இலெமூரியாவில் பிறந்தவன்
ஆழியில் உலகம் அளந்தவன்

நாற்பத்தொன்பது நாடுகளாம் குமரிக்கண்டத்தில்…..

நாதியற்று நிற்கிறான் உலகக்கண்டங்களில்..!

மயிலுக்கும்
முல்லைக்கும் …..
அள்ளிக்கொடுத்த கடை ஏழு வள்ளல்கள்
வாழ வழியின்றி காத்துக்கிடக்கிறான்
அயல்நாட்டில்
அகதியின் வாரிசுகள்…..!

ஈழத்தில் பல உயிர்கள்
உயிரோடு புதைக்கப்பட்டபோதும்…
இனப்படுகொலைகள் நடந்தபோதும்…
கம்பிரமாய் ஒளித்துக்கொண்டு இருக்கிறது
ஐ. நாவின் நுழைவாயில்

“யாதும் ஊரே யாவரும் கேளீர்”

தஞ்சையின் பெரியகோவில்
மதுரை மீனாட்சி
கம்போடியாவின் அங்கூர்வாட்
தமிழனின் பெருமைதான்
இன்று……
கலை
திரை வடிவில்
கேலிக்கூத்து…..!

யாழ்பாணத்தில் தீயிட்டு எரித்தான்
ஆரியர்கள் ஆத்தில் மூழ்கிக்கரைத்தான்

இப்போது…..
தமிழன்
ஆங்கிலத்தில் பேசி தொலைக்கிறான்…!
எம் மொழியை
செம்மொழியை…!

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
இலக்கண…
இலக்கிய செழுமையோடு
பிறந்த முதல் குழந்தை
அன்னியமொழி கலந்து பேசியே
ஊனமாகி விட்டோம்….!

மறந்து விடாதீர்கள்
மரியாஸ்மித்தின் கல்லறையில்
“ஏயக்” மொழி
உறங்கிக்கொண்டு இருக்கின்றது…!

தமிழுக்குப் பின் பிறந்த
லத்தீனும் , கிரேக்கமும் என்னானது…?
உலகை தனது அன்புக்கரங்களாள் அரவணைத்த
தேவகுமாரனின் ஆசீர்வதிக்கப்பட்ட மொழிதான்…

அராமிக்கும், ஹீப்ரூம் என்னானது…..?
புத்தர் போதித்த பாலி மொழி ,
மாபெரும் இதிகாசங்களையும் புராணங்களையும் தந்த
சமஸ்கிருதம் என்னானது..?

இப்போது
அகராதியில் மட்டுமே இருக்கிறது
நாளை….!
அதுவும் இருக்காது….!

மொழி இனத்தின் அடையாளம்
“மொழி அழிந்தால் இனம் அழியும்”
இனம் வாழ மொழி காப்போம்.

தமிழரிடம் தமிழில் பேசுவோம்
தமிழர் பெருமை உணர்த்துவோம்
தமிழன் என்று சொல்வோம்
தலை நிமிர்ந்து நிற்போம்…

வாழ்க தமிழ்!
வளர்க தமிழ்!