வெண்பா

உள்ளத்திற் கஃதே உயர்வு!

வல்ல துணையென வண்டமிழைக் கொண்டவர்க்கே
இல்லை ஒருபோதும் இன்னலிங்கே!- தொல்லைதரும்
வெள்ளைய ரின்மொழி வேண்டாதார் என்றிருந்தால்
உள்ளத்திற் கஃதே உயர்வு!

தன்னையே தான்போற்றும் தற்பெருமை கொண்டவர்க்கே
என்றுமிந்தப் பூமியிலே இல்லையிடம்!

 » Read more about: உள்ளத்திற் கஃதே உயர்வு!  »

புதுக் கவிதை

தாயன்பு!

வேதனை வலிகளுடன்
போறாடி எனை ஈன்றெடுத்தாய்!
பாலோடு தேன்கலந்தே
திகட்டாமல் ஊட்டுவித்தாய்!
தேரோடும் வீதியிலே
சலிக்காமல் நடக்க வத்தாய்!
பாரெல்லாம் போற்றிடவே
பண்பாளனாய் நீ வளர்த்தாய்!

 » Read more about: தாயன்பு!  »

புதுக் கவிதை

தீபாவ(ளி)லி

கொளுத்திப் போட்ட பட்டாசுகளில்
மருந்துகளைத் திரட்டிக் கொண்டிருந்தான்.
இதை வைத்தே வெடிகளைத் தயாரித்து விடுவான்.
ஒவ்வொன்று வெடிக்கும்,
ஒவ்வொன்று புஸ்ஸ்ஸ் விடும்.
அடுத்த வீட்டு அண்ணன் கொடுத்த
பழைய உடைதான்,

 » Read more about: தீபாவ(ளி)லி  »

புதுக் கவிதை

வாய்க்கும் நல்லதீபாவளி

ஒளியூட்டும் இனியவிழா தீபாவளி இருளகற்றி
மருளகற்றி மனம்மகிழ தீபாவளி வருமெமக்கு
நிறைவான மனதுவர தீபாவளி உதவிடட்டும்
நலம்விளைக்க மனமெண்ணி வரவேற்போம் தீபாவளி! புலனெல்லாம் தூய்மைபெற புத்துணர்வு பொங்கிவர அலைபாயும் எண்ணமெலாம் நிலையாக நின்றுவிட மகிழ்ச்சியது மனமெங்கும்
மத்தாப்பாய் மலர்ந்துவிட வாசல்நின்று பார்க்கின்றோம் வந்திடுவாய் தீபாவளி!  » Read more about: வாய்க்கும் நல்லதீபாவளி  »

மரபுக் கவிதை

வெடிதனை வெடிக்க வேண்டாம்!

diwali_tn1வெடிதனை வெடிக்க வேண்டாம் – வான்
வெளிதனைக் கெடுக்க வேண்டாம்!
செடிகொடி மரங்கள் தன்னில் – வாழும்
சிட்டினை அழிக்க வேண்டாம்!

விலங்குகள் பறவை எல்லாம் –

 » Read more about: வெடிதனை வெடிக்க வேண்டாம்!  »

புதுக் கவிதை

அவர்கள்

அவர்கள்
தங்களை நல்லவர்கள் போல்
தெரியப்படுத்திக்
கொள்கிறார்கள்??

அவர்களின்
உடல்மொழி
ஒவ்வொரு மனிதர்களிடத்திலும்
இலகுவாக
பொருந்திக்கொள்கிறது?

வெளிச்சத்தை
உமிழ்ந்து
விட்டில்களை உண்ணும்
விளக்குகளைப்போல
அவர்களின் பேச்சு
வன்மத்தை கக்குகிறது??

 » Read more about: அவர்கள்  »

புதுக் கவிதை

கண்ணாடி

கண்ணாடி Mirror

மூலம்: சில்வியா பிளாத்
மொழியாக்கம்: தாரா கணேசன்

நான் வெள்ளியின் துல்லியமானவள்
எவ்வித முன்புனைவுகளும் அற்றவள்
காண்பதையெல்லாம் உடனுக்குடன் விழுங்குபவள்
காதலின் மூடுபனியோ அன்றி
வெறுப்போ இன்றி
கொடூரம் அற்றவளாய்,

 » Read more about: கண்ணாடி  »

புதுக் கவிதை

ஆழி சூழ் தமிழ்

இலெமூரியாவில் பிறந்தவன்
ஆழியில் உலகம் அளந்தவன்

நாற்பத்தொன்பது நாடுகளாம் குமரிக்கண்டத்தில்…..

நாதியற்று நிற்கிறான் உலகக்கண்டங்களில்..!

மயிலுக்கும்
முல்லைக்கும் …..
அள்ளிக்கொடுத்த கடை ஏழு வள்ளல்கள்
வாழ வழியின்றி காத்துக்கிடக்கிறான்
அயல்நாட்டில்
அகதியின் வாரிசுகள்…..!

 » Read more about: ஆழி சூழ் தமிழ்  »

கவிதை

கம்பன் புகழ்

1.
கவியால் கோட்டையைக் கட்டிய கம்பனின்
கால்களைத் தொட்டுத் தொழுகின்றேன்!
புவியும் செழித்திடப் பூந்தமிழ்த் தோப்பைத்
புலமை தழைக்க உழுகின்றேன்!
  
2.
விருத்தக் கவிகள் விருந்தென இன்பம்
விளைத்திடும் என்றே..நான் உண்டேனே!

 » Read more about: கம்பன் புகழ்  »

கவிதை

உண்டு!

பணஞ்சேர்க்க எண்ணுவரே அதிக முண்டு !
பணமின்றிச் செயமுடியும் செயலு முண்டு !
குணமிருந்தும் பணமின்றி இருப்போ ருண்டு !
கொள்கையிலே தோல்வியினைக் கண்டோ ருண்டு !
பணமிருந்தும் நிறைவேதான் காணா ருண்டு !

 » Read more about: உண்டு!  »