diwali_tn1வெடிதனை வெடிக்க வேண்டாம் – வான்
வெளிதனைக் கெடுக்க வேண்டாம்!
செடிகொடி மரங்கள் தன்னில் – வாழும்
சிட்டினை அழிக்க வேண்டாம்!

விலங்குகள் பறவை எல்லாம் – பெரும்
வெடியினால் வெறுண்டே ஓடும்!
அளவிலாத் துன்பம் கொள்ளும் – வாழ
அஞ்சிடும்! அழிந்து போகும்!

வெடிதனைச் செய்வ தாலே – பெரும்
விபத்துமே நடக்கு தின்று!
வெடித்தொழில் தம்மை விட்டு – இயற்கை
விவசாயம் செய்ய வாரீர்!

கந்தக வெடிம ருந்தை – நாம்
கண்டதும் தவிர்க்க வேண்டும்!
வெந்திடும் உயிர்கள் தம்மை – நாம்
விரைந்துமே காக்க வேண்டும்!

சூழலைக் காப்ப தற்கு – மண்
சுரத்தினைத் தீர்க்க வேண்டும்!
ஞாலமும் நிலைத்து நிற்க – என்றும்
நல்லன செய்ய வேண்டும்!

மண்ணினை மாசாய் ஆக்கும் – தீய
மத்தாப்பு வெடியை நீக்கு!
வண்ணமாய் வாழ்க்கை வாழ – இவ்
வையத்தை வளமாய் ஆக்கு!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

மரபுக் கவிதை

அண்ணா

வினைச்சொல்லாய் வேதியத்தின் இருள கற்றி
விடியல்தர வந்துதித்த கதிர வன்நீ!
முனைச்சொல்லாய்க் கூர்படைத்த கூர்ப டைத்துக்
குத்தீட்டிச் சொல்வடித்த உலைக்க ளம்நீ!
பிணைச்சொல்லாய்ப் பிரிந்துபட்ட தமிழி னத்தைப்
பேரினமாய்த் திரளவைத்த பெருந்தி றம்நீ!

 » Read more about: அண்ணா  »

மரபுக் கவிதை

அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற அரசியல் சகாப்தமாக வாழ்ந்து சாதித்து மறைந்த ஒரு மாபெரும் மேதை பேரறிஞர் அண்ணா அவர்கள் என்றால் அது கிஞ்சித்தும் மிகையாகாது. ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து கல்வியாலும் உழைப்பாலும் உயர்ந்து தன் நாவன்மையால் தமிழகமக்களைக் கட்டிப்போட்டு,

 » Read more about: அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)  »