அவர்கள்
தங்களை நல்லவர்கள் போல்
தெரியப்படுத்திக்
கொள்கிறார்கள்??
அவர்களின்
உடல்மொழி
ஒவ்வொரு மனிதர்களிடத்திலும்
இலகுவாக
பொருந்திக்கொள்கிறது?
வெளிச்சத்தை
உமிழ்ந்து
விட்டில்களை உண்ணும்
விளக்குகளைப்போல
அவர்களின் பேச்சு
வன்மத்தை கக்குகிறது??
அவர்களின் பாவணை
காழ்ப்புணர்ச்சிகளால்
சபிக்கப்பட்டு?
குரோதங்களை வெளியுமிழ்ந்து
உத்தமர்கள் போல
பிரதிபலிக்கிறது ?
வாய்ச்சொல்லால்
வாள்வீசும் இவர்கள்
தங்களை
விளம்பரப்படுத்திக்கொள்ள
அங்லாய்க்கிறார்கள்??
உழைப்பை செலுத்தாமல்
ஒரு அசைவையும் புரியாமல்
அங்கீகாரத்திற்காக
அலைந்து திரிகிறார்கள்??
மாட்சிமை பொருந்தியவனே
அவர்களை
எம்மிடத்தில் ஏன்
அறிமுகம் செய்தீர்???
அவர்களின் சுயரூபத்தை
என்னிடத்தில் காட்டிய
உமக்கே என்
முதல் வணக்கம்???
1 Comment
கே.தேன்மொழி தேவி · நவம்பர் 13, 2016 at 5 h 28 min
எம்மிடத்தில் ஏன்
அறிமுகம் செய்தீர்???
அவர்களின் சுயரூபத்தை
அருமை . கை தட்டி பாராட்டினேன். இந்த கேள்வி எனக்குள்ளும் இருந்து கொண்டே இருக்கிறது.