வண்ணச் சேலைகட்டி வந்து நின்று,
தென்னந் தோப்பெல்லாம் தேடி விட்டு,
பின்னல் சடையாடக் கோபங் கொண்டு,
தன்னந் தனிமையாளாய் வந்து விட்டாள்.

வீட்டிலே வேறொருவன் இருக்கக் கண்டு,
பாட்டாலே பரவசத்தைக் காட்டி விட்டு,
வேட்கையிலே பரிதவிக்கும் அவனைக் கண்டு,
கூட்டிப்போய்ப் படுக்கையிலே இருக்க வைத்தாள்.

வேலோடு போட்டியிடும் விழி இமைத்து,
பாலோடு தேனைப் பருகக் கொடுத்து,
தோலோடு தோல்சேர்க்கத் துடித்து வந்து,
காலோடு கால்பின்னக் கட்டி அணைத்தாள்.

மிஞ்சிய அழகதனால் தடுமாறி வீழ்ந்து,
பஞ்சனை படபடக்கப் பரவசத்தால் துடித்தவனை,
பிஞ்சு கரத்தினால் நெஞ்சோடு அணைத்து,
எஞ்சிய காசெல்லாம் கொஞ்சியே பெற்றாள்.

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.