வெள்ளிக்குடம் சுமந்துவரும் தங்கரதமே – உந்தன்
வேண்டுதலும் நிறைவேறும் பொன்னுரங்கமே !
பால்குடத்தை எடுத்துவரும் தேனருவியே – உந்தன்
பாவங்கள் போக்கிவிடும் தேவியருளே !

அலங்கார நடைபோடும் தேவதையே – உந்தன்
அருகினிலே வந்தமரும் சேவடியே !
பலங்காலப் பக்தியிலே அடியவளே – உந்தன்
பக்தியினை மெச்சாவிடில் கொடியவளே !

பூமிக்கும் வலிக்காமல் நடப்பவளே – உந்தன்
பூவிரல்கள் மலராக்கிக் கடப்பவளே !
சாமிக்கும் உனைக்காண அருள்வருமே – உந்தன்
சஞ்சலத்தைத் தீர்ப்பதற்குப் பொருள்தருமே !

ஊர்கண்கள் உன்னைத்தான் பார்க்கிறதே – உந்தன்
ஓரவிழிப் பார்வைக்காய் வேர்க்கிறதே !
நீர்வார்த்த செடிகள்கூட வேர்விடுமே – உந்தன்
நீலவிழிப் பார்வையும் பேர்பெறுமே !

இதழ்காட்டும் புன்னகையும் இருள்விரட்டுமே – உந்தன்
இனிமைக்குத் தேவியுமே அருள்தரட்டுமே !
இதமான நடையினிலே ஒளிவீசுமே – உந்தன்
எழிலான முகம்பார்த்து கிளிபேசுமே !

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.