கருது விளைஞ்சிருக்கு!

நெல்லும் விளைஞ்சிருக்கு நெஞ்சும் நிறைஞ்சிருக்கு! அல்லி மலருவொன்னு அங்கே பூத்திருக்கு! துள்ளும் அழகிருக்கு தூண்டில் கண்ணிருக்கு அள்ளி அணைப்பதற்கு ஆசை மிகுந்திருக்கு! வரப்பு வயலோரம் வசந்தம் அமர்ந்திருக்கு கருப்புக் குயிலுவொன்னு காத்துத் தவமிருக்கு! திரும்பும் திசையெங்கும் தீயா நினைப்பிருக்கு குறும்புப் பார்வையிலே கோலம் குடியிருக்கு! கருதும் அறுப்பதற்கு காலம் கனிஞ்சிருச்சு விருந்தும் வைக்கத்தான் வேளை நெருங்கிருச்சு! கரும்பே நாவுன்னைக் கடிச்சுத் தின்னட்டுமா! எறும்பா மாறியுந்தான் எடுத்துச் சுவைக்கட்டுமா!

தேன்தமிழ் அழகு!

தேங்கிக் கிடக்கும் தேன்தமிழ் அழகைத் தேடிக் கண்டேன் அறிதாய்! ஏங்கித் தவிக்கும் எந்தன் நெஞ்சின் ஏக்கம் தன்னை அறிவாய்! தாங்கிக் காப்பேன் தமிழே உன்னை தடைகள் தாண்டி வருவாய்! நீங்கா துன்னை நினைவில் வைத்தேன் நெருங்கி வந்தேத் தொடுவாய்! ஆளை மயக்கும் அணிச்சப் பூவை அள்ளிச் சுவைக்கத் தேடும்! சோலை வனமா? சுந்தரத் தமிழா? சொந்தம் வேண்டிப் பாடும்! மாலை நேர மையல் நிலவை மனத்தில் வைத்தே வாடும்! பாலை Read more

வெடிதனை வெடிக்க வேண்டாம்!

வெடிதனை வெடிக்க வேண்டாம் – வான் வெளிதனைக் கெடுக்க வேண்டாம்! செடிகொடி மரங்கள் தன்னில் – வாழும் சிட்டினை அழிக்க வேண்டாம்! விலங்குகள் பறவை எல்லாம் – பெரும் வெடியினால் வெறுண்டே ஓடும்! அளவிலாத் துன்பம் கொள்ளும் – வாழ அஞ்சிடும்! அழிந்து போகும்! வெடிதனைச் செய்வ தாலே – பெரும் விபத்துமே நடக்கு தின்று! வெடித்தொழில் தம்மை விட்டு – இயற்கை விவசாயம் செய்ய வாரீர்! கந்தக வெடிம Read more

வருவாய் நிலவே!

நீலவானில் நீந்துகின்ற நிலவே நிலவே – என் நித்திரையைக் களைத்ததென்ன நிலவே நிலவே! நீலமலர் ஆடைகட்டி வந்தாய் நிலவே – என் நெஞ்சத்தில் மகிழ்ந்தாட வருவாய் நிலவே! தனிமையிலே தவழ்கின்ற தங்க நிலவே – உன் தாகத்தைத் தீர்த்துவைப்பேன் வருவாய் நிலவே! நனிசொட்டும் பார்வையிலே நனைந்தேன் நிலவே – உன் நறுங்கூந்தல் அழகினிலே கரைந்தேன் நிலவே! ஏக்கத்தில் திரிகின்ற என்றன் நிலவே – உனை எப்போதும் நான்காண வேண்டும் நிலவே! Read more

கனவு நாயகன் அப்துல்கலாம்!

தூக்கத்தில் வருவதல்ல கனவு – உன்னைத் தூங்காமல் செய்வதுதான் கனவாம் – என்றே ஊக்கத்தை நமக்கெல்லாம் தந்தவர் – இந்த உலகறியத் தலைமகனாய் வந்தவர்! இளைஞர்க ளின்எழுச்சி நாயகர் – அவர் இணையில்லாக் குணம்படைத்தத் தாயவர் – நாட்டின் நிலையறிந்து முன்னேறச் செய்தவர் – மக்கள் நெஞ்சத்தில் நீங்காமல் நிற்பவர்! கொள்கையிலே குன்றாக நின்றவர் – செயற்கைக் கோள்விட்டுச் சிகரத்தை வென்றவர் – நாட்டை வல்லரசாய் ஆக்கிடவே விளைந்தவர் – Read more

உலகம் மாறிப் போச்சு!

குளமுமே வத்திப் போச்சு குடிக்கவோ தண்ணி இல்ல! – இப்ப நிலமுமே காஞ்சு போச்சு நிலத்தடி நீரு மில்ல! விளச்சலும் குறைஞ்சு போச்சு விளைநிலம் வீடா ஆச்சு – நல்ல மழையுமே பெய்ய வில்ல மனசுமே உடைஞ்சு போச்சு! நீரோடும் ஆறு மிங்கே நீரின்றி வறண்டு போச்சு – செழித்த ஏரோடும் நிலத்தக் காணோம் எல்லாமே மாறிப் போச்சு! மரத்தயும் வெட்டி யாச்சு மண்வளம் கெட்டுப் போச்சு! – செயற்க Read more

புரட்சி வெடிக்கட்டும்!

உழவுத் தொழிலும் செழிக்கட்டும் – நம்
உள்ளம் மகிழ்ச்சி கொள்ளட்டும்!
வளமாய் நாட்டை மாற்றிடவே – ஒரு
வண்ணத் தமிழன் ஆளட்டும்!

விடையும் காண விரையட்டும் – நல்
வெற்றிக் கனியைப் பறிக்கட்டும்!
குடியால் வீழ்ந்து கிடப்போரும் – தமிழ்க்
குடியைக் காக்க விழிக்கட்டும்!