முடிவில்லா பாதை ஒன்று
என்னை இழுக்க
விடைத்தேடி
நானும் அந்த பாதை கடக்க
அழகாக மங்கை அவள்
அங்கு பூத்திருக்க
அவளின் அழகில்
மயங்கி நானும் பாத்திருக்க
காதல் எனும் கனை ஒன்று
என்னை அடிக்க
பூத்திருந்த மலர் பறித்து
நானும் புன்னகைக்க
பாத்திருந்த மங்கை
அவள் காதலை ஏற்க
காதல் வானில்
இருவரும் சேர்ந்து பறக்க
சதி எனும் விதி ஒன்று
எங்களை கடக்க
துணையாய் பறந்தவள்
காதலெனும் உறவை முறிக்க
அவளின் பிரிவால் நாளும்
எந்தன் இதயம் துடிக்க
கண்கள் கலங்கி
நானும் கவிதை படைக்க
படித்து பார்த்த
அவளின் இதயம் துடிக்க
வானேரி பறந்து விட்டாள்
எந்தன் நினைவை மறக்க
வாழ்வின் முடிவெதுவென
நானும் நினைக்க
காவி கட்டி
அமர்ந்து விட்டேன்
வாழ்வை துறக்க!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

புதுக் கவிதை

காதல் கவித்துளிகள்

 

காதல் கவித்துளிகள்

பிப்ரவரி 2022 இதழுடன் இணைப்பு

காதல்

காதல் என்று சொல்லும் போதே மனத்துள் ஒரு உற்சாகம் பிறக்கும். ஒரு உத்வேகத்தைத் தரும் மந்திரச்சொல் காதல்.

 » Read more about: காதல் கவித்துளிகள்  »

புதுக் கவிதை

யாருக்காக…

போலியான மனிதர்களோடு வாழ்ந்து பழக்கப்பட்டதனால் உண்மையானவர்கள் யாரென்று கூட உன்னால் இனங்காண முடியாமலே போய் விடுகிறது நீ யாருக்காக புன்னகைத்துக் கொண்டிருந்தாயோ அவர்கள் யாருக்காகவோ வாழப் போய் விட்டார்கள்