அன்புகொண்ட நண்பரோடு
பழகுகின்ற போதினில்
என்புஞ்சதையும் உள்ளதுபோல்
இருவர்நட்பும் அமையுமே.
எந்தநாளில் எந்தநேரம்
என்னதீமை நேரினும்
அந்தநாளில் அந்தநேரம்
அதனைப்போக்க நண்பனே
மின்னல்போல வந்துமுன்னே
இன்பஞ்சேரச் செய்வனே.
துன்பங்கூட நண்பனாலே
இன்பமாக மாறுமே.
வாழுகின்ற போதிலன்பு
நண்பரொன்றி இருக்கையில்
சூழுகின்ற இன்பதுன்பில்
வானும்மீனும் தோற்குமே.
இன்பமொன்றே வேண்டுமென்று
எண்ணுவீரேல் யாவரும்
இன்றுதொட்டு நண்பரையே
தேர்ந்தெடுத்து வாழ்கவே .
நல்லநண்ப ராகஎன்றும்
வாழுகின்ற நண்பரே
வெல்லமாக உள்ளநட்பு
விளங்குமென்றும் நன்றுதான்.