n.mபாட்டொன்று எழுதுவதற்கு அமர்ந்து விட்டால்
பசிதூக்கம் அத்தனையும் மறந்தே போய்
மெட்டினையே நினைவினிலே அசை போட்டு
மெல்லிசையை அதனிலே கரைவ தற்கே
இட்டமுடன் பாட்டெழுதி தந்து விட்டு
இமைமூடாமல் இருந்தது எத்தனை நாளோ ?
பூட்டிவைத்த இதயங்கள் கொண்ட பேரும்
பொன்னான உன்பாட்டில் கரைந்த னரே !

வெள்ளித் திரையதற்கு பாடல் போதுமென
வான்திரைக்கு வந்த்துவோ ஆசை கொஞ்சம்
அள்ளித்தான் அணைத்த்துவே அன்பு கவியை
அரும்பாடல் தனைசெய்து தேசத்தின் விருதினை
அள்ளித்தான் கொண்டதோடு அன்பான நெஞ்சையே
கிள்ளித்தான் பார்த்துவிட்டாய் பாடல் தன்னை
வெள்ளித்திரைதான் மறந்திடுமோ, வேதனை தான்
விடிந்திடுமோ, இளங்கவிகளுக்கே ஏனிந்த சோகம்!


1 Comment

Asokan Kuppusamy · செப்டம்பர் 6, 2016 at 12 h 04 min

என்னுடைய கவிதாஞ்சலியை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.