தமிழ் எங்கள் உயிருக்கு நேர்தெருவெங்கும் தமிழ்முழக்கம்
நறுந்தேனாய் ஒலிக்கின்ற
திருநாளும் வந்திடத்தான் வேண்டும் – நாம்
தீந்தமிழில் பேசிடுவோம் மீண்டும்!

விழியின்றேல் ஒளியில்லை
மொழியின்றேல் இனமில்லை
அழியாமல் மொழிதன்னைக் காப்போம் – நாம்
அன்றாடம் தமிழ்பேசி ஆர்ப்போம்!

ஆதியிலே மூத்தக்குடி
பாதியிலே பிரிந்தின்று
வீதியிலேக் கிடப்பதென்னக் கோலம் – நீயும்
விழித்திட்டால் கைகூடும் ஞாலம்!

பெற்றெடுத்தக் குழந்தைக்கு
மற்றமொழி பெயர்வைத்தல்
குற்றமென உணர்வதுவும் என்றாம் – இனிய
கொஞ்சுதமிழ் பெயர்சூட்டல் நன்றாம்!

பெற்றோரைப் பேணாமல்
நற்றமிழைக் காவாமல்
வற்றித்தான் போனதுவா அன்பு – நீயும்
வருந்தித்தான் அழுவதுவா பின்பு!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.