புதுக் கவிதை
எள்ளாதே
குரல்: பாத்திமா பர்சானா
பட்டம் பெற்றவரே
பார் போற்றும் பெருந்தலையே,
தரையைத் தொடாமலே
வானில் நீர் பறந்தீரோ ….
தயங்கித் தயங்கியே
திக்கெட்டும் தட்டுகிறேன்,
குரல்: பாத்திமா பர்சானா
பட்டம் பெற்றவரே
பார் போற்றும் பெருந்தலையே,
தரையைத் தொடாமலே
வானில் நீர் பறந்தீரோ ….
தயங்கித் தயங்கியே
திக்கெட்டும் தட்டுகிறேன்,
இரவின் இருள் கிழித்து தன் அதிகாரத்தை பரப்பும் முயற்சியில் அதிகாலை சூரியன் தன் கதிர்களை மெல்ல மெல்லப் பரப்பி மலை முகடுகளை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்தான். அவன் மீது கொண்ட காதலாலோ என்னவோ பனித்துளிகள் எல்லாம் கசிந்து உருகிக்கொண்டிருந்தன.
» Read more about: புதுச் சப்பாத்து »
மதுரைத்தாயின்
மூத்தமகனே..
கவிதையாய் மனதில்
பூத்த மகனே…!!!
மஹியும் பேகமும்
நபிகளுக்கு
பிரியமானவர்களானார்கள்
உன்னை ஈன்றதால்…
இன்று நபிகளை
பிரியமானவராக்கிக்
கொண்டாய்
மரணத்தை நீ ஈன்றதால்…!!
நல்ல கட்டுமஸ்தான உடல், அதற்கேற்ற உடை. கையில் ஒற்றை மலருடன் உதட்டில் மலர்ந்த புன்னகையுடன் கடற்கரையின் மணற்பரப்பில் உட்கார்ந்திருந்தான் அருண்..
பார்வை கடல் அலையில் விளையாடிடும் சிறுவர்கள் மீதும், அவர்கள் விரட்டிடும் நண்டின் மீதும்..
» Read more about: இணைந்த வாழ்க்கை »
விதைத்த விதைகளை உள்வாங்க
என் உடலில் உயிர்சத்து இல்லை.
விதைகளை முளைக்கச்சொல்ல
என்மனதில் ஈரமில்லை.
வெற்றிடங்களை நிரப்ப
வருணபகவானுக்கோ மனமில்லை.
கண்விழித்துப்பார்த்தால்
வெள்ளைமாளிகைகள் நாற்காலி
போட்டு அமர்ந்து அதிகாரம் செய்கிறது.
பெண் விடுதலை பற்றி
பேசியவன் பையில்
வீட்டுச் சாவி
ஓடையாக இருந்தாலும்
உன்னை நதியாக்குகிறது
நம்பிக்கை
நம்பிக்கை உதிர்கின்ற போதுதான்
நிகழ்கிறது
முதல் மரணம்
நிலம் உழுகின்ற
உழவனைகிழித்து விடுகிறது
சமூக ஏர்
பூமிக்கு மேல்
புதை குழி
கட்டில்
உழவனை
நிமிர்ந்து பார்க்க மறுக்கிறது
நெற்கதிர் கூட
ஏழையைச் சாப்பிட்டு
ஏப்பமிடுகிறது
சோறு
மாடிமனை கட்டி யதில்
வாழ்ந்தவனும் ”நானே”
கோடிபணம் சேர்த் தங்கே
குவித்தவனும் ”நானே”
நாத்திகனாய்க் கதை பேசி
வென்றவனும் ”நானே”
கூத்திகளோ டிரவு பகல்
கொஞ்சியவன் ”நானே”
” பாட்டியின் சேலை…!
கிழிந்தும் உதவியது
பேரனுக்கு தொட்டில்”
2
குழந்தையை சுமந்தாள்
கூடவே ஒட்டிக்கொண்டது
தாய்மை
3
மலர்ந்தது ரோஜா
பறிக்கும் முன் முத்தமிட்டது
வண்ணத்துப் பூச்சி
4
மரத்தில் குழந்தை சிற்பம்
அணைத்து முத்தமிட்டாள்
குழந்தை இல்லா தாய்
5
புதுமைப் பெண்ணோ
தனிமையில் செல்கிறது
நிலா
6
“நட்சத்திரம் சிரித்ததோ
சிதறிக் கிடக்கிறது
மெரீனாவில் முத்துக்கள்”
வெட்கத் தாழ்
போட்டு நாணுகிறேன்!
கனவுகளில்
துகிலுரித்து
பார்க்கிறாய்!
கவலைகள்
கடிணங்கள்
எதுவுமில்லை!
மழலையாய்
உன் மடியில்
மலர்கின்றேன்!
நாக்கு வன்மையானதுதான். இதனால் நாவின் உதவியோடு உருவாகி வெளிப்படும் வார்த்தை அதைவிட வன்மையானது. இதைக் குறித்து வள்ளுவர் தனது 129 வது குறட்பாவில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
தீயினாற் சுட்டப்புண் உள்ளாறும் இறாதே
நாவினாற் சுட்ட வடு.