விதைத்த விதைகளை உள்வாங்க
என் உடலில் உயிர்சத்து இல்லை.

விதைகளை முளைக்கச்சொல்ல
என்மனதில் ஈரமில்லை.

வெற்றிடங்களை நிரப்ப
வருணபகவானுக்கோ மனமில்லை.

கண்விழித்துப்பார்த்தால்
வெள்ளைமாளிகைகள் நாற்காலி
போட்டு அமர்ந்து அதிகாரம் செய்கிறது.

ஆழ்துளைக்கிணறுகளின் அட்டகாசம்
என் உடலை அங்கஅங்கமாக கிழித்துக்
கொண்டிருக்கிறது.

அன்னார்ந்து பார்த்து அழுகின்றேனே?
அடைமழையே எம்மை அணுகி
ஆறுதல்கூற அஞ்சுகிறாயே?

கூட்டம்கூட்டமாய் என்உடலை கூறுபோட
கொடியசைத்து அழைக்கிறார்கள்.

எம்மை ஆண்ட சொர்க்கமே இனி உன்உடலின்
வியர்வைத்துளிகளை நான் ருசிக்கமாட்டேன்.

உங்கள்கண்களில் வழியும் ரத்தத்துளிகளை
கண்டு கரைந்துபோவேன்.

என் உடலைதனியாக விட்டுசெல்லாதே
என் ஆருயிர் அரசனே.

என் உடலை சிதைக்கின்ற காட்சியை
கண்டு கடைசியாக ஒருமுறை
கண்ணீர்துளிகளை
காணிக்கையாக்கிவிட்டு செல்.!

இப்படிக்கு

விழிநீருடன் விளைநிலம்!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

புதுக் கவிதை

காதல் கவித்துளிகள்

 

காதல் கவித்துளிகள்

பிப்ரவரி 2022 இதழுடன் இணைப்பு

காதல்

காதல் என்று சொல்லும் போதே மனத்துள் ஒரு உற்சாகம் பிறக்கும். ஒரு உத்வேகத்தைத் தரும் மந்திரச்சொல் காதல்.

 » Read more about: காதல் கவித்துளிகள்  »

புதுக் கவிதை

யாருக்காக…

போலியான மனிதர்களோடு வாழ்ந்து பழக்கப்பட்டதனால் உண்மையானவர்கள் யாரென்று கூட உன்னால் இனங்காண முடியாமலே போய் விடுகிறது நீ யாருக்காக புன்னகைத்துக் கொண்டிருந்தாயோ அவர்கள் யாருக்காகவோ வாழப் போய் விட்டார்கள்