நீலவானில் நீந்துகின்ற நிலவே நிலவே – என்
நித்திரையைக் களைத்ததென்ன நிலவே நிலவே!
நீலமலர் ஆடைகட்டி வந்தாய் நிலவே – என்
நெஞ்சத்தில் மகிழ்ந்தாட வருவாய் நிலவே!

தனிமையிலே தவழ்கின்ற தங்க நிலவே – உன்
தாகத்தைத் தீர்த்துவைப்பேன் வருவாய் நிலவே!
நனிசொட்டும் பார்வையிலே நனைந்தேன் நிலவே – உன்
நறுங்கூந்தல் அழகினிலே கரைந்தேன் நிலவே!

ஏக்கத்தில் திரிகின்ற என்றன் நிலவே – உனை
எப்போதும் நான்காண வேண்டும் நிலவே!
தேக்கித்தான் வைத்திட்ட ஆசைக் கனவை – நாம்
தினந்தோறும் பேசிடலாம் வருவாய் நிலவே!

அலைபாயும் மேகத்தில் தவிக்கும் நிலவே – நீ
ஆகாயம் தனில்ஏறி வருவாய் நிலவே!
கலையானப் பெண்ணாக உலவும் நிலவே – என்
கவலைக்கு மருந்தாக வந்தாய் நிலவே!

வானமென்னும் கடல்தன்னில் விளைந்தாய் நிலவே – நீ
வலைவீசிக் கண்ணாலே அழைத்தாய் நிலவே!
வானம்பா டியாகவந்த வண்ண நிலவே – உன்
வரம்வேண்டிக் காத்திருப்பேன் அருள்வாய் நிலவே!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.