நெஞ்சத்தில் வைத்துப் போற்று!
இமிழ்கடல் உலகமதே கிடைத்த போழ்தும்
இன்னாத தீயவழி என்றால் ஏற்கான்
அமிழ்தமிதே கிடைத்திட்ட போழ்தும் அதை
அனைவருக்கும் கொடுத்துண்ணும் அரிய பண்போன்
தமிழ்மொழியில் பாடிவந்த புலவருக்கோ
தன்தலையைத் தந்துதமிழ் காத்த சான்றோன்
தரணி வாழ்த்திட வா!
நெடுங்கடல் ஓடியும் தழிழ் கூறு
செம்மொழி நம்மொழி எனக்கூறு
செவிகள் குளிர்ந்திட அதைக்கூறு
சிந்தை மகிழ்ந்திடும் விதம்கூறு
முது மொழி நம் மொழி மூல மொழி
பிறந்தன இதன்வழி பல மொழி
இதற்கிணை ஏது ஒரு மொழி
செகத்திற் அறிந்த தமிழ் மொழி
மஞ்சத்தின் பரிசு
வண்ணச் சேலைகட்டி வந்து நின்று,
தென்னந் தோப்பெல்லாம் தேடி விட்டு,
பின்னல் சடையாடக் கோபங் கொண்டு,
தன்னந் தனிமையாளாய் வந்து விட்டாள்.
வீட்டிலே வேறொருவன் இருக்கக் கண்டு,
பாட்டாலே பரவசத்தைக் காட்டி விட்டு,
மூன்றாம் காதல்
பத்தாம் வகுப்பு
படிக்கையில்
பக்கத்தில்
அமர்ந்திருந்தவளுக்காய்
எழுதிய காதல் கடிதத்தை
அவன் அப்பாவை ?
படிக்க வைத்துப்
பார்த்த முதல் காதல் !
மௌனமாய் உன் முன்னே …
உயிரைப்
பறித்துக்கொண்டு
சென்றாய்
–
உன்
மௌனத்தின் செய்திகளை
அறிந்துக்கொள்ள
உயிரைப் பின் தொடர்ந்து
மனமும் சென்றுவிட்டது.