இலெமூரியாவில் பிறந்தவன்
ஆழியில் உலகம் அளந்தவன்

நாற்பத்தொன்பது நாடுகளாம் குமரிக்கண்டத்தில்…..

நாதியற்று நிற்கிறான் உலகக்கண்டங்களில்..!

மயிலுக்கும்
முல்லைக்கும் …..
அள்ளிக்கொடுத்த கடை ஏழு வள்ளல்கள்
வாழ வழியின்றி காத்துக்கிடக்கிறான்
அயல்நாட்டில்
அகதியின் வாரிசுகள்…..!

ஈழத்தில் பல உயிர்கள்
உயிரோடு புதைக்கப்பட்டபோதும்…
இனப்படுகொலைகள் நடந்தபோதும்…
கம்பிரமாய் ஒளித்துக்கொண்டு இருக்கிறது
ஐ. நாவின் நுழைவாயில்

“யாதும் ஊரே யாவரும் கேளீர்”

தஞ்சையின் பெரியகோவில்
மதுரை மீனாட்சி
கம்போடியாவின் அங்கூர்வாட்
தமிழனின் பெருமைதான்
இன்று……
கலை
திரை வடிவில்
கேலிக்கூத்து…..!

யாழ்பாணத்தில் தீயிட்டு எரித்தான்
ஆரியர்கள் ஆத்தில் மூழ்கிக்கரைத்தான்

இப்போது…..
தமிழன்
ஆங்கிலத்தில் பேசி தொலைக்கிறான்…!
எம் மொழியை
செம்மொழியை…!

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
இலக்கண…
இலக்கிய செழுமையோடு
பிறந்த முதல் குழந்தை
அன்னியமொழி கலந்து பேசியே
ஊனமாகி விட்டோம்….!

மறந்து விடாதீர்கள்
மரியாஸ்மித்தின் கல்லறையில்
“ஏயக்” மொழி
உறங்கிக்கொண்டு இருக்கின்றது…!

தமிழுக்குப் பின் பிறந்த
லத்தீனும் , கிரேக்கமும் என்னானது…?
உலகை தனது அன்புக்கரங்களாள் அரவணைத்த
தேவகுமாரனின் ஆசீர்வதிக்கப்பட்ட மொழிதான்…

அராமிக்கும், ஹீப்ரூம் என்னானது…..?
புத்தர் போதித்த பாலி மொழி ,
மாபெரும் இதிகாசங்களையும் புராணங்களையும் தந்த
சமஸ்கிருதம் என்னானது..?

இப்போது
அகராதியில் மட்டுமே இருக்கிறது
நாளை….!
அதுவும் இருக்காது….!

மொழி இனத்தின் அடையாளம்
“மொழி அழிந்தால் இனம் அழியும்”
இனம் வாழ மொழி காப்போம்.

தமிழரிடம் தமிழில் பேசுவோம்
தமிழர் பெருமை உணர்த்துவோம்
தமிழன் என்று சொல்வோம்
தலை நிமிர்ந்து நிற்போம்…

வாழ்க தமிழ்!
வளர்க தமிழ்!


2 Comments

ஈழபாரதி · அக்டோபர் 25, 2016 at 17 h 29 min

நன்றி ஐயா….

Sofia · அக்டோபர் 25, 2016 at 17 h 56 min

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
இலக்கண…
இலக்கிய செழுமையோடு
பிறந்த முதல் குழந்தை
அன்னியமொழி கலந்து பேசியே
ஊனமாகி விட்டோம்….!

இப்போது
அகராதியில் மட்டுமே இருக்கிறது
நாளை….!
அதுவும் இருக்காது….!

நல்ல வரிகள். மிகவும் நன்றாக இருக்கிறது.

அதுவும் இருக்காது….!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

புதுக் கவிதை

காதல் கவித்துளிகள்

 

காதல் கவித்துளிகள்

பிப்ரவரி 2022 இதழுடன் இணைப்பு

காதல்

காதல் என்று சொல்லும் போதே மனத்துள் ஒரு உற்சாகம் பிறக்கும். ஒரு உத்வேகத்தைத் தரும் மந்திரச்சொல் காதல்.

 » Read more about: காதல் கவித்துளிகள்  »

புதுக் கவிதை

யாருக்காக…

போலியான மனிதர்களோடு வாழ்ந்து பழக்கப்பட்டதனால் உண்மையானவர்கள் யாரென்று கூட உன்னால் இனங்காண முடியாமலே போய் விடுகிறது நீ யாருக்காக புன்னகைத்துக் கொண்டிருந்தாயோ அவர்கள் யாருக்காகவோ வாழப் போய் விட்டார்கள்