பாவாணர் வழிச்செல் நண்பா!

பாவாணர் எழுத்தும் சொல்லும் …..பைந்தமிழை உணர்வாய்ப் போற்றும்! பாவாணர் உரைக்கும் பாட்டின் …..பண்ணிசைக்கப் பற்றும் நன்றாய்! பாவாணர் எழுச்சிக் காட்டும் …..பழம்பெருமைக் காக்க வேண்டும்! பாவாணர் வழிச்செல் நண்பா! …..பண்புடைனம் மொழியைக் கற்போம்!

உன்னதமாம் சுதந்திரத்தை உயிராகக் காப்போம்!

காந்தியெனும் உத்தமரால் சுதந்திரத்தைக் கண்டோம்! ….. காவிவண்ணத் தியாகத்தை அவருருவில் கண்டோம்! சாந்தியெனும் சத்தியத்தின் சீலராகக் கண்டோம்! ….. சரித்திரத்தில் வெள்ளைவண்ணத் தவஒளியைக் கண்டோம்! காந்தியத்தின் மகிமையெல்லாம் கற்பதிலே கண்டோம்! ….. கருத்தானப் பசுமைவண்ணம் அவர்செயலில் கண்டோம்! ஏந்தியுரைச் செய்திடுவோம் ஏற்றத்தைக் காண்போம்! ….. இயக்கமான சக்கரத்தை இதயத்தில் வைப்போம்! வெள்ளையனே வெளியேறு விளங்கிடவே சொன்னோம்! ….. வென்றதனால் அந்நியனை விலகிடவே செய்தோம்! நல்லமனம் சுதந்திரத்தை நயப்புறவே பெற்றோம் ….. Read more