புரட்சி எங்கும் வெடிக்கட்டும் – தமிழ்
புலிகள் கூட்டம் கிளம்பட்டும்!
புரட்டுப் பேசும் கூட்டத்தை – அது
புரட்டிப் போட்டே வீழ்த்தட்டும்!

மாற்றம் மண்ணில் மலரட்டும் – நம்
மடமைத் தனங்கள் விலகட்டும்!
ஏற்றம் காண எங்கெங்கும் – புது
எழுச்சிப் பண்கள் ஒலிக்கட்டும்!

உழவுத் தொழிலும் செழிக்கட்டும் – நம்
உள்ளம் மகிழ்ச்சி கொள்ளட்டும்!
வளமாய் நாட்டை மாற்றிடவே – ஒரு
வண்ணத் தமிழன் ஆளட்டும்!

விடையும் காண விரையட்டும் – நல்
வெற்றிக் கனியைப் பறிக்கட்டும்!
குடியால் வீழ்ந்து கிடப்போரும் – தமிழ்க்
குடியைக் காக்க விழிக்கட்டும்!

அடிமை வாழ்வு ஒழியட்டும் – தமிழன்
ஆட்சி பீடம் ஏறட்டும்!
விடியல் கண்ணில் தோன்றிடவே – தமிழ்
வீரம் மண்ணில் விளையட்டும்!

தெளிவும் மனத்தில் தோன்றட்டும் – தமிழ்
தென்றல் காற்றாய் வீசட்டும் !
இழி(ளி)வைத் தடுக்க எழுந்தேவா – மன
இருளும் மறையக் காணட்டும்!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.