எனதுப் பார்வையில் பொன்மனச் செம்மல்

இரும்பைத்தான் காந்தம் கவரும். இனிமையால் கவர்ந்தவர், அன்பால் தன் மக்களின் ரத்தத்தின் ரத்தத்தில் கலந்தவர். நீதிக்குத் தலைவணங்கச் சொன்னவரிடம் நீதியே தலைவணங்கியது எனலாம். தாய்க்குத் தலைமகனிடம் தாய்க்குலங்களே எங்கள் வீட்டுப்பிள்ளையாக்கிக் கொண்டனர் இவரை. தமிழ்நாட்டை நம்நாடாக்கிக் கொண்டு ஊருக்கு உழைத்தவர். அன்பே வா என ஏழை எளிய மக்களுக்கு நல்லறங்கள் செய்தவர். தொழிலாளி, விவசாயிகளுக்காக உரிமைக்குரல் கொடுத்தவர். 1960, 70 களில் என் தந்தையின் மாமா திரு.K.A.ரஹ்மான் அவர்கள் திரைப்பட Read more

தன்னம்பிக்கை

துளைக்கப் பட்டோமென்று துவளவில்லை மூங்கில்கள்! மாலையில் வீழ்வோமென்று மலராமல் இல்லைமலர்கள்! வீழ்ந்து விட்டோமென்று விருட்சம் ஆகாமலில்லை விதைகள்! சிதைக்கப் பட்டோமென்று சிலைகள் ஆகாமலில்லை பாறைகள்! சேகரிக்கும்தேன் தனக்கில்லையானாலும் சேர்க்காமல் இருப்பதில்லை தேனீக்கள்! விளைந்ததும் வெட்டப்படுவோம் என்றாலும் விளையாமல் இருப்பதில்லை பயிர்கள்! தோல்விகள், சோதனைகள், ஏமாற்றங்கள், தடங்கல்கள், எதுவாகிலும் தன்னம்பிக்கை கொள்! மாற்றம்வரும் மகிழ்ச்சி பெறும், வழிகள் பலவுண்டு வாழ்க்கை வாழ்வதற்கே!

சிறுவரிக் கவிதைகள்

மண்ணில் புதைந்தாலும் விண்ணோக்கி எழுவோம் விதைகள்! மறு பிறப்பெடுத்த மகிழ்ச்சி, எழுத்தாளன் முகத்தில்! புத்தக வெளியீடு! மூச்சைவிற்று வாழ்க்கை நடத்துகிறான் பலூன்காரன்! கசக்கிப் பிழிந்தாலும் கை மணக்கச் செய்வோம் பூக்கள்! எவ்வளவு மது அருந்தினாலும் யாருக்கும் கஷ்டங்கள் கொடுக்கமாட்டோம் வண்டுகள்! கடலில் முகம் பார்த்தால் கரைக்கு இழுத்துச் செல்கின்றன அலைகள் நிலா! குடியிருந்ததை, கூடுகட்டி வாழ்ந்ததை கண்டுகொள்ளாமல் செல்கின்றனவே பறவைகள் பட்டமரம்! என்னைப் புதைத்து உன்னை உயர்த்துவேன்! (மரங்களிடம்) வேர்கள்!

அன்புத் தோழி

நிறத்தைப் போலவே மனமும் வெள்ளை என்றவளே! – அதில் கரும்புள்ளியை வைத்துவிட்டு எங்கே சென்றாய்? தேனினும் இனிமை குரல் என்றவளே! அதைக் கசப்பாக்கிவிட்டு எங்கே சென்றாய்? பாலினும் தூய்மை குணம் என்றவளே! -அதைத் திரியவைத்துவிட்டு எங்கே சென்றாய்? கண்கள் கலங்கிய போதெல்லாம் என்னைவிட உன்கைகள் என்கண்களைத் துடைத்தனவே! இன்றும் கலங்குகிறேன் உன்கைகளுக்காக ஏங்குகிறேன்! துவண்டபோது எல்லாம் தோள்கொடுத்துத் தூக்கியவளே! இன்றும் துவளுகிறேன் ஊன்றுகோலாய் நீ எங்கே? இனியொரு பிறவி வேண்டும்! Read more

அம்மா…!

மனதிற்குள் ஒருமாபெரும் கேள்வி: மங்காத ஒளியாக, அணையாத நெருப்பாக, களையாத மேகமாக, ஓயாத அலையாக, நிற்காத தென்றலாக, மறையாத சூரியனாக, தேயாத பிறையாக, தீராத தாகமாக, நிறையாத பசியாக, வாடாத மலராக, வற்றாத ஆறாக, வடியாத கடலாக, கொட்டாத அருவியாக, குளிராத வசந்தமாக, சுவாசமில்லாத மூச்சாக, நேசமில்லாத மனதாக, உறக்கமில்லாத விழிகளாக , விழிப்பில்லாத விடியல்களாக! இன்னும் இன்னும் …. படைத்தவனைக் காணவேண்டும்! ஐந்துவயதில் உள்மனதில் உருவானது! அவ்வப்போது தலைதூக்கும், Read more

புதுமைப்பெண்

அரசுப்பொதுத் தேர்வில் மாணவிகள் முதலிடம்! ஆசிட் வீச்சில் மாணவிகள் மரணம்! பலகலை நிகழ்ச்சிகளில் மாணவிகள் முதலிடம்! ஒருதலைக் காதலால் மாணவிக்கு அரிவாள்வெட்டு! விண்வெளியை ஆராய்ந்திட விரைகிறார்கள் பெண்கள்! பாலியல் பலாத்காரத்தால் பலியாகிறார்கள் பெண்கள்! மாதவம்செய்து மங்கையராய்ப் பிறந்தால் சேதாரமாக்கிச் சிதையில் சேர்க்கிறார்கள்! நேர்கொண்ட பார்வைகள் குருடாகிப் போகின்றன, வரதட்சனைக் கொடுமையெனும் கூர்வாள்களால்! நிமிர்ந்த நன்நடைகள் முடங்கிப் போகின்றன, மதங்களெனும் பிரிவினை ஆயுதங்களால்! பெண்விடுதலை பெற்றுள்ளோம், நீதிகேட்டு வழக்கில் உள்ளது சுதந்திரம் Read more

புன்னகைக்கிறேன்!

சிலநினைவுகள் எழும்போது குரோதம் கொள்கிறேன், இன்னும்சில நினைவுகளோ என்கண்களை நனைக்கின்றன! மறக்க நினைக்கும் நினைவுகள் என்னைத் தினமும் நினைக்கச் சொல்கின்றன! நினைக்க வேண்டியவைகள் அடிக்கடி தொலைகின்றன! கரைதொட்டுச் செல்லும் அலைகள்போல் என் மனம்தொட்டுச் செல்லும் சிலநினைவுகள், விடைகள் இல்லாத விடுகதைகளாக சில நினைவுகள், முடிவில்லாத தொடர்கதைகளாக பலநினைவுகள், சில நேரங்களில் சிற்றாறுகள்போல், பல நேரங்களில் பாழ்கிணறுகள்போல், சுழலும் ஆழிப் பெருங்கடல்களாகவும் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறேன்! இருந்தாலும் பயணிப்பேன், நம்பிக்கையென்னும் துடுப்புகளால் நங்கூரம் Read more