ஒளியூட்டும் இனியவிழா
தீபாவளி இருளகற்றி
மருளகற்றி மனம்மகிழ
தீபாவளி வருமெமக்கு
நிறைவான மனதுவர
தீபாவளி உதவிடட்டும்
நலம்விளைக்க மனமெண்ணி
வரவேற்போம் தீபாவளி!
புலனெல்லாம் தூய்மைபெற
புத்துணர்வு பொங்கிவர
அலைபாயும் எண்ணமெலாம்
நிலையாக நின்றுவிட
மகிழ்ச்சியது மனமெங்கும்
மத்தாப்பாய் மலர்ந்துவிட
வாசல்நின்று பார்க்கின்றோம்
வந்திடுவாய் தீபாவளி!
பட்டாசு வெடித்திடுவோம்
மத்தாப்புக் கொழுத்திடுவோம்
தித்திக்கும் பட்சணங்கள்
அத்தனையும் செய்திடுவோம்
கஷ்டமான அத்தனையும்
கழன்றோட வெண்டுமென்று
இஷ்டமுடன் யாவருமே
இறைவனிடம் இறைஞ்சிநிற்போம்!
தீபாவளித் தினத்தில்
தீயவற்றைக் தீயிடுவோம்
தீபாவளித் தினத்தில்
திருப்பங்கள் வரநினைப்போம்
தீபாவளித் தினத்தில்
சினம்சேரல் தவிர்த்திடுவோம்
தீபாவளி எமக்குச்
சிறந்ததெல்லாம் தந்திடட்டும்!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

புதுக் கவிதை

காதல் கவித்துளிகள்

 

காதல் கவித்துளிகள்

பிப்ரவரி 2022 இதழுடன் இணைப்பு

காதல்

காதல் என்று சொல்லும் போதே மனத்துள் ஒரு உற்சாகம் பிறக்கும். ஒரு உத்வேகத்தைத் தரும் மந்திரச்சொல் காதல்.

 » Read more about: காதல் கவித்துளிகள்  »

புதுக் கவிதை

யாருக்காக…

போலியான மனிதர்களோடு வாழ்ந்து பழக்கப்பட்டதனால் உண்மையானவர்கள் யாரென்று கூட உன்னால் இனங்காண முடியாமலே போய் விடுகிறது நீ யாருக்காக புன்னகைத்துக் கொண்டிருந்தாயோ அவர்கள் யாருக்காகவோ வாழப் போய் விட்டார்கள்