வாய்த்திறக்க
நிலாமகளை நினைந்துகொண்டு
நீண்டுவிடும் என்கைகளே !!

அன்னைதந்த சோற்றினையும்
அகமகிழ்ந்து உண்ணுகின்றேன்
முன்பின்னே அறிந்ததில்லை
முகமலர்ந்து நிற்கின்றேன்
அன்புடைய கைகளினால்
அமுதத்தைத் தந்துநின்றாள்
என்னுடனே அவளிருந்து
எனக்களித்தாள் பாசத்தை .

வண்ணமகள் அன்னையிங்கே
வாடிடலும் கூடாதென்றே
திண்ணமுடன் நிலாச்சோறு
தின்னுகின்றேன் மனமகிழ்ந்து .
விண்ணுலகம் எனைப்பார்த்தே
வியப்புடனே நிலமகளை
மண்ணுலகம் நோக்கியுமே
மறுப்பின்றி அனுப்பிடுவாள் .

நிலவுக்கு நிகராக
நின்றிடுவாள் எனதன்னை .
மலரனைய கைகளினால்
மங்கையவள் மனமகிழ்ந்து
பலரின்கண் படாமலேயும்
பரிசுத்த அன்பினாலே
நிலவுநோக்க ஊட்டிடுவாள்
நிலாபெண்ணும் இவளன்றோ !!!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.