சொந்த நிலமே யானாலும்
சோற்றுக்காக உழைத்திடனும்
பந்தம் உறவு வலுப்பெறவே
பாசத்துடனே பழகிடனும்
தங்கம் போல் விலைபெறவே
தகுதி நன்றாய் அமைந்திடனும்
விந்தை புரியும் உலகமிது
வினயத் துடனே வாழ்ந்திடனும்
மரபுக் கவிதை
அன்பு – ஆசிரியப்பா
கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.