கவிக்கோவிற்கு கவிதாஞ்சலி
மதுரைத்தாயின் மூத்தமகனே.. கவிதையாய் மனதில் பூத்த மகனே…!!! மஹியும் பேகமும் நபிகளுக்கு பிரியமானவர்களானார்கள் உன்னை ஈன்றதால்… இன்று நபிகளை பிரியமானவராக்கிக் கொண்டாய் மரணத்தை நீ ஈன்றதால்…!! “கவிக்கோ” உன்னைச்சூடி பட்டங்களும் பெருமை பெற்றன.. இன்று உன்னையிழந்து அவையாவும் வெறுமையுற்றன!! சிந்தனைகளின் சிற்பி…. புதுக்கவிதையின் புகழாரம்…. சிலேடை வார்த்தைகளால் பகடையாக்கினாய் எங்கள் மனங்களை… ஆலாபனை தூவி ஆராதித்தாய் நற் குணங்களை…!! “மின்மினிக்கெல்லாம் மேனி திருப்பினால் கப்பல் எப்படி கரை போய் சேரும்”.. Read more

