வேர்தனிலே பழுத்திடுமா வேகமாகச் சுவைதருமா?
பார்மீதில் தந்திடுமே பலாச்சுளையும் பக்குவத்தால்
கார்கால கன்னிபோல கனத்திருந்தால் பழமாகி
சீர்போன்றே அழகான சிலையாகி நின்றிடுமே!!!
மலர்களெல்லாம் மலர்ந்திடுமே மணந்தருமே நாள்தோறும்.
பலநாளின் பலந்தரவே பசுமையாக மலர்ந்திடுமே.
அலர்ந்திடுமே அந்திவேளை அழகான அல்லிமலர்
உலர்ந்தமனம் உவகைகொள்ளும் உள்ளமெங்கும் இன்பவெள்ளம்.
மணக்கின்ற மலர்களுக்கும் மறுவாழ்வு தந்திடுவோம்
வனப்புடனே காத்திடுவோம் வரம்வேண்டி நின்றிடுவோம்
கனப்போழுதும் மறவாது களிப்புடனே போற்றிடுவோம்.
மனம்முழுதும் ரசித்திடுவோம் மலரட்டும் மொட்டுகளும்.
மண்ணுலகில் பிறக்கின்ற மனிதம்யாவும் பிணமாதல்
கண்களினால் காணுகின்ற காட்சியன்றோ உலகினிலே.
விண்ணுலகைச் சென்றடைதல் விந்தையல்ல . இஃதுண்மை.
எண்ணிலடங்காப் பிணங்களெல்லாம் எந்நாளும் எழுவதில்லை.
தமிழகத்தை நாசமாக்கும் தரமில்லா இனக்கொலைகள்.
இமைப்பொழுதும் மறக்கமுடியா இரக்கமில்லா வன்முறைகள்.
சுமைதாங்கும் மக்களினம் சுடலைக்குள் போயிற்றே!!!!
தமிழகமே கலங்கிநிற்கும் தலையில்லா முண்டங்கள்.!!!
மழலைகளும் பணிசெய்தால் மங்கிடுமே மண்ணுலகம்
உழவுக்கு மாடுபோல உருவாக்கும் இவ்வெண்ணம்.
குழந்தைகளும் கூலிகளா? குலம்தழைக்க வந்தவரா?
அழகான கல்வியுமே அவர்களுக்கும் வேண்டுமென்பேன்!!!!
1 Comment
Saraswathi · மார்ச் 29, 2019 at 19 h 24 min
அருமை