புதுக் கவிதை

புன்னகைக்கிறேன்!

சிலநினைவுகள் எழும்போது
குரோதம் கொள்கிறேன்,
இன்னும்சில நினைவுகளோ
என்கண்களை நனைக்கின்றன!

மறக்க நினைக்கும் நினைவுகள்
என்னைத் தினமும்
நினைக்கச் சொல்கின்றன!

 » Read more about: புன்னகைக்கிறேன்!  »

புதுக் கவிதை

நெற்றி முத்தம்

ஒரு தடவை,
இரு தடவை,
பல தடவைகள் …
கலங்கிக் கலங்கி
தெளிந்தே விட்டேன்!

வேதாளம்
மீண்டும் மீண்டும்
ஏறட்டும் …

முழு இரவும்
என் தூக்கம்
திருடட்டும் …

 » Read more about: நெற்றி முத்தம்  »

புதுக் கவிதை

எள்ளாதே

குரல்: பாத்திமா பர்சானா

பட்டம் பெற்றவரே
பார் போற்றும் பெருந்தலையே,
தரையைத் தொடாமலே
வானில் நீர் பறந்தீரோ ….

தயங்கித் தயங்கியே
திக்கெட்டும் தட்டுகிறேன்,

 » Read more about: எள்ளாதே  »

புதுக் கவிதை

கவிக்கோவிற்கு கவிதாஞ்சலி


மதுரைத்தாயின்
மூத்தமகனே..
கவிதையாய் மனதில்
பூத்த மகனே…!!!

மஹியும் பேகமும்
நபிகளுக்கு
பிரியமானவர்களானார்கள்
உன்னை ஈன்றதால்…

இன்று நபிகளை
பிரியமானவராக்கிக்
கொண்டாய்
மரணத்தை நீ ஈன்றதால்…!!

 » Read more about: கவிக்கோவிற்கு கவிதாஞ்சலி  »

புதுக் கவிதை

உயிர் ஊசலில் விளைநிலம்

விதைத்த விதைகளை உள்வாங்க
என் உடலில் உயிர்சத்து இல்லை.

விதைகளை முளைக்கச்சொல்ல
என்மனதில் ஈரமில்லை.

வெற்றிடங்களை நிரப்ப
வருணபகவானுக்கோ மனமில்லை.

கண்விழித்துப்பார்த்தால்
வெள்ளைமாளிகைகள் நாற்காலி
போட்டு அமர்ந்து அதிகாரம் செய்கிறது.

 » Read more about: உயிர் ஊசலில் விளைநிலம்  »

புதுக் கவிதை

நான்

மாடிமனை கட்டி யதில்
வாழ்ந்தவனும் ”நானே”
கோடிபணம் சேர்த் தங்கே
குவித்தவனும் ”நானே”
நாத்திகனாய்க் கதை பேசி
வென்றவனும் ”நானே”
கூத்திகளோ டிரவு பகல்
கொஞ்சியவன் ”நானே”

 » Read more about: நான்  »

புதுக் கவிதை

நாணுகிறேன்!

வெட்கத் தாழ்
போட்டு நாணுகிறேன்!

கனவுகளில்
துகிலுரித்து
பார்க்கிறாய்!

கவலைகள்
கடிணங்கள்
எதுவுமில்லை!

மழலையாய்
உன் மடியில்
மலர்கின்றேன்!

 » Read more about: நாணுகிறேன்!  »

புதுக் கவிதை

கறுப்பு நிறத்தழகி !

கறுப்பு நிறத்தழகி !
இயற்கையின் நிறத்தினை
இயல்பானத் தரத்தினை
இருளின் வடிவாக
இருக்கப் பெற்றவளே !

கருப்பை இருப்பைக்
கவர்ந்து ஈர்த்து
கறுப்பை நிறமாய்க்
காலத்தில் பெற்றவளே !

 » Read more about: கறுப்பு நிறத்தழகி !  »

புதுக் கவிதை

மரிக்கொழுந்து

தண்ணிக் கொடமெடுத்து
தனியாகப் போறவளே
தாய்மாமன் நானிரிக்கன்
தாகத்தோட தானிரிக்கன்

தண்ணியூத்த முறையுமில்ல
தாகந்தீர்க்க வழியுமில்ல
மஞ்சக் கயிறு தந்தியன்டா
மரிக்கொழுந்தா வந்திடுவன்

வேகத்தோட நீ பறந்தா
தேகத்தோட வேகுதடி
தாம்பூலம் மாத்த வாறன்
தாமதமாப் போனா என்ன

தாமதிச்சி நான் போனா
பேமிதிச்சிப் போட்டுடுங்கா
பேசாம இருந்து போட்டு
கூசாம வந்து கேளு

தங்கத்துல செம்பு செஞ்சி
தலைக்கிமேல ஒன்ன வெச்சி
தாங்கத்தான் நெனச்சிரிக்கன்
தாரமா நீ வாடி புள்ள

வீரமா நீ பேசக்குள்ள
வீராப்பா இரிக்கி மச்சான்
வேணாண்டு சொல்லிப் போட்டா
வேகி நொந்து தவிச்சிருவன்

பெரு முல்லக் காடிரிக்கி
பெருத்த ரெண்டு ஆடிரிக்கி
கக்கத்துக்க வாடிபுள்ள
பக்கத்தில யாருமில்ல
மாட்டு வண்டி ஓட்டினாலும்
மாசால ஒண்டும் கொறயலகா
மால மகரி நேரமாச்சி
மாட்டப்போடு தூரமாச்சி.

 » Read more about: மரிக்கொழுந்து  »

புதுக் கவிதை

வாழ்வை துறக்க

முடிவில்லா பாதை ஒன்று
என்னை இழுக்க
விடைத்தேடி
நானும் அந்த பாதை கடக்க
அழகாக மங்கை அவள்
அங்கு பூத்திருக்க
அவளின் அழகில்
மயங்கி நானும் பாத்திருக்க
காதல் எனும் கனை ஒன்று
என்னை அடிக்க
பூத்திருந்த மலர் பறித்து
நானும் புன்னகைக்க
பாத்திருந்த மங்கை
அவள் காதலை ஏற்க
காதல் வானில்
இருவரும் சேர்ந்து பறக்க
சதி எனும் விதி ஒன்று
எங்களை கடக்க
துணையாய் பறந்தவள்
காதலெனும் உறவை முறிக்க
அவளின் பிரிவால் நாளும்
எந்தன் இதயம் துடிக்க
கண்கள் கலங்கி
நானும் கவிதை படைக்க
படித்து பார்த்த
அவளின் இதயம் துடிக்க
வானேரி பறந்து விட்டாள்
எந்தன் நினைவை மறக்க
வாழ்வின் முடிவெதுவென
நானும் நினைக்க
காவி கட்டி
அமர்ந்து விட்டேன்
வாழ்வை துறக்க!

 » Read more about: வாழ்வை துறக்க  »