மரபுக் கவிதை

பாடலாசிரியர் நா. முத்துக்குமாருக்கு அஞ்சலி

கவியுலகின் நன்முத்து
கண்மூடிக் கொண்டது ,
பொன்னுலகு தேடியே
புறப்பட்டு விட்டது .

திரையில் ஜொலித்த
தீந்தமிழ் வைரம் ,
திசைமாறிப் போனதால்
திக்கெட்டும் துயரம் .

 » Read more about: பாடலாசிரியர் நா. முத்துக்குமாருக்கு அஞ்சலி  »

கவிதை

நா.முத்துக்குமார் பாடலாசிரியருக்கு கவிதாஞ்சலி

n.mபாட்டொன்று எழுதுவதற்கு அமர்ந்து விட்டால்
பசிதூக்கம் அத்தனையும் மறந்தே போய்
மெட்டினையே நினைவினிலே அசை போட்டு
மெல்லிசையை அதனிலே கரைவ தற்கே
இட்டமுடன் பாட்டெழுதி தந்து விட்டு
இமைமூடாமல் இருந்தது எத்தனை நாளோ ?

 » Read more about: நா.முத்துக்குமார் பாடலாசிரியருக்கு கவிதாஞ்சலி  »

கவிதை

உன்னதமாம் சுதந்திரத்தை உயிராகக் காப்போம்!

காந்தியெனும் உத்தமரால் சுதந்திரத்தைக் கண்டோம்!
….. காவிவண்ணத் தியாகத்தை அவருருவில் கண்டோம்!
சாந்தியெனும் சத்தியத்தின் சீலராகக் கண்டோம்!
….. சரித்திரத்தில் வெள்ளைவண்ணத் தவஒளியைக் கண்டோம்!
காந்தியத்தின் மகிமையெல்லாம் கற்பதிலே கண்டோம்!

 » Read more about: உன்னதமாம் சுதந்திரத்தை உயிராகக் காப்போம்!  »

கவிதை

நட்பு

அன்புகொண்ட நண்பரோடு
பழகுகின்ற போதினில்
என்புஞ்சதையும் உள்ளதுபோல்
இருவர்நட்பும் அமையுமே.

எந்தநாளில் எந்தநேரம்
என்னதீமை நேரினும்
அந்தநாளில் அந்தநேரம்
அதனைப்போக்க நண்பனே

மின்னல்போல வந்துமுன்னே
இன்பஞ்சேரச் செய்வனே.

 » Read more about: நட்பு  »

கவிதை

​உச்சிக் குளிருதடா!

கட்டி அணைக்கையிலே உச்சிக் குளிருதடா!

விட்டு விலகையிலே நெஞ்சம் கணக்குதடா!

உந்தன் ஸ்பரிசமது உயிரைப் பிழியுதடா!

எந்தன் மனசினிலே இன்பம் வழியுதடா !

உச்சி முகர்ந்தாலே உள்ளம் சிலிர்க்குதடா!

 » Read more about: ​உச்சிக் குளிருதடா!  »

கவிதை

கன்னியே

சிலைபோல் மேனி சிரித்தால் பூ நீ
சிந்தனை வளைக்குதடி – கடல்
அலைபோல் உந்தன் நினைவே எந்தன்
அடிமனம் துளைக்குதடி

கண்ணே உன்னைக் காணக் காணக்
கனவுகள் வளருதடி –

 » Read more about: கன்னியே  »

கவிதை

அப்துல் கலாம்

(முதலாமாண்டு நினைவஞ்சலி :27/07/2015)

விஞ்ஞானம் வென்றீரே; மனங்கள் யாவும்
… விதைத்தவித்து விளைந்துநிற்க கண்டீ ரில்லை
அஞ்சாமை அகற்றினீரே; அறிவுக் கண்ணை
… அகத்தினிலே சுடர்விடவேச் செய்த நீவிர்
நெஞ்சமெலாம் நிறைந்தமகான் கலாமென் போமே

 » Read more about: அப்துல் கலாம்  »

கவிதை

அம்மனைத் தேடும் அழகுரதம்

வெள்ளிக்குடம் சுமந்துவரும் தங்கரதமே – உந்தன்
வேண்டுதலும் நிறைவேறும் பொன்னுரங்கமே !
பால்குடத்தை எடுத்துவரும் தேனருவியே – உந்தன்
பாவங்கள் போக்கிவிடும் தேவியருளே !

அலங்கார நடைபோடும் தேவதையே –

 » Read more about: அம்மனைத் தேடும் அழகுரதம்  »

கவிதை

வேங்கையாய் வீரனாய் வருவான்

தேரேறி வில்கொண்டு
என்நெஞ்சில் வந்தவன்
திருமகன் என்று வருவான்

கார்கொண்ட வண்ணமும்
கனியிதழ் வாய்கொண்டு
கனிமுத்தம் என்று தருவான்

நேர்கொண்ட வீரமும்
கொடை அன்புகொண்டவன்
நிம்மதி என்று தருவான்

போர்கொண்ட வேங்கையாய்
புறங்காணா வேந்தனாய்
புலியாக வாழும் வீீரன்

சீர்கொண்டு வருவானோ
சிலையாநான் வாடி
சிந்தையில் அவனை வைத்தேன்

பார்வென்று தார்மாலை
சூடிவரும் போதிலே
பரிசொன்று நான் சூடுவேன்

 » Read more about: வேங்கையாய் வீரனாய் வருவான்  »