நெஞ்சத்தில் வைத்துப் போற்று!

இமிழ்கடல் உலகமதே கிடைத்த போழ்தும்
இன்னாத தீயவழி என்றால் ஏற்கான்
அமிழ்தமிதே கிடைத்திட்ட போழ்தும் அதை
அனைவருக்கும் கொடுத்துண்ணும் அரிய பண்போன்
தமிழ்மொழியில் பாடிவந்த புலவருக்கோ
தன்தலையைத் தந்துதமிழ் காத்த சான்றோன்