கவிதாயினி மதுமிதா

விக்கிரமாதித்யனின் அதிசய சிம்மாசனம் ஒரு நிலத்தில் புதைந்திருந்தது; காவலன் ஒருவன், அதன் மேல் நின்றான். அவனிடம் பரிவும் விருந்தோம்பலும் இன்னபிற நற்குணங்களும் நிறைந்திருந்தன. அந்தப் பீடத்திலிருந்து இறங்கினான்; மறுநொடி அந்த நற்குணங்கள் யாவும் அவனை விட்டு நீங்கின. இப்படி ஒரு கதை உண்டு. அது, உண்மையோ? பொய்யோ? இங்கே அதை ஒரு தொன்மக் குறியீடாய்க் கொள்வோம். Read more

உழைப்பு

சொந்த நிலமே யானாலும் சோற்றுக்காக உழைத்திடனும் பந்தம் உறவு வலுப்பெறவே பாசத்துடனே பழகிடனும் தங்கம் போல் விலைபெறவே தகுதி நன்றாய் அமைந்திடனும் விந்தை புரியும் உலகமிது வினயத் துடனே வாழ்ந்திடனும்

குறள் தமிழ்ச் செயலி உருவான கதை

கலையரசன் கந்தசாமி, சுருக்கமாக கலை கந்தசாமி புதுவை மாநிலம் காரைக்காலில் பிறந்தவர். புதுவை பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியலில் பட்ட மேற்படிப்பு முடித்துவிட்டு கடந்த 14 வருடங்களாக அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் ஒரு மிகப்பெரிய நிறுவத்தில் மென் பொருள் வல்லுனராக பணி புரிந்து வருகிறார். குறள் எனும் தமிழ்ச் செயலியை தனி ஒருவராக உருவாக்கி அதனை Read more

நெஞ்சத்தில் வைத்துப் போற்று!

இமிழ்கடல் உலகமதே கிடைத்த போழ்தும்
இன்னாத தீயவழி என்றால் ஏற்கான்
அமிழ்தமிதே கிடைத்திட்ட போழ்தும் அதை
அனைவருக்கும் கொடுத்துண்ணும் அரிய பண்போன்
தமிழ்மொழியில் பாடிவந்த புலவருக்கோ
தன்தலையைத் தந்துதமிழ் காத்த சான்றோன்

தரணி வாழ்த்திட வா!

நெடுங்கடல் ஓடியும் தழிழ் கூறு
செம்மொழி நம்மொழி எனக்கூறு
செவிகள் குளிர்ந்திட அதைக்கூறு
சிந்தை மகிழ்ந்திடும் விதம்கூறு

முது மொழி நம் மொழி மூல மொழி
பிறந்தன இதன்வழி பல மொழி
இதற்கிணை ஏது ஒரு மொழி
செகத்திற் அறிந்த தமிழ் மொழி

மறவாதீர்

இளங்கதிர் எழவும் இறைகொளக் கருதி
இணைந்தெழும் புள்ளினம் போல
வளமுடன் வாழ மிகுபொருள் நாடி
வையகம் சுற்றிடும் நண்பீர்!
உளங்கொள வேண்டி உமக்கிது புகன்றேன்!
உணருமின் அன்புடன்! நீர்தாம்

அனிச்ச மலர்

நான் கஷ்டப்படும் போது விதிப்பயன் என்று விட்டு விடலாம். என்னுடைய ஒரு துளி கண்ணீரைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் அம்மா எனதாசை அம்மா. எனது முக வேறுபாட்டைக் கண்டவுடன் வாடிடும் அனிச்ச மலரல்லவோ அம்மா எனதாசை அம்மா. தனது உடலைக் கொத்தி தன் இரத்தத்தை உணவாக தன் குஞ்சுகளுக்கு தரும் அன்றில் பறவை போல் Read more

சுண்ணாம்பு

சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம். கோவை எக்ஸ்பிரஸ் புறப்படத் தயாராக இருந்தது. நான் விரைந்தோடி அதில் ஏறினேன். ஏறிய நான், அதன் ஜன்னல் ஓரமாய் இருந்த இருக்கையில் அமர்ந்தேன். சிறிது நொடியில் ஜிகு புகு ஜிகு புகு என்ற கூக்குரலுடன் புகையை எழுப்பி, வண்டி நகர்ந்தது. என்னுடன் பலரும் பயணம் செய்தனர். ஜன்னல் கம்பிகளின் மேல் கையை Read more

வாக்குமூலங்கள்

எங்கள் பண்பாட்டிற்கு ஏற்றபடி சேலை கட்டு. உடம்பு தெரியம்படியான உடைகளை அணியாதே என்றால் ‘நான் விரும்பிய உடையை உடுப்பதற்கும் உரிமையில்லையா?” என்கின்றாள். ‘நீங்கள் சாரம் கட்டுகின்றீர்களே! இது எந்த சமூகத்தின் பண்பாடு” என்று குதர்க்கமாக கேட்கின்றாள்.

வீட்டு வேலைகளில் தனக்கு உதவுவதில்லை என்கின்றாள். எனக்கு உதவியாக இருக்கத்தானே உன்னைத் திருமணம் செய்தேன். நீ உனக்கு உதவிக்கு என்னைக்கூப்பிட்டால்? எனக்குத் தெரியாத வேலைகளை நான் எப்படிச்செய்வது? வீட்டு வேலைகளையெல்லாம் அம்மா எனக்கு பழக்கிவைக்கவில்லையே?

மதமாற்றம் எண்ணங்களின் மாற்றம்

மதத்தைப் பின்பற்றுபவர்கள் பாவம் செய்ய அஞ்சவேண்டும். அடுத்தவனை அடிமைப்படுத்துவதற்குப் பயப்படவேண்டும். அரிவாள், கோடரி, கத்தி, வெடிகுண்டு போன்றவற்றை மனிதர்கள் மேல் பயன்படுத்துவது நரகம் செல்வதற்கான வழி என்று நம்பவேண்டும். நம்பி அவற்றைச் செய்யாமல் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு மனிதனும் சுய விருப்பு வெறுப்புகளோடு பிறந்திருக்கிறான். தன் குடும்ப சமுதாய மற்றும் நாட்டின் பழக்க வழக்கங்களால் தன்னைச் சில நிர்பந்தங்களுக்கு உள்ளாக்கிக்கொள்கிறான். சில நிர்பந்தங்கள் அவனுக்கு மகிழ்வினைத் தருகின்றன. சில நிர்பந்தங்கள் துயரத்தைத் தருகின்றன.