புன்னகைக்கிறேன்!

சிலநினைவுகள் எழும்போது குரோதம் கொள்கிறேன், இன்னும்சில நினைவுகளோ என்கண்களை நனைக்கின்றன! மறக்க நினைக்கும் நினைவுகள் என்னைத் தினமும் நினைக்கச் சொல்கின்றன! நினைக்க வேண்டியவைகள் அடிக்கடி தொலைகின்றன! கரைதொட்டுச் செல்லும் அலைகள்போல் என் மனம்தொட்டுச் செல்லும் சிலநினைவுகள், விடைகள் இல்லாத விடுகதைகளாக சில நினைவுகள், முடிவில்லாத தொடர்கதைகளாக பலநினைவுகள், சில நேரங்களில் சிற்றாறுகள்போல், பல நேரங்களில் பாழ்கிணறுகள்போல், சுழலும் ஆழிப் பெருங்கடல்களாகவும் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறேன்! இருந்தாலும் பயணிப்பேன், நம்பிக்கையென்னும் துடுப்புகளால் நங்கூரம் Read more

நெற்றி முத்தம்

ஒரு தடவை, இரு தடவை, பல தடவைகள் … கலங்கிக் கலங்கி தெளிந்தே விட்டேன்! வேதாளம் மீண்டும் மீண்டும் ஏறட்டும் … முழு இரவும் என் தூக்கம் திருடட்டும் … உலக உருண்டை இடமின்றி எறியட்டும் … பெண்ணல்ல பேயென்று பெற்றவளே கூறட்டும் … காற்றுக்கு வளைந்ததுவும் நேற்றுக்கள் நனைந்ததுவும் இன்றோடு முடியட்டும் … என்னை நாநாக இருக்க விடு … எண்றெண்ணி முடிப்பதற்குள், அத்தனை தீர்மானங்களும் அவசரமாய் கலைக்கப் Read more

எள்ளாதே

குரல்: பாத்திமா பர்சானா பட்டம் பெற்றவரே பார் போற்றும் பெருந்தலையே, தரையைத் தொடாமலே வானில் நீர் பறந்தீரோ …. தயங்கித் தயங்கியே திக்கெட்டும் தட்டுகிறேன், ஒரு பக்கக் கதவுக்கும் துளியாச்சும் கேட்கலயா …. மல்லிகைப் பூவுக்கு மணம் பூசத் தேவையில்லை, பக்கத்தில் கடதாசி ஏன் உனக்குத் தெரியவில்லை .. கள்ளிக் காட்டுக்கு கனத்த மழை தேவையில்லை, காசித் தும்பைக்கு ஐந்து துளி ஊத்துமையா …. ஆலம் விழுதுக்கு அரை வாளி Read more

கவிக்கோவிற்கு கவிதாஞ்சலி

மதுரைத்தாயின் மூத்தமகனே.. கவிதையாய் மனதில் பூத்த மகனே…!!! மஹியும் பேகமும் நபிகளுக்கு பிரியமானவர்களானார்கள் உன்னை ஈன்றதால்… இன்று நபிகளை பிரியமானவராக்கிக் கொண்டாய் மரணத்தை நீ ஈன்றதால்…!! “கவிக்கோ” உன்னைச்சூடி பட்டங்களும் பெருமை பெற்றன.. இன்று உன்னையிழந்து அவையாவும் வெறுமையுற்றன!! சிந்தனைகளின் சிற்பி…. புதுக்கவிதையின் புகழாரம்…. சிலேடை வார்த்தைகளால் பகடையாக்கினாய் எங்கள் மனங்களை… ஆலாபனை தூவி ஆராதித்தாய் நற் குணங்களை…!! “மின்மினிக்கெல்லாம் மேனி திருப்பினால் கப்பல் எப்படி கரை போய் சேரும்”.. Read more

உயிர் ஊசலில் விளைநிலம்

விதைத்த விதைகளை உள்வாங்க என் உடலில் உயிர்சத்து இல்லை. விதைகளை முளைக்கச்சொல்ல என்மனதில் ஈரமில்லை. வெற்றிடங்களை நிரப்ப வருணபகவானுக்கோ மனமில்லை. கண்விழித்துப்பார்த்தால் வெள்ளைமாளிகைகள் நாற்காலி போட்டு அமர்ந்து அதிகாரம் செய்கிறது. ஆழ்துளைக்கிணறுகளின் அட்டகாசம் என் உடலை அங்கஅங்கமாக கிழித்துக் கொண்டிருக்கிறது. அன்னார்ந்து பார்த்து அழுகின்றேனே? அடைமழையே எம்மை அணுகி ஆறுதல்கூற அஞ்சுகிறாயே? கூட்டம்கூட்டமாய் என்உடலை கூறுபோட கொடியசைத்து அழைக்கிறார்கள். எம்மை ஆண்ட சொர்க்கமே இனி உன்உடலின் வியர்வைத்துளிகளை நான் ருசிக்கமாட்டேன். Read more

நான்

மாடிமனை கட்டி யதில் வாழ்ந்தவனும் ”நானே” கோடிபணம் சேர்த் தங்கே குவித்தவனும் ”நானே” நாத்திகனாய்க் கதை பேசி வென்றவனும் ”நானே” கூத்திகளோ டிரவு பகல் கொஞ்சியவன் ”நானே” சொத்து சுகம் சொந்த பந்தம் என்றிவைகள் தானே இத்தரையில் சேர்த்து வைத்தேன் எல்லாமும் வீணே! மக்கி மடிந் தழிகின்றேன் மண்ணறைக்குள் நானே இற்றிறந்து போனேனா எலும்பேதான் நானா? இதை விடவும் இதை விடவும் இன்னும் அழிவேனா? இதுவரையில் வாழ்ந்ததெது கனவுலகம் தானா?

நாணுகிறேன்!

வெட்கத் தாழ் போட்டு நாணுகிறேன்! கனவுகளில் துகிலுரித்து பார்க்கிறாய்! கவலைகள் கடிணங்கள் எதுவுமில்லை! மழலையாய் உன் மடியில் மலர்கின்றேன்! இரகசிய கனவுகளின் ரகசியம் பூட்டுகின்றேன்! விழிகள் வழியே தெறித்து ஓடுகிறாய்! புலன் இன்பங்கள் பொய்படும்! மெய் அன்பு ஞான பிரபஞ்சத்திற்கு வழி விடும்! புனிதனே புரவியில் வந்து அள்ளிச் செல்லு! நெடு மலை அருவி அடிவாரம் பள்ளி கொள்ளு! விடிந்திடும் முன்னே விடை பெற்றுச் செல்லு! கனவில் வந்ததை கவிதையில் Read more

கறுப்பு நிறத்தழகி !

கறுப்பு நிறத்தழகி ! இயற்கையின் நிறத்தினை இயல்பானத் தரத்தினை இருளின் வடிவாக இருக்கப் பெற்றவளே ! கருப்பை இருப்பைக் கவர்ந்து ஈர்த்து கறுப்பை நிறமாய்க் காலத்தில் பெற்றவளே ! உடலோ கறுப்பு உதிரமோ சிவப்பு கட்சியில் இதுதானே கழகத்தின் சிறப்பு ! பேரழகி உன்னைப் பார்த்தால் போதும் , தார்ரோடு என்றும் தலைகவிழ்ந்து கிடக்கும் . அடுப்புக்கரி தோற்றுவிடும் அணங்குஉன் முன்னாலே , அட்டக்கறுப் பென்பது அகிலத்தில் இதுதானோ ! Read more

மரிக்கொழுந்து

தண்ணிக் கொடமெடுத்து தனியாகப் போறவளே தாய்மாமன் நானிரிக்கன் தாகத்தோட தானிரிக்கன் தண்ணியூத்த முறையுமில்ல தாகந்தீர்க்க வழியுமில்ல மஞ்சக் கயிறு தந்தியன்டா மரிக்கொழுந்தா வந்திடுவன் வேகத்தோட நீ பறந்தா தேகத்தோட வேகுதடி தாம்பூலம் மாத்த வாறன் தாமதமாப் போனா என்ன தாமதிச்சி நான் போனா பேமிதிச்சிப் போட்டுடுங்கா பேசாம இருந்து போட்டு கூசாம வந்து கேளு தங்கத்துல செம்பு செஞ்சி தலைக்கிமேல ஒன்ன வெச்சி தாங்கத்தான் நெனச்சிரிக்கன் தாரமா நீ வாடி Read more

வாழ்வை துறக்க

முடிவில்லா பாதை ஒன்று என்னை இழுக்க விடைத்தேடி நானும் அந்த பாதை கடக்க அழகாக மங்கை அவள் அங்கு பூத்திருக்க அவளின் அழகில் மயங்கி நானும் பாத்திருக்க காதல் எனும் கனை ஒன்று என்னை அடிக்க பூத்திருந்த மலர் பறித்து நானும் புன்னகைக்க பாத்திருந்த மங்கை அவள் காதலை ஏற்க காதல் வானில் இருவரும் சேர்ந்து பறக்க சதி எனும் விதி ஒன்று எங்களை கடக்க துணையாய் பறந்தவள் காதலெனும் Read more