உண்டு!

பணஞ்சேர்க்க எண்ணுவரே அதிக முண்டு ! பணமின்றிச் செயமுடியும் செயலு முண்டு ! குணமிருந்தும் பணமின்றி இருப்போ ருண்டு ! கொள்கையிலே தோல்வியினைக் கண்டோ ருண்டு ! பணமிருந்தும் நிறைவேதான் காணா ருண்டு ! பண்பாட்டை மீறுகிற நபரு முண்டு ! அணங்கைத்தான் விரும்புகிற அணங்கு முண்டே ! ஆசைகளுக் களவில்லை என்பா ருண்டு ! நீருக்குள் வாழ்கின்ற உயிர்கள் உண்டு ! நேயத்தால் குறைகாணா திருப்ப குண்டு ! Read more

நட்பு

அன்புகொண்ட நண்பரோடு பழகுகின்ற போதினில் என்புஞ்சதையும் உள்ளதுபோல் இருவர்நட்பும் அமையுமே. எந்தநாளில் எந்தநேரம் என்னதீமை நேரினும் அந்தநாளில் அந்தநேரம் அதனைப்போக்க நண்பனே மின்னல்போல வந்துமுன்னே இன்பஞ்சேரச் செய்வனே. துன்பங்கூட நண்பனாலே இன்பமாக மாறுமே. வாழுகின்ற போதிலன்பு நண்பரொன்றி இருக்கையில் சூழுகின்ற இன்பதுன்பில் வானும்மீனும் தோற்குமே. இன்பமொன்றே வேண்டுமென்று எண்ணுவீரேல் யாவரும் இன்றுதொட்டு நண்பரையே தேர்ந்தெடுத்து வாழ்கவே . நல்லநண்ப ராகஎன்றும் வாழுகின்ற நண்பரே வெல்லமாக உள்ளநட்பு விளங்குமென்றும் நன்றுதான்.

கன்னியே

சிலைபோல் மேனி சிரித்தால் பூ நீ சிந்தனை வளைக்குதடி – கடல் அலைபோல் உந்தன் நினைவே எந்தன் அடிமனம் துளைக்குதடி கண்ணே உன்னைக் காணக் காணக் கனவுகள் வளருதடி – என் திண்மை மனமும் சேயிழை உன்னால் தேய்ந்தே தளருதடி கனியே உந்தன் மதிமுகம் கண்டால் காலம் மறக்குமடி – எந்தக் கனிந்த நல்ல துறவியின் மனமும் துறவைத் துறக்குமடி கறுப்பே களையாம் யாரோ சொன்ன கருத்தும் உண்மையடி – Read more